ஜோயல் ஆன் சாஃப்ட் வேர் ஜோயல் ஏதோ தொழில்நுட்பக் கருத்தரங்கு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடத்தப் போகிறாராம். அதில் கலந்து கொள்ள கட்டணம் $99 டாலர்கள் தலைக்கு. எல்லா நகரங்களிலும் பேசப் போகிறவர் ஜோயல். அவர் பேசப் போவது அவர்கள் நிறுவனம் தயாரித்து விற்கும் FogBugz என்ற மென்பொருள் பயன்படுத்துவதைக் குறித்து. அதைத் தவிர மற்ற பேச்சாளர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் குறித்துப் பேசுவார்கள்.
http://joelonsoftware.com/items/2009/05/12.html
10 ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதிய புகழை வைத்துக் கொண்டு அரித்துக் கொட்டுகிறார். அவரது மென்பொருளைப் பற்றிக் கேட்பதற்கு கட்டணம் கட்டி வரும்படி மற்றவர்களை தூண்டும் அளவுக்கு செல்வாக்கு ஈட்டியிருக்கிறார். இவர் எழுதுவது எல்லாம் பலனுள்ள தகவல்களை தரும். இவர் பேசும் போது அவரது நிறுவன மென்பொருளை அடிப்படையாக வைத்திருந்தாலும், அதிலிருந்து உருப்படியாக பலவற்றைக் கற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார். அதனால்தான் $99 டாலர் கட்டி அவர்களது கருத்தரங்குக்கு வரும்படி மக்களை வரவேற்கிறார்.
அதுவும் எப்படி, முதலில் கருத்தரங்கு எந்த மாதிரி இருக்கும். எப்படிப்பட்ட பேச்சுக்கள் இருக்கும். எந்த மாதிரி பேச்சாளர்கள் வருவார்கள் என்று சொல்லி விட்டு, அதை ஏற்பாடு செய்ய எவ்வளவு செலவாகும் என்று ஒரு கணக்கு. ஆயிரக்கணக்கான டாலர்கள் கட்டணம் என்றால் இந்தப் பொருளாதாரச் சுணக்கத்தில் யாரும் வரப் போவதில்லை. அதனால் உங்களுக்காக $99 டாலரில் இதை ஏற்பாடு செய்கிறோம்.
கொஞ்சம் கீழே சாப்பாடு குறித்து சொல்கிறார். இந்த $99 டாலரில் சாப்பாடும், பானங்களும் அடங்கும். படிப்பவரின் மனதத்துவத்தை நன்கு புரிந்து கொண்டு எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் அவர் சம்பாதித்து வைத்திருக்கும் நல்லெண்ணத்தை அடிப்படையாக தொடங்கி, முதலில் பலன்கள். அதன் பிறகு அதற்கு ஆகக் கூடிய செலவுகள் என்று ஒரு பெரிய தொகை, அதைத் தொடர்ந்து குறைந்த செலவிலேயே எப்படி கலந்து கொள்ளலாம் என்று குறிப்பு, தொடர்ந்து அந்த கட்டணத்துக்கே இன்னும் என்ன கிடைக்கிறது என்ற விபரங்கள். இறுதியாக 300 பேருக்கான இடங்கள் சீக்கிரம் நிரம்பி விடும். முந்துங்கள் என்று சொல்லும் வாக்கியங்கள்.
ஒரு விற்பனை ஆவணம் இப்படித்தான் இருக்க வேண்டும். நமது தகுதியை முதலில் குறிப்பிட வேண்டும். நாம் சொல்வதை ஏன் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நிறுவி விட்டு, என்னென்ன ஆதாயங்கள் கிடைக்கும் என்று சொல்ல வேண்டும். அந்த ஆதாயத்தைப் பெறுவதற்கு பொதுவாக என்னென்ன செலவாகும் என்று சொல்ல வேண்டும். நாம் அதே பணிகளை அந்த செலவில் நான்கில் ஒரு பங்கில் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதைத் தொடர்ந்து நமது சேவையில் கூடுதல் என்னென்ன நன்மைகள். இறுதியாக கொஞ்சம் பிகு செய்து கொள்ள வேண்டும். படிப்பவர் இதை வாங்கா விட்டால் நாம் எதையோ தவற விட்டு விடுவோம் என்று நினைக்கும் படி இருக்க வேண்டும்.
வளத்தைச் சேர்க்கும் பாதையில் நடக்கும் அனுபவங்கள் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில்
Showing posts with label விற்பனை. Show all posts
Showing posts with label விற்பனை. Show all posts
Friday, May 15, 2009
Sunday, February 8, 2009
அகில உலக தோல் கண்காட்சி
ஞாயிற்றுக் கிழமை கண்காட்சிக்குப் போக வேண்டும். 8 மணி வாக்கில் அலுவலகம். இட்லி சாப்பிட்டு விட்டு கண்காட்சியில் செய்ய வேண்டிய பணி விபரங்களைத் திட்டமிட்டு விட்டுப் புறப்பட்டோம்.
மூன்று நாட்களும் அலுவலகத்திலிருந்து கண்காட்சிக்குப் போய் வருவதற்காக வண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். சரியாக ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நுழைவாயிலில் ஆயுதங்கள் சோதனை செய்யும் ஆட்களும் கருவிகளும் வைத்திருந்தார்கள். நீண்ட காத்திருப்போர் வரிசை. அதிகம் நேரம் தாழ்த்தாமல் உள்ளே போய் விட்டோம்.
நமது அரங்கில் சுவரில் ஒட்டும் வண்டக் காட்சிகள் செய்து முடித்திருந்தார்கள். விளக்கக் காட்சிப் படம் காண்பிப்பதற்கான திரை கொண்டு வந்து பொருத்திக் கொண்டிருந்தார்கள். மேசைகளை மாற்றி அமைத்து இருக்கும் ஒன்பது சதுர மீட்டர் இடத்தில் எப்படி நாற்காலிகளையும், மேசைகளையும் பொருத்துவது என்று அமைத்து முடித்தோம். எனது மடிக்கணினியை இணைத்து இயக்கினால் திரையில் கணினி பணிமேசை தெரிய ஆரம்பித்து விட்டது.
வருபவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை பதிவு செய்ய இன்னொரு மடிக்கணினியை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அரங்க வரவேற்புப் பணியை ஒப்படைக்கத் திட்டமிட்டு செய்து கொண்டிருந்தார். போக்குவரத்து, உணவு ஏற்பாடு, அரங்க நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்டிருந்தார். காட்சிப் படங்களுக்கான கோப்புகள், நேரங்கள், பார்வையாளர்களை வர வைப்பது என்று பொறுப்பு ஏற்றிருந்தார். குளோவியூ, வணிக வாய்ப்புகள்.
காலையிலேயே வந்து அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். 11.30க்கு முதல் காட்சிப்படம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். நமது நல்ல நேரமும் முயற்சிகளும் சேர்ந்து முக்கியமான இடத்தில் கடைக்கு நேரெதிரில் நமக்கு வாய்த்திருந்தது. இதே பகுதியில் பெரிய நிறுவனங்களின் கடைகளும் அமைந்திருந்தன. எதிர் கடைக்கு வந்ததும், அவரை அழைத்து 11.30க்கு காட்சிப்படத்துக்கு உட்கார வைத்தோம்.
காலையில் போய் அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தவர்களும் சில நிமிடங்களுக்குப் பிறகு சேர்ந்து கொண்டார்கள்.
மென்பொருள் உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்கள், வாடிக்கையாளரின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு செயல்படும் முறை, அதில் இருக்கும் நுணுக்கங்கள், தொடர்ச்சியான முதலீட்டுத் தேவை என்று சொன்ன கருத்துக்கள் நன்கு ஈர்த்தன. குறிப்பாக படங்களும், சித்திர துணுக்குகளும் அவரது கவனத்தை கவர்ந்தன. அவருக்குக் காட்டும் அறிக்கைகளிலும் அப்படி விபரங்களைப் புகுத்த வேண்டும்.
அடுத்த நாள் சொன்னது போல அவர் மங்களகரமாக ஆரம்பித்து வைத்த நிகழ்வுகள் நன்கு போக ஆரம்பித்தன. கணினித் துறை மேலாளர் என்று ஒருவர் வந்தார். அவருக்கு நம்மிடம் இருக்கும் மென்பொருள் வசதிகளைக் காட்டி விட்டு காட்சிப்படத்தையும் விளக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் நாங்கள் சாப்பிட்டு விட்டுத் திரும்பி விட்டோம். அது வரை உட்கார்ந்திருந்து எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டு போனார்.
மதியத்துக்கு மேல் இன்னொரு நிறுவனத்திலிருந்து ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த மேலாளர்கள் வந்தார்கள். அவர்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். மதிய காட்சி விளக்கத்துக்கு இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து வந்தேன். அதைத் தொடர்ந்து கடைக்குப் போய் அழைத்து வந்தேன். பார்த்து கைகுலுக்கி விட்டு வந்தேன். அவருடன் இருக்கும் பிணக்கைக் குறித்துப் பேச முடியாமல் விட்டு விட்டேன். அப்போது பேசியிருந்தால் நல்ல பலனளித்திருக்கும்.
நிறைய நண்பர்களும் வந்தார்கள். நமது கடை எப்போதுமே கலகலவென்று ஆட்கள் கூட்டம் கூடியவாறு காட்சியளித்தது. எதிர் கடையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கும். இரண்டாவது நாள் வந்தவர், மூன்றாவது நாள் வந்தவர், இரண்டாவது நாள் எட்டிப் பார்த்தவர் என்று எல்லோருக்குமே நம்மைப் பற்றிய மதிப்பீடு அதிகரித்திருக்கும். இரண்டாவது நாள் மதியம் நான் யாருக்கோ விளக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கும் போது கடந்து போனாள். ஆர்வம் பொங்கும் கண்களால் கடையைத் துளாவி விட்டுப் போனாள்.
முதல் நாள் மாலையில் கடையை மூடி அலுவலகம் திரும்பும் போது நிறைவாக இருந்தது. சூட்டோடு சூட்டாக முதல் நாள் நிகழ்வுகளைக் குறித்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.
இரண்டாவது நாள் திங்கள் கிழமை. அலுவலகத்துக்குப் போய் என்னென்ன வாடிக்கையாளரை எப்படி அணுகலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். நான் சொன்னது போல மின்னஞ்சல்களை அனுப்பி விட்டுப் போயிருந்திருக்கலாம். அந்த வாய்ப்பைத் தவற விட்டோம். மற்ற நிறுவனங்களை அவர்களது கடைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போய் யாரையும் உருப்படியாகச் சந்திக்க முடியவில்லை. 11.30க்கு நம்ம ஆட்களுக்கே ஆரம்பித்தோம்.
என்னுடைய விளக்கப்படத்தில் பெயர் போட்ட திரைக்காட்சி இருந்தது. காலையில் அதை மாற்றியிருந்தது சரியாக சேமிக்கப்படாமல் சொதப்பியிருந்தேன். அதிலேயே எனக்குப் பாதி உயிர் போய் விட்டது.
அதற்குள் மதிய உணவு வேளை வந்து விட்டது. சாப்பிட்டு விட்டு வந்த பிறகு மேலும் நிறைய பேர் வர ஆரம்பித்தார்கள். காலையில் அழைத்து வந்து காட்டியிருந்ததைத் தொடர்ந்து அவரது நிறுவனத்தின் ஒரு இளம்பெண் வந்தார். அவருக்கும் வேதிப் பொருள் வாங்கி விற்பது குறித்த மென்பொருள் காண்பித்தோம்.
மூத்த துறை வல்லுனர் ஒருவர் வந்து பார்த்து விட்டு விற்பனையில் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களித்து விட்டுப் போனார்.
மூன்றாவது நாள் அலுவலகத்துக்கு நடந்து போய்ச் சேரும் போது எட்டரை மணி. யாராவது ஒருவர் போனால் போதுமா என்று கேட்டால் மறுத்து இரண்டு பேரும் போக வேண்டும் என்று சொன்னார். நல்லதாகத்தான் போனது. அலுவலகத்தில் எல்லாவற்றையும் பணி இயல்புக்கு கொண்டு வந்து விட்டார். 10 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்தோம். பார்வையாளர்கள் யாருமே வரவில்லை. காலையில் நண்பன் வந்தான். அவனை அதட்டி மிரட்டி உதவி கேட்டேன். அவனா செய்வான்!
சாப்பிடப் போயிருக்கும் போது வந்திருந்தவரைப் பிடித்து காட்சிப் படத்தைக் காண்பித்தேன். அப்போதும் அதன் பிறகும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். முதல் நாளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒருவர் தோல் பொருட்கள் தொழில் செய்பவர் வந்தது போல, கிண்டியில் தோல் பொருட்கள் செய்யும் தொழில் செய்பவர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார். முகவர் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியினர் வரவும் அவர்களுக்கு பேசினேன். அத்தோடு கிட்டத்தட்ட நிகழ்ச்சிகள் முடிந்து போயின.
பக்கத்து கடைகளில் பொருட்களை நீக்கி பொதிந்து கொண்டிருந்தார்கள். ஆணி அடிக்கும் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. நாங்களும் கடையை ஒதுக்கி விட்டுப் புறப்பட்டோம். நான் முன்னிருக்கையில் உட்கார்ந்து அலுவலகம் வந்து சேர்ந்தோம்.
இப்போதைய வாடிக்கையாளர்களுக்கு 'இரண்டு மூன்று பேர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடும் வேலை இல்லை. பெரிய குழுவாக, நிறுவனமாக செயல்படுகிறார்கள்' என்பதைத் தெரிய வைத்தது. விட்டுச் சென்று விட்டவர்களுக்கும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவான துறை நண்பர்களுக்கு நாம் இருப்பதை உரக்க அறிய வைத்தது. 60க்கும் மேற்பட்ட வருகையாளர்களில் 20 வரை திடமான வாய்ப்புகளுக்கான கதவு திறந்திருக்கிறது.
அடுத்த 10 நாட்களில் எல்லா வாய்ப்புகளையும் பின்தொடர்ந்து போய் திட்டப் பணிகளாக உருவாக்க வேண்டும்.
மூன்று நாட்களும் அலுவலகத்திலிருந்து கண்காட்சிக்குப் போய் வருவதற்காக வண்டி ஏற்பாடு செய்திருந்தார்கள். சரியாக ஒன்பது மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். நுழைவாயிலில் ஆயுதங்கள் சோதனை செய்யும் ஆட்களும் கருவிகளும் வைத்திருந்தார்கள். நீண்ட காத்திருப்போர் வரிசை. அதிகம் நேரம் தாழ்த்தாமல் உள்ளே போய் விட்டோம்.
நமது அரங்கில் சுவரில் ஒட்டும் வண்டக் காட்சிகள் செய்து முடித்திருந்தார்கள். விளக்கக் காட்சிப் படம் காண்பிப்பதற்கான திரை கொண்டு வந்து பொருத்திக் கொண்டிருந்தார்கள். மேசைகளை மாற்றி அமைத்து இருக்கும் ஒன்பது சதுர மீட்டர் இடத்தில் எப்படி நாற்காலிகளையும், மேசைகளையும் பொருத்துவது என்று அமைத்து முடித்தோம். எனது மடிக்கணினியை இணைத்து இயக்கினால் திரையில் கணினி பணிமேசை தெரிய ஆரம்பித்து விட்டது.
வருபவர்களின் பெயர் மற்றும் தொடர்பு விபரங்களை பதிவு செய்ய இன்னொரு மடிக்கணினியை அமைத்துக் கொண்டிருந்தார்கள். அரங்க வரவேற்புப் பணியை ஒப்படைக்கத் திட்டமிட்டு செய்து கொண்டிருந்தார். போக்குவரத்து, உணவு ஏற்பாடு, அரங்க நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்டிருந்தார். காட்சிப் படங்களுக்கான கோப்புகள், நேரங்கள், பார்வையாளர்களை வர வைப்பது என்று பொறுப்பு ஏற்றிருந்தார். குளோவியூ, வணிக வாய்ப்புகள்.
காலையிலேயே வந்து அலுவலகத்தில் பொறுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். 11.30க்கு முதல் காட்சிப்படம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். நமது நல்ல நேரமும் முயற்சிகளும் சேர்ந்து முக்கியமான இடத்தில் கடைக்கு நேரெதிரில் நமக்கு வாய்த்திருந்தது. இதே பகுதியில் பெரிய நிறுவனங்களின் கடைகளும் அமைந்திருந்தன. எதிர் கடைக்கு வந்ததும், அவரை அழைத்து 11.30க்கு காட்சிப்படத்துக்கு உட்கார வைத்தோம்.
காலையில் போய் அழைப்பிதழ்கள் கொடுத்து வந்தவர்களும் சில நிமிடங்களுக்குப் பிறகு சேர்ந்து கொண்டார்கள்.
மென்பொருள் உருவாக்குவதில் இருக்கும் சிக்கல்கள், வாடிக்கையாளரின் தேவையை சரியாகப் புரிந்து கொண்டு செயல்படும் முறை, அதில் இருக்கும் நுணுக்கங்கள், தொடர்ச்சியான முதலீட்டுத் தேவை என்று சொன்ன கருத்துக்கள் நன்கு ஈர்த்தன. குறிப்பாக படங்களும், சித்திர துணுக்குகளும் அவரது கவனத்தை கவர்ந்தன. அவருக்குக் காட்டும் அறிக்கைகளிலும் அப்படி விபரங்களைப் புகுத்த வேண்டும்.
அடுத்த நாள் சொன்னது போல அவர் மங்களகரமாக ஆரம்பித்து வைத்த நிகழ்வுகள் நன்கு போக ஆரம்பித்தன. கணினித் துறை மேலாளர் என்று ஒருவர் வந்தார். அவருக்கு நம்மிடம் இருக்கும் மென்பொருள் வசதிகளைக் காட்டி விட்டு காட்சிப்படத்தையும் விளக்க ஆரம்பித்தோம். அந்த நேரத்தில் நாங்கள் சாப்பிட்டு விட்டுத் திரும்பி விட்டோம். அது வரை உட்கார்ந்திருந்து எல்லா விபரங்களையும் தெரிந்து கொண்டு போனார்.
மதியத்துக்கு மேல் இன்னொரு நிறுவனத்திலிருந்து ஏற்கனவே தொடர்பு கொண்டிருந்த மேலாளர்கள் வந்தார்கள். அவர்களுக்கு நான் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். மதிய காட்சி விளக்கத்துக்கு இன்னொரு வாடிக்கையாளரை அழைத்து வந்தேன். அதைத் தொடர்ந்து கடைக்குப் போய் அழைத்து வந்தேன். பார்த்து கைகுலுக்கி விட்டு வந்தேன். அவருடன் இருக்கும் பிணக்கைக் குறித்துப் பேச முடியாமல் விட்டு விட்டேன். அப்போது பேசியிருந்தால் நல்ல பலனளித்திருக்கும்.
நிறைய நண்பர்களும் வந்தார்கள். நமது கடை எப்போதுமே கலகலவென்று ஆட்கள் கூட்டம் கூடியவாறு காட்சியளித்தது. எதிர் கடையில் உட்கார்ந்திருந்தவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்திருக்கும். இரண்டாவது நாள் வந்தவர், மூன்றாவது நாள் வந்தவர், இரண்டாவது நாள் எட்டிப் பார்த்தவர் என்று எல்லோருக்குமே நம்மைப் பற்றிய மதிப்பீடு அதிகரித்திருக்கும். இரண்டாவது நாள் மதியம் நான் யாருக்கோ விளக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்திருக்கும் போது கடந்து போனாள். ஆர்வம் பொங்கும் கண்களால் கடையைத் துளாவி விட்டுப் போனாள்.
முதல் நாள் மாலையில் கடையை மூடி அலுவலகம் திரும்பும் போது நிறைவாக இருந்தது. சூட்டோடு சூட்டாக முதல் நாள் நிகழ்வுகளைக் குறித்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.
இரண்டாவது நாள் திங்கள் கிழமை. அலுவலகத்துக்குப் போய் என்னென்ன வாடிக்கையாளரை எப்படி அணுகலாம் என்று பேசிக் கொண்டிருந்தேன். நான் சொன்னது போல மின்னஞ்சல்களை அனுப்பி விட்டுப் போயிருந்திருக்கலாம். அந்த வாய்ப்பைத் தவற விட்டோம். மற்ற நிறுவனங்களை அவர்களது கடைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று போய் யாரையும் உருப்படியாகச் சந்திக்க முடியவில்லை. 11.30க்கு நம்ம ஆட்களுக்கே ஆரம்பித்தோம்.
என்னுடைய விளக்கப்படத்தில் பெயர் போட்ட திரைக்காட்சி இருந்தது. காலையில் அதை மாற்றியிருந்தது சரியாக சேமிக்கப்படாமல் சொதப்பியிருந்தேன். அதிலேயே எனக்குப் பாதி உயிர் போய் விட்டது.
அதற்குள் மதிய உணவு வேளை வந்து விட்டது. சாப்பிட்டு விட்டு வந்த பிறகு மேலும் நிறைய பேர் வர ஆரம்பித்தார்கள். காலையில் அழைத்து வந்து காட்டியிருந்ததைத் தொடர்ந்து அவரது நிறுவனத்தின் ஒரு இளம்பெண் வந்தார். அவருக்கும் வேதிப் பொருள் வாங்கி விற்பது குறித்த மென்பொருள் காண்பித்தோம்.
மூத்த துறை வல்லுனர் ஒருவர் வந்து பார்த்து விட்டு விற்பனையில் தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்களித்து விட்டுப் போனார்.
மூன்றாவது நாள் அலுவலகத்துக்கு நடந்து போய்ச் சேரும் போது எட்டரை மணி. யாராவது ஒருவர் போனால் போதுமா என்று கேட்டால் மறுத்து இரண்டு பேரும் போக வேண்டும் என்று சொன்னார். நல்லதாகத்தான் போனது. அலுவலகத்தில் எல்லாவற்றையும் பணி இயல்புக்கு கொண்டு வந்து விட்டார். 10 மணிக்கு மேல் போய்ச் சேர்ந்தோம். பார்வையாளர்கள் யாருமே வரவில்லை. காலையில் நண்பன் வந்தான். அவனை அதட்டி மிரட்டி உதவி கேட்டேன். அவனா செய்வான்!
சாப்பிடப் போயிருக்கும் போது வந்திருந்தவரைப் பிடித்து காட்சிப் படத்தைக் காண்பித்தேன். அப்போதும் அதன் பிறகும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். முதல் நாளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஒருவர் தோல் பொருட்கள் தொழில் செய்பவர் வந்தது போல, கிண்டியில் தோல் பொருட்கள் செய்யும் தொழில் செய்பவர் வந்து விசாரித்துக் கொண்டிருந்தார். முகவர் வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சியினர் வரவும் அவர்களுக்கு பேசினேன். அத்தோடு கிட்டத்தட்ட நிகழ்ச்சிகள் முடிந்து போயின.
பக்கத்து கடைகளில் பொருட்களை நீக்கி பொதிந்து கொண்டிருந்தார்கள். ஆணி அடிக்கும் சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது. நாங்களும் கடையை ஒதுக்கி விட்டுப் புறப்பட்டோம். நான் முன்னிருக்கையில் உட்கார்ந்து அலுவலகம் வந்து சேர்ந்தோம்.
இப்போதைய வாடிக்கையாளர்களுக்கு 'இரண்டு மூன்று பேர் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஓடும் வேலை இல்லை. பெரிய குழுவாக, நிறுவனமாக செயல்படுகிறார்கள்' என்பதைத் தெரிய வைத்தது. விட்டுச் சென்று விட்டவர்களுக்கும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. பொதுவான துறை நண்பர்களுக்கு நாம் இருப்பதை உரக்க அறிய வைத்தது. 60க்கும் மேற்பட்ட வருகையாளர்களில் 20 வரை திடமான வாய்ப்புகளுக்கான கதவு திறந்திருக்கிறது.
அடுத்த 10 நாட்களில் எல்லா வாய்ப்புகளையும் பின்தொடர்ந்து போய் திட்டப் பணிகளாக உருவாக்க வேண்டும்.
Monday, August 4, 2008
பணம் கொடுக்கும் முறைகள் - 2
லெட்டர் ஆஃப் கிரெடிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வங்கிக் கடன் கடிதஙகளைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம். (3)
விற்பனையாளரும் வாங்குபவரும் ஒருவரை ஒருவர் எடை போட்டு, பொருட்களின் தரம், அளவு, விலை பேசி இன்ன நாளுக்குள் அனுப்பி விட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். சரியான தரம், சரியான அளவில் பொருள் வந்து சேர வேண்டும் என்ற கவலை வாங்குபவருக்கு. பொருளை தயாரிக்க அவ்வளவு செலவழிக்கிறோம். போட்ட பணம் வந்து சேர வேண்டும் என்ற கவலை விற்பவருக்கு.
வங்கிக் கடன் கடித முறையில் வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுகிறார். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனம் தில்லியிலிருந்து மின்னணு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. சென்னை நிறுவனம், ஒரு வங்கியை அணுகி இந்த விற்பனைக்கு தில்லி நிறுவனத்தின் பெயருக்கு ஒரு கடன் கடிதம் அனுப்பக் கேட்கிறது.
வங்கி சும்மா அனுப்பி விடாது
விற்பனையாளரும் வாங்குபவரும் ஒருவரை ஒருவர் எடை போட்டு, பொருட்களின் தரம், அளவு, விலை பேசி இன்ன நாளுக்குள் அனுப்பி விட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். சரியான தரம், சரியான அளவில் பொருள் வந்து சேர வேண்டும் என்ற கவலை வாங்குபவருக்கு. பொருளை தயாரிக்க அவ்வளவு செலவழிக்கிறோம். போட்ட பணம் வந்து சேர வேண்டும் என்ற கவலை விற்பவருக்கு.
வங்கிக் கடன் கடித முறையில் வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுகிறார். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனம் தில்லியிலிருந்து மின்னணு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. சென்னை நிறுவனம், ஒரு வங்கியை அணுகி இந்த விற்பனைக்கு தில்லி நிறுவனத்தின் பெயருக்கு ஒரு கடன் கடிதம் அனுப்பக் கேட்கிறது.
வங்கி சும்மா அனுப்பி விடாது
பேர்வளம்
பிராண்டிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் பேர்வளம் உருவாக்குவதைப் பற்றி பலராமன் என்பவர் நேற்றைக்கு ஏசிடெக் லெதர் அண்ட் ஃபுட்வியர் அலுமினி அசோசியேஷன் கூட்டத்தில் பேசினார். மிகவும் நன்கு தயாரிக்கப்பட்டு மனதில் பதியும் படி பேசினார்.
தோல் ஒரு மலிபொருள். ஆங்கிலத்தில் கமாடிடி எனப்படும் இந்த மலிபொருட்களுக்கான சந்தைகளின் இயல்புகளை விவரித்தார். மலிபொருட்களாக விற்பவர்களுக்கு ஆதாயம் குறைவாகத்தான் கிடைக்கும். நுகர்வோருக்கு அருகில் இருக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும்.
தோலைப் பொறுத்த வரை பேர்வளம் உருவாக்கி நுகர்வோருக்கு நுகர்பொருட்களை விற்கும் நிறுவனங்கள், எதை விற்பது, எந்த விலைக்கு விற்பது என்பதைத் தீர்மானித்து பெருவாரியான ஆதாயத்தையும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரிப்பையும் பெறுகிறார்கள்.
'பேர்வளம் உருவாக்குதல் பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும், அல்லது நிறைய பணம் செலவாகும் ' என்று நினைப்பது முற்றிலும் உண்மை இல்லை. சரவணபவனில் ஆரம்பித்து சக்தி மசாலா, தவிட்டு எண்ணைய் பேர்வளம் என்று பலர் மலிபொருள் சந்தையில் பேர்வளம் உருவாக்கி பெரிதாக வளர்ந்தவர்கள்.
பேர் வளம் உருவாக்க என்ன வழிமுறை:
1. வாடிக்கையாளர் எப்படி வேலை செய்கிறார், என்னென்ன விரும்புகிறார், எப்படி வாழ்கிறார், எப்படி பிறருடன் உறவு வைத்திருக்கிறார் என்று ஆழமாக அவதானித்துப் பார்க்க வேண்டும்.
2. வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் ஆழமான விருப்பம் ஒன்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
3. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருள் அல்லது சேவை ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும்.
4. அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதை வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து நாளுக்கு நாள் புதிய புதிய நுணுக்கங்களைப் பின்பற்றி விருப்பம் நிறைவேறுதலை மேம்படுத்திக் கொண்டே போக வேண்டும்.
நம்முடைய நிறுவனத்தைப் பொறுத்த வரை, வாடிக்கையாளரின் நடவடிக்கைகள் குறித்த புரிதல்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் விபரமாகத் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் விருப்பம் அல்லது தேவை, தம்முடைய தொழில் நன்கு வளமடைய வேண்டும், அதற்குத் தேவையான தகவல்கள், முடிவுகள் சரியான நேரத்தில் சரியான நபருக்குக் கிடைக்க வேண்டும்.
தகவல்களைத் திரட்டுதல், சேமித்தல், எடுத்தல், வழங்குதல் என்ற நான்கு படிகளையும் முறைப்படி செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் மனதின் விருப்பம் அல்லது தேவையை நிறைவேற்றலாம். இது தோல் நிறுவனம் நடத்துபவர்களுக்கும், பொருள் உற்பத்தியாளர்களுக்கும், பொருள் விற்பவர்களுக்கும், பொருள் நுகர்வோருக்கும் பொருந்தும். அதுதான் நமது குறிக்கோள்.
தகவல்களை திரட்டி சேமித்து எடுத்து வழங்குதல் ஒவ்வொரு துறையிலும் மிகவும் தேவையான ஒன்று. கூகுள் இணையத்தில் இருக்கும் தகவல்களை எல்லாம் திரட்டி, சீராக சேமித்து வைத்து, தேவைப்படும் போது வசதியாக வெளியில் எடுத்து, பயனரின் விருப்பப்படி வழங்குகிறது. நாமும் அப்படி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
தகவல்களை திரட்டுதல் - நமது மென்பொருளுக்குள் தரவுகளை உள்ளிடுதல். இதில் புதிய புதிய தொழில் நுட்பங்களுடன், பயனர் எப்படி பணி புரிகிறார் என்ற புரிதலும் அவசியம்
சேமித்தல் - தொழில் நுட்பம் தொடர்பான நுணுக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
எடுத்தல் - பயனர் கேட்கும் போது கேட்ட விபரத்தை வேகமாக எடுக்க முடிதல்.
வழங்குதல் - தேடுகருவி அல்லது அறிக்கைகள், அல்லது ஆவணங்கள், அல்லது மின்னஞ்சல், அல்லது அச்சுப் பிரதி என்று பல வகையில் தகவல்களை எடுத்துக் கொடுக்க முடிய வேண்டும்.
1. தொழில் நுட்பக் குழு இப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படலாம்.
2. இந்த பேர்வளக் குறிக்கோளை குழுவினருக்கு வாடிக்கையாளருக்கு, பணம் கொடுப்பவருக்கு என்று எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
தோல் ஒரு மலிபொருள். ஆங்கிலத்தில் கமாடிடி எனப்படும் இந்த மலிபொருட்களுக்கான சந்தைகளின் இயல்புகளை விவரித்தார். மலிபொருட்களாக விற்பவர்களுக்கு ஆதாயம் குறைவாகத்தான் கிடைக்கும். நுகர்வோருக்கு அருகில் இருக்கும் பணிகளைச் செய்யும் நிறுவனங்கள் அதிகமாக சம்பாதிக்க முடியும்.
தோலைப் பொறுத்த வரை பேர்வளம் உருவாக்கி நுகர்வோருக்கு நுகர்பொருட்களை விற்கும் நிறுவனங்கள், எதை விற்பது, எந்த விலைக்கு விற்பது என்பதைத் தீர்மானித்து பெருவாரியான ஆதாயத்தையும், ஆண்டுக்கு ஆண்டு விற்பனை அதிகரிப்பையும் பெறுகிறார்கள்.
'பேர்வளம் உருவாக்குதல் பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும், அல்லது நிறைய பணம் செலவாகும் ' என்று நினைப்பது முற்றிலும் உண்மை இல்லை. சரவணபவனில் ஆரம்பித்து சக்தி மசாலா, தவிட்டு எண்ணைய் பேர்வளம் என்று பலர் மலிபொருள் சந்தையில் பேர்வளம் உருவாக்கி பெரிதாக வளர்ந்தவர்கள்.
பேர் வளம் உருவாக்க என்ன வழிமுறை:
1. வாடிக்கையாளர் எப்படி வேலை செய்கிறார், என்னென்ன விரும்புகிறார், எப்படி வாழ்கிறார், எப்படி பிறருடன் உறவு வைத்திருக்கிறார் என்று ஆழமாக அவதானித்துப் பார்க்க வேண்டும்.
2. வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் ஆழமான விருப்பம் ஒன்றை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.
3. அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொருள் அல்லது சேவை ஒன்றை தயாரித்து வழங்க வேண்டும்.
4. அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதை வாழ்க்கையின் குறிக்கோளாக வைத்து நாளுக்கு நாள் புதிய புதிய நுணுக்கங்களைப் பின்பற்றி விருப்பம் நிறைவேறுதலை மேம்படுத்திக் கொண்டே போக வேண்டும்.
நம்முடைய நிறுவனத்தைப் பொறுத்த வரை, வாடிக்கையாளரின் நடவடிக்கைகள் குறித்த புரிதல்கள் நிறையவே இருக்கின்றன. இன்னும் விபரமாகத் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
வாடிக்கையாளரின் மனதில் இருக்கும் விருப்பம் அல்லது தேவை, தம்முடைய தொழில் நன்கு வளமடைய வேண்டும், அதற்குத் தேவையான தகவல்கள், முடிவுகள் சரியான நேரத்தில் சரியான நபருக்குக் கிடைக்க வேண்டும்.
தகவல்களைத் திரட்டுதல், சேமித்தல், எடுத்தல், வழங்குதல் என்ற நான்கு படிகளையும் முறைப்படி செய்வதன் மூலம் வாடிக்கையாளரின் மனதின் விருப்பம் அல்லது தேவையை நிறைவேற்றலாம். இது தோல் நிறுவனம் நடத்துபவர்களுக்கும், பொருள் உற்பத்தியாளர்களுக்கும், பொருள் விற்பவர்களுக்கும், பொருள் நுகர்வோருக்கும் பொருந்தும். அதுதான் நமது குறிக்கோள்.
