Saturday, April 18, 2009

குளோவியூ

http://kaniporul.blogspot.com/2010/08/blog-post_6044.html

Tuesday, April 14, 2009

உலகப் பொருளாதார நெருக்கடி - 1

இப்போது நாமெல்லாம் சிக்கிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணி என்ன?

கதையை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் தெரியும்.

பணம் என்பது எப்படி ஆரம்பித்தது?

பண்ட மாற்று முறையில் 'நான் உழைத்து செய்த பொருளை உனக்குத் தருகிறேன், நீ உழைத்து செய்த பொருளை எனக்குத் தா' என்று பரிமாறிக் கொண்டார்கள்.

நான் நெசவு செய்து துணி வைத்திருக்கிறேன். நாளைய சாப்பாட்டுக்கு நெல் வாங்கி வர வேண்டும். விவசாயம் செய்யும் நண்பரின் வீட்டுக்குப் போய் துணியைக் கொடுத்து விட்டு தேவையான நெல்லை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.

அவருக்கு இப்போது துணி தேவையில்லை என்றால் எனக்கு நெல் கிடைக்காது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கண்டுபிடித்ததுதான் பணம். துணி விற்று செலாவணியாக பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருளை திரட்டிக் கொள்வேன். நெல் வாங்குவதற்கு அதைக் கொடுத்தால் போதும்.

பண்ட மாற்றும் பரிமாற்றங்களுக்காக பணம் பயன்படுதலும்

தங்கம் பணமாக புழங்க ஆரம்பிக்கிறது. தேவைக்கு மேல் தங்கம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொண்டு வைப்பது போல, ஊரின் பொற்கொல்லரிடம் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அவரிடம் கொண்டு தங்கத்தைக் கொடுத்து ஒரு சீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர் நாணயமானவர். எந்த நேரத்தில் போய் சீட்டைக் காட்டிக் கேட்டாலும் தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அப்படி பாதுகாப்பாக பணத்தை வைத்திருப்பதற்கு கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்கிறார்.

தங்க நகையாக இல்லாமல் நாணயமாக வரும் தங்கத்தை தனித்தனியாக வைத்திருக்கத் தேவையில்லை. எல்லா பணத்தையும் சேர்த்து வைத்து கணக்கை மட்டும் இன்னாருக்கு இவ்வளவு தர வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டால் போதும்.

இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பொற்கொல்லர் கொஞ்ச நாள் போக ஒன்றை கவனிக்கிறார்.

வங்கித் தொழிலின் அடிப்படை

நாட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு அச்சடித்து வெளியிடும் நோட்டுகள் மட்டும் காரணம் இல்லை. பெரும்பாலான பண உருவாக்கம் வர்த்தக வங்கிகள் வைப்புத் தொகை சேகரித்து கடன் கொடுப்பதால் உருவாகிறது.

வங்கிகள் இப்படித்தான் பணப் புழக்கத்தை அதிகரிக்கின்றன.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி. அங்கும் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை பாதுகாப்பான அரசாங்க பத்திரங்கள் வாங்கி வைக்க பயன்படுத்த வேண்டும். மீதிப் பகுதியை கடன் கொடுக்க பயன்படுத்தலாம். கடனட்டைகள் மூலமாக வழங்கப்படும் கடன்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வந்து விடும்.

இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கண்கட்டி விட்டு தமது ஆதாயத்தை உயர்த்த முற்படுபவர்கள் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

விளையாட்டுப் பார்வை அரங்கில் எல்லோரும் உட்கார்ந்திருந்தால் வசதியாக மறைக்காமல் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஒரே ஒருவர் எழுந்து நின்றார் அவருக்கு மட்டும் ஆதாயம். விளையாட்டு நன்றாக தெரியும். அவரைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், கடைசியில் எல்லோரும் நின்று கொண்டே பார்த்தும் எல்லோரும் இருந்து பார்க்கும் அளவுக்குத்தான் விளையாட்டுத் தெரியும். கூடவே கால் வலிதான் மிஞ்சும்.

