Tuesday, March 4, 2008

வளத்தை உருவாக்குவோம்

உடலுழைப்புடன் மூலதனம் சேரும் போது உற்பத்தித் திறன் அதிகமாகி தொழிலாளியின் வருமானம் பல மடங்காக உயரும். கணினியைப் பயன்படுத்தி, இணையத்தின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்வதும் அது போன்று மூலதனம் மூலம் திறனை அதிகமாக்கிக் கொள்வதுதான்.

ஒரு தனிமனிதர் அல்லது நிறுவனம் மூலதனம் இல்லாமல் செயல்பட்டால், திறன் குறைந்த கருவிகளை மட்டுமே பயன்படுத்த முடியும். அதில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாகவே இருக்கும்

தமிழர்களிடையே மூலதனம் எப்படி உருவாகிறது, எங்கு பயன்படுகிறது என்று பார்ப்போம்? மூலதனத்தின் அடிப்படை சேமிப்புதான். ஒருவர் உழைத்து சம்பாதித்த பொருளை உடனடி நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் சேமிக்க ஆரம்பிக்கும் போது மூலதனம் உருவாகிறது.

1. அதை வங்கியில் போட்டு வைத்தால், வங்கி தேவைப்படும் தொழில் முனைவோருக்கு அல்லது கடன் வாங்கும் தனிநபருக்கு அளிக்கிறது.
2. மும்பை பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை ஏறி, அந்த நிறுனத்தின் தேவைக்கு அதிக மூலதனம் கிடைக்கிறது.
3. தங்கம் வாங்கினால், அதை விற்கும் மும்பை வணிகர்கள், தங்கச் சுரங்க உரிமையாளர்களிடம் நமது மூலதனம் போய்ச் சேருகிறது.

குஜராத்தில் ஒரு இளைஞர் புதிய தொழில் நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு முதலீடு எங்கிருந்து கிடைக்கும்?

தமிழகத்தில் ஒருவர் புதிய நிறுவனம் தொடங்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு?

கையிலிருக்கும் சேமிப்பைப் பயன்படுத்தி 100 கிராம் தங்கம் வாங்கி வைத்து விட்டீர்கள்.

உங்கள் நட்பு, அல்லது உறவினர் ஒருவர் மளிகைக் கடை நடத்துகிறார். அவருக்கு அந்த 1 லட்சம் ரூபாய்களை மூலதனமாகக் கொடுக்க நீங்களும் அதைப் பயன்படுத்து அவரும் தயாராக இருந்தால், கடைக்குத் தேவையான நவீன கருவி ஒன்றை வாங்கி கடையில் வேலை செய்பவர்களின் திறனை அதிகரிக்கலாம். அந்த அதிகரிப்பின் மூலம் வரும் ஆதாயத்தின் மூலம் உங்கள் முதலீட்டை வட்டியுடன் திருப்பவோ, அல்லது ஆதாயத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை ஆண்டு தோறும் தரவோ செய்யலாம்.

தமிழகத்தில் சேமிப்பை மூலதனமாக மாற்றி தொழில் முனைவோருக்கு அளிக்க வங்கிக் கட்டமைப்புகளும் இல்லை, பங்குச் சந்தைகளும் இல்லை, சமூக அமைப்புகளும் இல்லை. இருக்கும் பணத்தையும் மும்பை பங்குச் சந்தைக்கு எடுத்துச் செல்வதில் ஊடகங்கள் தீவிரமாக இருக்கின்றன.

No comments: