Saturday, June 19, 2010

ஒரு வங்கியின் கதை

1993ல் வங்கியாக தொடங்கப்பட்ட ஐசிஐசிஐ நிறுவனம் அடுத்த 15 ஆண்டுகளில் போட்ட ஆட்டம், மேற்கத்திய நிதி நிறுவனங்கள் கண்டு பிடித்த புதிது புதிதான உத்திகளின் மூலம் மக்களின் உழைப்பை (பணத்தை) சுரண்டி, அந்த நிறுவனங்களின் மேலாளர்களும் பங்குதாரர்களும் பெரும் பணம் எடுத்துக் கொண்ட கதையின் ஒரு சிறு வடிவம்.

இந்திய ஒழுங்கு முறை சட்டங்களுக்குள் பெரிய அளவில் தில்லுமுல்லு செய்ய முடியாமல் தப்பித்து விட்டார்கள்.

பொருளாதார சீட்டு அடுக்கு சரிந்த பிறகான சென்ற ஒன்றரை ஆண்டில் ஐசிஐசிஐ வங்கியில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கி ஜூன் 27 தேதியிட்ட பிஸினஸ் இந்தியா ஆங்கில இதழில் அட்டைப்படக் கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.

அந்தக் கட்டுரையிலிருந்து சில விபரங்கள்:
  • வட்டி வழியாக சம்பாதித்தது, வட்டி அல்லாத வருமானம் இரண்டும் 2009-10ல், 2008-09ஐ விடக் குறைந்து விட்டன.

  • நேரடி விற்பனையாளர்களுக்கு (அதுதான் தெருவெல்லாம் வழி மறித்து கார்டு வித்தாங்களே) செலவழித்த தொகை 2009-10ல் முந்தைய ஆண்டை விட நான்கில் ஒரு பகுதியாகக் குறைக்கப்பட்டது.

  • கடன் கொடுத்த தொகை கிட்டத்தட்ட 15% குறைக்கப்பட்டது. வைப்புத் தொகை 7% குறைந்தது.

  • வாரக்கடன்களின் சதவீதம் கடன் தொகையில் 2.09%லிருந்து 2.12 உயர்ந்தது.
கடனட்டை வியாபாரத்தைப் பற்றி:

ஒரு காலத்தில் குறைந்தது அரை டஜன் கடனட்டை விற்பனையாளர்கள் துரத்தாமல் ஒரு கடைத்தெருவுக்குப் போய் வர முடியாத நிலைமை இருந்தது. உங்களிடம் ஒரு செல்பேசி இருந்தால் கடனட்டை வாங்கும் தகுதி இருப்பதாக எடுத்துக் கொண்டார்கள்.

'இன்றைக்கு மாதத்துக்கு கிட்டத்தட்ட 1000 கடனட்டைகள் வழங்குகிறோம். ஒரு கட்டத்தில் மாதத்துக்கு 2,00,000 அட்டைகள் கூட கொடுத்துக் கொண்டிருந்தோம்.'

சில்லறைக் கடன் (கடனட்டை, தனிநபர் கடன்) கொடுப்பதை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள். மொத்த கடன் தொகையில் 49% ஆக இருந்த சில்லறைக் கடன்களை இப்போது 43.6% ஆக குறைத்திருக்கிறார்கள்.

விற்பனைப் பொருளை மையமாகக் கொண்ட அணுகுமுறையை மாற்றி வாடிக்கையாளரை மையமாக வைத்து சேவை வழங்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

'முன்பெல்லாம் எப்படியாவது புதிய வாடிக்கையாளரைக் கொண்டு வந்து விட வேண்டும் என்பதுதான் மந்திரமாக இருந்தது. இப்போது வாடிக்கையாளர் சேவையில் கவனம் செலுத்துகிறோம்.'

1 comment:

Anand said...

நல்ல தகவல்.