அது போல கண்காணிப்பு நிறுவனங்களின் நெறிமுறைகளை ஒரு வங்கி தவிர்க்க முயன்று வெற்றி பெற்று விட்டால் அந்த வங்கியின் ஆதாய வீதம் மளமளவென்று ஏறும். அதில் வேலை பார்க்கும் மேலாளர்களுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அவர்களுடன் போட்டி போட்டு ஒவ்வொருவராக அந்த வழிகளை கண்டு கொண்டு தாமும் சுற்றிப் போக ஆரம்பிப்பார்கள். கடைசியில் மொத்த அமைப்பும் குலைந்து போவதுதான் நடக்கும்.

Sunday, April 12, 2009

கூட்டுறவும் முதலாளித்துவமும்

ஒரு நிறுவனத்தில் விற்பனை மதிப்பிலிருந்து எல்லா இடுபொருட்களின் விலையை கழித்தால் கிடைப்பது நிறுவனம் கூட்டிய மதிப்பு. அந்த மதிப்பில் ஒரு பகுதி வேலை செய்தவர்களுக்கு ஊதியமாகவும், ஒரு பகுதி அரசாங்கம் செய்து கொடுத்த வசதிகளுக்கு வரியாகவும், கடைசி பகுதி முதலீடு செய்தவர்களுக்கு ஆதாயமாகவும் போக வேண்டும்.

ஒரு வகை நிறுவனம்
10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் பத்தாயிரம் (1%) ரூபாய் சம்பள செலவு, மீதியில் அரசு நிர்ணயித்த வீதத்தில் வரி கட்டி கிட்டத்தட்ட 6 முதல் 7 லட்ச ரூபாய் ஆதாயமாக எடுத்துப் போவது முதலாளித்துவ நடைமுறை. மதிப்பு கூடுதல் பாதியாக குறைந்து 5 லட்சம் ஆகி விட்டாலும் சம்பளம் கொடுக்கப்படும், அரசுக்கு வரி தொகை குறையும், முதலாளியின் ஆதாயமும் குறையும். இப்படி குறைந்து போகும் மதிப்பு கூடுதலை சரிகட்ட எதிர்பார்த்த அளவு செயல்படாத ஊழியர்களை பணி நிறுத்தம் செய்து விடுவார்கள். சம்பளச் செலவு 7000 முதல் 8000 ஆக குறைந்து போகலாம்.

கூடுதல் மதிப்பு 3 லட்சம் அல்லது 2 லட்சம் என்று ஆகி விடும் நிலைமை வருவதற்கு முன்னால் நிறுவனமே இழுத்து மூடப்பட்டு விடும்.

இப்படி இருக்கும் நிறுவனம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி கடவுளாக மதிக்கப்படுவார். அவர் சொல்வதுதான் வேத வாக்கு. அவரது ஒரு சொல்லின் மூலம் பணி புரியும் ஊழியரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடலாம்.
  2. 'உன்னிடம் சொன்ன வேலையை செய், கேள்விகள் கேட்பதை மறந்து விடு. மாதா மாதம் சம்பளம் கிடைக்கிறது அல்லவா. முதலாளிக்குத் தெரியும் என்ன நடக்கிறது என்று'. வேலை செய்பவர்களின் மனத் திறமையில் பெரும்பகுதி அடைபட்டுப் போய் விடும்.
  3. ஒன்றாம் தேதி ஆனால் சம்பளப் பணம் கையில் வந்து விட வேண்டும்.
  4. 'விருப்பம் இருக்கும் வரை வேலை செய். இன்னொரு நிறுவனத்தில் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் தருகிறார்கள் என்றால் விட்டு விட்டுப் போய் விடு'.
இன்னொரு வகை நிறுவனம்

10 லட்ச ரூபாய் மதிப்பு கூடுதல் கிடைத்தால் ஒன்பதரை லட்ச ரூபாய் (95%) சம்பளம், அரசுக்கு வரி கட்டுவதற்கு எதுவும் மிஞ்சாமல், முதலீட்டுக்கு ஆதாயமும் கிடைக்காமல் போகிறது.