தகவல்களை திரட்டி சேமித்து எடுத்து வழங்குதல் ஒவ்வொரு துறையிலும் மிகவும் தேவையான ஒன்று. கூகுள் இணையத்தில் இருக்கும் தகவல்களை எல்லாம் திரட்டி, சீராக சேமித்து வைத்து, தேவைப்படும் போது வசதியாக வெளியில் எடுத்து, பயனரின் விருப்பப்படி வழங்குகிறது. நாமும் அப்படி திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
தகவல்களை திரட்டுதல் - நமது மென்பொருளுக்குள் தரவுகளை உள்ளிடுதல். இதில் புதிய புதிய தொழில் நுட்பங்களுடன், பயனர் எப்படி பணி புரிகிறார் என்ற புரிதலும் அவசியம்
சேமித்தல் - தொழில் நுட்பம் தொடர்பான நுணுக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
எடுத்தல் - பயனர் கேட்கும் போது கேட்ட விபரத்தை வேகமாக எடுக்க முடிதல்.
வழங்குதல் - தேடுகருவி அல்லது அறிக்கைகள், அல்லது ஆவணங்கள், அல்லது மின்னஞ்சல், அல்லது அச்சுப் பிரதி என்று பல வகையில் தகவல்களை எடுத்துக் கொடுக்க முடிய வேண்டும்.
1. தொழில் நுட்பக் குழு இப்படி நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு செயல்படலாம்.
2. இந்த பேர்வளக் குறிக்கோளை குழுவினருக்கு வாடிக்கையாளருக்கு, பணம் கொடுப்பவருக்கு என்று எல்லோருக்கும் தெளிவாகச் சொல்லி விட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும்.
Thursday, February 21, 2008
பணம் கொடுக்கும் முறைகள் -1
வாங்கல் விற்றலில் பணம் கைமாறும் முறைகள் பல வகைப்படும். வாங்குபவர், விற்பவர்களில் யாரின் கை ஓங்கி இருக்கிறது, யாரின் நம்பகத்தன்மை அதிகம் என்பதைப் பொறுத்து அவை மாறுபடும்.
பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு. வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.
விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு. வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.
- பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து விடும் என்ற நிம்மதி விற்பவருக்கு.
- பொருளைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி வாங்குபவருக்கு.
விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
- முழுத் தொகையும் முன்பணமாக அனுப்பிய பிறகு பொருள் அல்லது சேவை அனுப்பி வைக்கப்படும்
பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சந்தைப் போட்டி அதிகம் இல்லாத பொருள் அல்லது சேவை வாங்க ஒரு புது வாடிக்கையாளர் அணுகினால் 'பணத்தைக் கட்டி விட்டுப் பொருளை எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி விடலாம்.
இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் போது கடனட்டை மூலம் பணம் விற்கும் நிறுவனத்தின் கணக்குக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் பொருளை அனுப்பவே ஆரம்பிப்பார்கள்.
முன்பணமாக வரைவோலை வாங்கி அனுப்பினால்தான் புத்தகங்கள் அனுப்பி வைப்பேன் என்று பதிப்பகங்கள் இருக்கின்றன. - 'பொருளைத் தயாரித்து பொதிந்து வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன் (லாரியில், ரயிலில், கப்பலில், வானூர்தியில்). போக்குவரத்து நிறுவனம் கொடுத்த சீட்டைக் காண்பித்தால்தான் பொருளை விடுவிக்க முடியும். வங்கி மூலம் அந்தச் சீட்டை அனுப்பி, காசைக் கொடுத்து விட்டுப் பொருளை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்பது அடுத்த நிலை.
இதில் வாங்குபவருக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். மூன்றாவது நிறுவனம் ஒன்றின் கையில் பொதியப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பணம் கை விட்டுப் போய் விட்டாலும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் போகிறது.
தபால் மூலம் பொருளை அனுப்பி விட்டு தபால்காரரிடம் காசைக் கொடுத்து விடுமாறு நடக்கும் விபிபி முறையும் இது போலத்தான். - மேலே சொன்னதில் ஒரு பெரிய ஓட்டை, பொதியுள் என்ன இருக்கிறது என்று தெரிய முடியாமல் இருப்பது. விற்பனையாளர் டிரான்ஸிஸ்டர் வானொலி என்று சொல்லி அனுப்பியதைத் திறந்து பார்த்து உள்ளே செங்கற்கள் இருந்தால் வாங்கியவரின் பணம் போனது போனதாகி விடும்.
அதனால் வாங்குபவர் தனது வங்கி மூலம் உத்தரவாதக் கடிதம் ஒன்றை அளித்துக் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விற்பவருக்கு நம்பிக்கை அளிக்கலாம்.
வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு கடன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா ஆவண ஆதாரங்களையும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் வாங்குபவரின் வங்கி பணத்தைக் கொடுத்து விடும்.
ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், பொதி விபரங்கள் விளக்கமாக தரப்பட வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து பணம் கைவிட்டுப் போகும் முன் கப்பலில் ஏற்றி விடப்பட்ட பொருள் தாம் எதிர்பார்ப்பது போன்ற தரம் மற்றும் அளவுடன் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு ஆவணம் கப்பலில் அல்லது வானூர்தியில், அல்லது லாரியில் ஏற்றி அனுப்பிய ஆவணம்.
இப்படி விற்பவர் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அவற்றுக்கான ஆவணங்களை காண்பித்து விட்டால் வங்கிப் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.
'பொருளும் போய்ப் பணமும் வரா விட்டால் என்ன செய்வது? பொருளை அவ்வளவு செலவில் வெளி நாட்டுக்கு அனுப்பிய பிறகு வாங்குபவர் பணத்தைக் கொடுத்துப் பொருளை எடுத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வது' போன்ற விற்பவரின் கேள்விகளுக்கும் பொருத்தமான விடை கடன் கடிதங்கள். - நான்காவதாக கடன் கடிதத்தில் பொருளை எடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வங்கி பணம் கொடுப்பதாக உறுதி தரும் முறை. இதில் ஆவணங்களை நிபந்தனைப் படி தயாரித்து சமர்ப்பித்த 30 அல்லது 60 நாட்களுக்குப் பிறகு வாங்கியவரின் வங்கி பணத்தை விற்பனையாளருக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளிக்கிறது.
- அடுத்ததாக எந்த கடிதமும் இல்லாமல், போக்கு வரத்து நிறுவனத்திடமிருந்து பொருளை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணத்தை வாங்கியவரே செலுத்தி விடுதல். இதில் விற்பவருக்கு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகம். வாங்குவது பேர் பெற்ற நிறுவனமாக இருந்தாலோ, இரண்டு நிறுவனங்களுக்கிடையே நீண்ட நல்லுறவு நிலவும் போதோ இத்தகைய பணம் கொடுக்கும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
Thursday, December 27, 2007
போர்க்களம் - 3
முதல் பகுதி
இரண்டாவது பகுதி
நண்பரும் தயாராகி விட அலுவலகம் வந்து சேர்ந்தோம். கணினியை இயக்கி நண்பருக்கு ஒரு முறை போட்டுக் காட்டி ஒத்திகை. அவர் சில மாற்றங்களைச் சொன்னார். மொத்தத்தில் நன்றாக வந்து விட்டிருப்பது அவரது முகத்தில் தெரிந்தது. காட்சிக்கருவி கொண்டு வருபவரின் தொலைபேசி இயங்காமல் இருந்தது. இருந்தும் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து விட்டார்.
அந்த நேரம் இன்னொரு அலுவலகத் தோழர் வந்து விட அவரை உட்கார வைத்து படக்காட்சியாகவே காட்டிப் பேசினேன். அதன் பிறகும் ஓரிரு மாறுதல்கள் செய்து கொண்டோம்.
பத்து மணிக்குக் கிளம்பி சந்திப்பு நடக்கும் தொழிற்சாலைக்குப் போய் விட்டோம். ஏற்கனவே இரண்டு பேர் போய் முந்திய நாள் ஏற்பட்ட கடைசி நிமிடக் குளறுபடிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அந்த மேலாளரைப் பார்க்க முடியவில்லை.
இரண்டாவது தொழிற்சாலைக்கு இரண்டு நாட்கள் முன்பு நானே போய் அதன் மேலாளரைச் சந்தித்து அவரது தேவைகளை, குறை நிறைகளைக் கேட்டறிந்திருந்தேன். அவர் கேட்டிருந்த அறிக்கைகளும் எடுத்துக் கொடுத்து விட்டிருந்தார்கள்.
மூன்றாவது தொழிற்சாலையில் ஏற்கனவே நல்லபடியாக பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கு கடைசி நேர கைபிடித்தல் செய்ய காலையிலேயே ஒருவர் போய் அந்த மேலாளருடனேயே வண்டியில் கூட்டத்துக்கு வர திட்டம்.
கூட்டம் நடத்த வேண்டிய அறையை தேர்ந்தெடுத்து பொருட்களை ஒதுக்க, நாற்காலிகளை ஏற்பாடு செய்ய, தூய்மை செய்யக் கேட்டுக் கொண்டோம். பெரிய உரிமையாளர் வருவதால் எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். பத்தரை மணிக்கெல்லாம் காட்சிக் கருவியை அமைத்து கணினியை இணைத்து திரைக் காட்சி சரியாகத் தெரிகிறதா என்று உறுதி செய்து கொண்டோம்.
11 மணி சந்திப்புக்கு இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் மட்டும் நேரத்துக்கு வந்து விட்டார். அவருடன் பொதுவாகவும், பணி குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரும் வந்த பிறகுதானே ஆரம்பிக்க வேண்டும். தாமதமாகவே ஆனாலும் நம்ம ஆட்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.
மூலவர் பதினொன்றரைக்கெல்லாம் வந்து சேர மற்ற மேலாளர்கள் எல்லோரும் வந்திருக்கவில்லை. அவர் உட்கார்ந்த பிறகு விளக்குகளை அணைத்து விட்டுக் காட்சிப் படத்தின் முதல் துண்டைப் போட்டு வைத்திருந்தோம்.
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
இரண்டாவது பகுதி
- நிறுவன வளத் திட்டமிடல் (நி வ தி) என்றால் என்ன, அதன் பலன்கள், இன்றைய உலக அளவில், இந்திய அளவில், தோல் துறை அளவில் யார் யார் சேவை அளிக்கிறார்கள் என்பது முதல் பகுதி.
- இரண்டாவது பகுதியாக நமது நிறுவனத்தின் சேவையில் என்னென்ன செய்திருக்கிறோம், அதில் கண்ட குறைபாடுகள், அவற்றை நீக்க எடுத்த நடவடிக்கைகள், இது வரை சாதித்தவை, இனிமேல் அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கத் திட்டமிட்டிருப்பவை என்று வடிவம் கிடைத்து விட்டது. இரண்டு வாரங்கள் விவாதித்த கருத்துக்கள் எல்லாம் வடித்துச் சுருக்கியது போல அமைந்து விட்டிருந்தது. இன்னும் சில மாற்றங்கள் தேவைப்படலாம்.
நண்பரும் தயாராகி விட அலுவலகம் வந்து சேர்ந்தோம். கணினியை இயக்கி நண்பருக்கு ஒரு முறை போட்டுக் காட்டி ஒத்திகை. அவர் சில மாற்றங்களைச் சொன்னார். மொத்தத்தில் நன்றாக வந்து விட்டிருப்பது அவரது முகத்தில் தெரிந்தது. காட்சிக்கருவி கொண்டு வருபவரின் தொலைபேசி இயங்காமல் இருந்தது. இருந்தும் சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து விட்டார்.
அந்த நேரம் இன்னொரு அலுவலகத் தோழர் வந்து விட அவரை உட்கார வைத்து படக்காட்சியாகவே காட்டிப் பேசினேன். அதன் பிறகும் ஓரிரு மாறுதல்கள் செய்து கொண்டோம்.
பத்து மணிக்குக் கிளம்பி சந்திப்பு நடக்கும் தொழிற்சாலைக்குப் போய் விட்டோம். ஏற்கனவே இரண்டு பேர் போய் முந்திய நாள் ஏற்பட்ட கடைசி நிமிடக் குளறுபடிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தார்கள், அந்த மேலாளரைப் பார்க்க முடியவில்லை.
இரண்டாவது தொழிற்சாலைக்கு இரண்டு நாட்கள் முன்பு நானே போய் அதன் மேலாளரைச் சந்தித்து அவரது தேவைகளை, குறை நிறைகளைக் கேட்டறிந்திருந்தேன். அவர் கேட்டிருந்த அறிக்கைகளும் எடுத்துக் கொடுத்து விட்டிருந்தார்கள்.
மூன்றாவது தொழிற்சாலையில் ஏற்கனவே நல்லபடியாக பணி நடந்து கொண்டிருந்தது. அதற்கு கடைசி நேர கைபிடித்தல் செய்ய காலையிலேயே ஒருவர் போய் அந்த மேலாளருடனேயே வண்டியில் கூட்டத்துக்கு வர திட்டம்.
கூட்டம் நடத்த வேண்டிய அறையை தேர்ந்தெடுத்து பொருட்களை ஒதுக்க, நாற்காலிகளை ஏற்பாடு செய்ய, தூய்மை செய்யக் கேட்டுக் கொண்டோம். பெரிய உரிமையாளர் வருவதால் எல்லோருமே பரபரப்பாக இருந்தார்கள். பத்தரை மணிக்கெல்லாம் காட்சிக் கருவியை அமைத்து கணினியை இணைத்து திரைக் காட்சி சரியாகத் தெரிகிறதா என்று உறுதி செய்து கொண்டோம்.
11 மணி சந்திப்புக்கு இரண்டாவது தொழிற்சாலை மேலாளர் மட்டும் நேரத்துக்கு வந்து விட்டார். அவருடன் பொதுவாகவும், பணி குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். எல்லோரும் வந்த பிறகுதானே ஆரம்பிக்க வேண்டும். தாமதமாகவே ஆனாலும் நம்ம ஆட்கள் எல்லோரும் வந்து விட்டார்கள்.
