Tuesday, September 23, 2008

செலாவணி பரிமாற்ற தெரிவு ஒப்பந்தம்

பணம் வருவது உறுதியாக இருந்தால் முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பணம் வருவது உறுதியில்லாமல் இருந்தால் என்ன செயவது?

ஒரு ஏற்றுமதியாளர் 3 மாதங்களுக்குள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை (10000 டாலர்) டாலர்களில் பெறுவதாக எதிர்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்றுமதிக்கான உடன்பாடு இவருக்குக் கிடைப்பது 2 மாதம் கழித்துதான் உறுதியாகும். இன்றைக்கு உடன்பாட்டுக்கான விலையை அனுப்பி வைக்க வேண்டும்.

உள்ளூர் சந்தையில் முந்திரிப் பருப்பை ரூபாய்க்கு வாங்கி டாலருக்கு விற்க வேண்டும். இன்று 1 டாலர் = 46 ரூபாய்கள் செலாவணி வீதம் என்ற கணக்கில் விலை நிர்ணயிக்கிறார். இந்த ஆர்டர் கிடைத்து ஏற்றுமதி செய்து விட்டால் வருமானம் வரும், டாலரை 46 ரூபாய் வீதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆர்டர் கிடைக்கா விட்டால், மாற்றுவதற்கு டாலர் இருக்காது.

இந்த நிலையில் Forward ஒப்பந்தம் என்ற முன்பேர ஒப்பந்தம் சரிப்படாது. ஆர்டர் கிடைக்காமல் போய், டாலரின் மதிப்பு ஏறி விட்டால், (1 டாலர் = 50 ரூபாய்) இவர் ஒப்பந்தப்படி 10000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய் என்ற வீதத்தில் விற்றே தீர வேண்டும். அதற்கு சந்தையில் 50 ரூபாய் வீதத்தில் டாலர் வாங்கி 46 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும்.

Options எனப்படும் தெரிவு ஒப்பந்தத்தில் விருப்பப்பட்டால் விற்கலாம் என்ற தெரிவு இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் 10000 டாலர்களை விற்கும் தெரிவு, ஒப்பந்ததாரருக்குக் கிடைக்கிறது. அவர் விரும்பா விட்டால் விற்காமல் இருந்து விடலாம்.

இந்த தெரிவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான கட்டணங்கள் முன்பேர ஒப்பந்தங்களை விட அதிகமாக இருக்கும்.

1 comment:

butterfly Surya said...

பயனுள்ள தகவல்கள்

நிறைய எழுதவும்

வாழ்த்துக்கள்
சூர்யா
சென்னை
butterflysurya@gmail.com