மதிப்பு கூடுதல் 15 லட்சமாக அதிகரிக்கும் போது சம்பளம் கொடுப்பதும் 14 லட்சமாக அதிகரிக்கிறது. இப்படியே அதிகரித்து மதிப்பு கூடுதல் 1.5 கோடி ரூபாய் ஆகும் போது சம்பளம் 1.3 கோடி கொடுத்து மீதி இருப்பதில் வரியும் ஆதாயமும் பார்த்துக் கொள்ளலாம் என்று நிறுவனம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இங்கு நிலவரம் எப்படி இருக்கும்?
  1. முதலாளி மனிதராக மதிக்கப்படுவார். அவரை போல நல்லவர் கிடையாதுங்க. எல்லோருக்கும் எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்கிறார். உடன் பணி புரிபவர்களை இயந்திரங்கள் போல நடத்தாமல் அவர்களையும் தொழிலை புரிந்து அதில் தமது பணியை செய்ய ஊக்குவிக்கிறார்.
  2. 'நிறுவனத்தில் என்ன வருமானம் வருகிறது, என்ன செலவாகிறது என்று உனக்குத் தெரியும். வருமானம் வருவது குறைந்தால் நம் எல்லோருக்கும் பாதிப்பு உண்டு வருமானம் வருவது அதிகமானால் எல்லோருக்கும் நல்லது'. வேலை செய்பவர்களின் மனத் திறமைக்கு சவால்.
  3. சம்பளம் கிடைப்பது நிறுவனத்தின் மாதாந்திர வெற்றி தோல்வியைப் பொறுத்தது. எல்லோரும் நிறை குறைகளை விவாதித்து குறைகளை களைந்து சரியான வழி வகுத்து நிறுவனம் முன்னேற முயற்சிப்பார்கள்.
  4. ஒவ்வொரு ஊழியரும் ஒரு தொழில் முனைவராக செயல்பட்டு நிறுவனத்தை வெற்றிப் பாதையில் வழிநடத்துவார்கள். கூடுதல் வருமானம் தேவைப்பட்டால் நிறுவனத்தின் வருமானத்தை இப்படி பெருக்கினால் நான் அதில் X சதவீதத்தை ஊதியமாக கேட்டுப் பெறலாம். எதற்கு வேறு இடத்தைப் பார்க்கப் போக வேண்டும்.
இவ்வகை நிறுவனம் செயல்பட சாத்தியங்கள் உண்டா?

தொழில் முனைவு

எங்கள் கல்லூரி வகுப்புத் தோழன் படித்து முடித்ததும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தோல் பிரிவில் வேலைக்கு சேர்ந்தான். அவனது அப்பா ஒரு தொழிலதிபர். கட்டிடத் துறையில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

ஓரிரு ஆண்டுகள் வேலை செய்த பிறகு, 'எதுக்கு இன்னொருத்தருக்காக நாம இவ்வளவு உழைக்கணும். நாமே சொந்தமா தொழில் செய்யலாம்' என்று நண்பனுக்குத் தோன்றி விட்டது.

தோல் துறையில் பட்டம் பெற்ற எல்லோருக்குமே, 'ஒரு இடத்தில் ஆர்டர் வாங்கி, அதை வைத்து மூலப் பொருட்களை கடனுக்கு வாங்கி, தோல் செய்து கொடுத்து, வரும் பணத்திலிருந்து வாங்கியவற்றுக்குப் பணத்தை அடைத்து மீதியை நமது ஆதாயமாக வைத்துக் கொள்ளலாம்' என்ற அடிப்படையிலான ஜாப்வொர்க் எனப்படும் முறையின் மீது ஒரு நப்பாசை உண்டு.

அதற்கு பெரிய அளவில் முதலீடு எதுவும் தேவையில்லை.
  • என்ன மாதிரியான தோல் செய்ய வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற அறிவு தேவை. அது இருக்கிறது.
  • 'எங்கு உள்ளீடு தோல் வாங்க வேண்டும், எங்கு வேதிப் பொருட்கள் வாங்க வேண்டும் எப்படி கடனுக்கு வாங்க வேண்டும்' என் அனுபவம் தேவை. அது ஓரிரு ஆண்டுகள் பணி புரிந்ததில் தெரிந்து போயிருக்கும்.
'அப்பா இவ்வளவு பணக்காரராக இருக்கும் போது நாம் எதற்கு அந்த வழியில் கஷ்டப்பட வேண்டும்' என்று நினைத்து பணித் திட்டம் ஒன்று தயாரித்து இத்தனை கோடி முதலீடு வேண்டும் என்று அப்பாவிடம் கேட்டானாம்.

'இப்போ உனக்கு மாசச் சம்பளம் எவ்வளவு?'

'மாசம் 15,000 ரூபாய்'

'கையில் சேமிப்பு எவ்வளவு இருக்கு? இரண்டு வருஷம் சம்பளம் வாங்கியிருக்கிறாய் அல்லவா!'

'ஐம்பதாயிரம் ரூபாய்'

'அப்படியா!!!. சரி அதற்குக் கூட நான் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். அந்த 1 லட்ச ரூபாய் முதலீட்டை வைத்துக் கொண்டு மாதா மாதம் 15,000 ரூபாய் ஆதாயம் சம்பாதித்துக் காட்டு. அதன் பிறகு கோடிக் கணக்கான முதலீட்டைப் பற்றி யோசிக்கலாம்'.

அப்படி ஆரம்பித்தது அவனது தொழில் முனைவு. இன்றைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனங்களை நடத்தி வருகிறான். அப்பாவின் காலத்துக்குப் பிறகும் அவர் கற்றுக் கொடுத்த ஆரம்ப பாடங்களை பின்பற்றி வளர்ந்து கொண்டிருக்கிறான்.

Tuesday, April 7, 2009

கற்றதும் பெற்றதும்

எழுத்தில் தெரிந்தோ தெரியாமலோ பல விஷயங்களை சுஜாதாவிடமிருந்துதான் பெற்றிருக்கிறோம். இப்போது அவரது புகழ் பெற்ற தலைப்புகளில் ஒன்றை கொஞ்சம் இரவலாக வாங்கிக் கொள்வோம். (இந்த இடுகைக்கு மட்டும்)

1. 'நான் படிச்ச ஸ்கூலில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். நிறுவனத்தில் எப்படி வேலைகளை கண்காணிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். எங்க ஸ்கூல் முதல்வர் ஒவ்வொரு வாரமும் பள்ளியில் படிக்கும் எல்லா மாணவர்களின் குறிப்பேட்டில் கையெழுத்து போடுவார். குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் பொருளடக்க அட்டவணை இருக்கும். வரிசை எண், பாடத்தின் பெயர், ஆசிரியர் கையொப்பம், கடைசி நெடுவரியாக முதல்வர் கையெழுத்து போடும் இடம் இருக்கும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் குறிப்பேட்டை பார்த்து கையெழுத்து போடுவாங்க அவங்க!'

இது எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மாணவர்கள் மீது. முதல்வர் அம்மா எல்லா பாடங்களையும் படிக்கிறாரோ இல்லையோ, நமது குறிப்பேட்டை அவர் ஒவ்வொரு வாரமும் புரட்டுகிறார் என்ற எண்ணமே மாணவர்களுக்கும் அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பெரியதொரு விழிப்புணர்வைக் கொடுத்திருக்கும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறிப்பேடுகளில் சில பத்துகளை படித்துப் பார்த்து குறிப்பிட்ட மாணவர், ஆசிரியரிடம் அதைப்பற்றி கேள்வி கேட்கவும் செய்து விட்டால் இது இன்னும் சக்தி வாய்ந்ததாகி இருக்கும்.

நிறுவனத்தை நடத்தும் போது எல்லா இடங்களிலும் தலைமையின் பார்வை விழுந்து கொண்டே இருக்க வேண்டும். என்னதான் வேலையை பகிர்ந்து கொடுத்தாலும் தொடர்ந்த கண்காணிப்பு இருந்தால்தான் விழிப்புணர்வு உருவாகும்.

2. 'ஒரு நிறுவனத்தில் ஒவ்வொருவரும் குறைந்தது 40% திறனுடன் வேலை பார்த்தால் நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைத்து விடும். அப்படி கிடைக்கவில்லை என்றார் 40% திறன் கூட வெளியாகவில்லை என்று பொருள்'

புகழ் பெற்ற நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் குழுமத்தின் நிறுவனம் ஒன்றுக்குப் போய் விட்டு வந்தோம். அங்கு பணி புரிபவர்கள் தமது வேலைகளை செய்து வருகிறார்கள். அலுவலகத்துக்குக் கிளம்பி வருவது, காபி குடிப்பது, மதியம் சாப்பிடுவது, மாலையில் வேலை முடித்து வீட்டுக்கு ஓடுவது என்று வேலையைத் தவிர்த்து புற உணர்வுகள் அவர்களில் நிரம்பி இருக்கின்றன.

வேலை வேலை என்று 24 மணி நேரமும் ஜெபித்துக் கொண்டிருக்கும் சிறு நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கும் வேளையில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறது. நிறைய பணம் சம்பாதித்துக் கொடுக்கிறது. எப்படி நடக்கிறது?

அமைப்பு முறைகள்தான். தனிநபர்களின் திறமைகள் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கலாம். அது எல்லா இடங்களிலும் நடப்பதுதான். வெற்றிகரமான நிறுவனங்களில் நன்கு சிந்தித்துத் திட்டமிடப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு செயலையும் எப்படி செய்ய வேண்டும் என்று வகுத்திருக்கிறார்கள். அதை அப்படி செய்வதற்கு போதிய பயிற்சி அளிக்கிறார்கள். அவை அப்படித்தான் நடைபெறுகின்றனவா என்று சரிபார்ப்பதற்கும் மேலாளர்களுக்கு பொறுப்பு. அதை மாதா மாதம் கண்காணிப்பதற்கு உள்ளுறை தணிக்கைக் குழு. ஆண்டு தோறும் பரிசீலிப்பதற்கு வெளியிலிருந்து வரும் தணிக்கைக் குழு.

இது இப்படியே ஓடிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நமது வழிமுறைகள் வகுக்கப்பட்ட காலமும் புறச்சூழல்களும் மாறும் போது வழிமுறைகள் மறு வடிவமைக்கப்பட வேண்டும். அதற்காக புதிது புதிதான முன்முயற்சிகளை செயல்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

ஐஎஸ்ஓ தரக்கட்டுப்பாட்டு முறை செயல்படுத்த ஆரம்பிப்பார்கள். அதை சாதித்தவுடன் அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று வடிவமைத்த தர மேம்பாட்டு முறை ஒன்றை பின்பற்ற முடிவு செய்வார்கள். இன்னொரு கட்டத்தில் புதிய கணினி வழி செயல்படும் முறையில் முதலீடு செய்வார்கள்.

தனி வாழ்க்கையிலும் சரி, நிறுவனத்திலும் சரி - எதுவுமே இரண்டு முறை உருவாக்கப்பட்டு நடக்க வேண்டும். வீடு கட்ட வேண்டுமானால் முதலில் தாளில் வடிவமைப்பை வரைந்து, திட்டம் போட்ட பிறகுதான் அடிக்கல் நாட்ட வேண்டும். கட்ட கட்ட யோசித்துக் கொள்ளலாம் என்று நினைப்பது மனச் சோம்பலுக்கு அடையாளம்.

செய்ய வேண்டியதைக் குறித்து முழுமையாக சிந்தித்து முடித்து விடுவது எல்லோராலும் செய்ய முடிவது. ஆனால் பலரால் செய்யப்படாதது. அப்படி செய்பவர்களுக்கும் செய்யாதவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் வெற்றியும் தோல்வியும்.