மூலவர் பதினொன்றரைக்கெல்லாம் வந்து சேர மற்ற மேலாளர்கள் எல்லோரும் வந்திருக்கவில்லை. அவர் உட்கார்ந்த பிறகு விளக்குகளை அணைத்து விட்டுக் காட்சிப் படத்தின் முதல் துண்டைப் போட்டு வைத்திருந்தோம்.
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
போர்க்களம் - 2
முதல் பகுதி
மொத்தம் மூன்று அமர்வுகளில் குறிப்பேட்டில் பல பக்கங்கள் நிறைந்து விட்டன.
இதற்கிடையே ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னென்ன வேலை நடந்திருக்கிறது. அங்கிருக்கும் மேலாளர்களுக்கு என்ன குறை நிறைகள் என்று அடையாளம் கண்டு கொண்டு அங்கு வேலையையும் தொடர்ந்தோம். அந்தந்தப் பிரிவு மேலாளர்களுக்கும் இப்படி ஒரு சந்திப்பில் பேசுவதற்கு தயாரிப்பு வேண்டும். அவர்களது தேவைகளைச் சொல்லி வேலை வாங்கினார்கள்.
கணினியில் ஒரு உரைத் தொகுப்பாக வைத்துக் கொண்டு எல்லோருக்கும் ஒரு சுற்று விட்டோம். இடையில் ஊருக்கு ஒரு பயணம் எல்லாம் முடித்து விட்டுத் திரும்பி வந்து வேலை தொடர்ந்தது. ஊருக்கு மடிக்கணினி எடுத்துப் போகாமல் நான்கு நாட்களுக்கு கணினியிலிருந்து பிரிவு கிடைத்த ஓய்வு.
17ம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பி நினைவூட்டல். 19ம் தேதி அவர்களாகவே அழைத்து 21ம் தேதி சந்திப்பை உறுதி செய்தார்கள். கிடைத்த அறிகுறிகள் மிக நல்லதாகவே இருந்தன.
20ம் தேதி மதியத்துக்கு மேல் என்ன காண்பிக்க வேண்டும் என்று இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். களப்பணியாளர்கள் கடைசி நிமிடத் திக்கல்களை சரி செய்யப் போனார்கள். இருமக் காட்சிக் கருவி ஒன்றை வாடகைக்கு எடுத்து காண்பிக்கலாம் என்று நினைத்திருந்தோம். மாலை நான்கு மணிக்குப் பிறகுதான் அந்த நினைவே வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்குக் கொடுத்திருந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை வைத்திருந்தேன். அது மாறாமல் இருக்க வேண்டுமே!
மாறியிருக்கவில்லை. பழைய உறவை நினைவில் வைத்திருந்து மாலையே வந்து கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். ஒரு நாள் வாடகை 750 ரூபாய், தொடரும் உறவுக்காக 150 ரூபாய்கள் தள்ளுபடி. ஒவ்வொரு முறையும் இந்தக் கருவிகளின் அளவு குறுகி, தரம் உயர்ந்திருக்கிறது. நேற்றைக்கு நாளிதழில் பார்த்தால் ஏசர் நிறுவனத்தின் காட்சிக் கருவி 45 ஆயிரம் ரூபாய்களுக்குக் கொடுக்கிறார்களாம்.
அப்பா அம்மா வெளியூர் கிளம்பும் தயாரிப்புகள் வேறு.. காலையில் வழியனுப்ப வர முடியாது என்று முதலிலேயே சொல்லி விட்டேன். என் பங்காக சின்னச் சின்ன ஏற்பாடுகளுக்கான பணிகள் 20ம் தேதி முழுவதும். கடைசி நேரச் சிக்கல் ஒன்று ஒரு தொழிற்சாலையில். அங்கிருக்கும் மேலாளர் உள்ளதில் கடுப்பேற்றுபவர். எப்படியாவது சரி செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
தூங்கும் முன் எதுவும் செய்ய ஓடவில்லை. காலையில் எழுந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நல்ல தூக்கம். விழிப்பு வந்த பிறகும் நாளில் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரை மணி நேரம் அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்து விட்டே எழுந்தேன். ஏழு மணிக்கு விமான நிலையத்துக்குக் கிளம்புகிறார்கள். அந்தத் தயாரிப்புகள் முடிந்து விட்டன. நானும் 5 மணிக்கு எழுந்து குளித்து விட்டு அவர்கள் பைகளை மூடி வைத்து, வாடகை வண்டிக்கு தொலைபேசி ஏற்பாடு செய்தலையும் முடித்துக் கொண்டேன்.
சரி கணினியை இயக்கி விடுவோம் என்று மேசையில் வைத்து உயிர் கொடுத்து 11 மணிக்குப் பேசப் போவதற்கு திரைக்காட்சிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன்.
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
மொத்தம் மூன்று அமர்வுகளில் குறிப்பேட்டில் பல பக்கங்கள் நிறைந்து விட்டன.
இதற்கிடையே ஒவ்வொரு தொழிற்சாலையிலும் என்னென்ன வேலை நடந்திருக்கிறது. அங்கிருக்கும் மேலாளர்களுக்கு என்ன குறை நிறைகள் என்று அடையாளம் கண்டு கொண்டு அங்கு வேலையையும் தொடர்ந்தோம். அந்தந்தப் பிரிவு மேலாளர்களுக்கும் இப்படி ஒரு சந்திப்பில் பேசுவதற்கு தயாரிப்பு வேண்டும். அவர்களது தேவைகளைச் சொல்லி வேலை வாங்கினார்கள்.
கணினியில் ஒரு உரைத் தொகுப்பாக வைத்துக் கொண்டு எல்லோருக்கும் ஒரு சுற்று விட்டோம். இடையில் ஊருக்கு ஒரு பயணம் எல்லாம் முடித்து விட்டுத் திரும்பி வந்து வேலை தொடர்ந்தது. ஊருக்கு மடிக்கணினி எடுத்துப் போகாமல் நான்கு நாட்களுக்கு கணினியிலிருந்து பிரிவு கிடைத்த ஓய்வு.
17ம் தேதி ஒரு மின்னஞ்சல் அனுப்பி நினைவூட்டல். 19ம் தேதி அவர்களாகவே அழைத்து 21ம் தேதி சந்திப்பை உறுதி செய்தார்கள். கிடைத்த அறிகுறிகள் மிக நல்லதாகவே இருந்தன.
20ம் தேதி மதியத்துக்கு மேல் என்ன காண்பிக்க வேண்டும் என்று இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். களப்பணியாளர்கள் கடைசி நிமிடத் திக்கல்களை சரி செய்யப் போனார்கள். இருமக் காட்சிக் கருவி ஒன்றை வாடகைக்கு எடுத்து காண்பிக்கலாம் என்று நினைத்திருந்தோம். மாலை நான்கு மணிக்குப் பிறகுதான் அந்த நினைவே வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாடகைக்குக் கொடுத்திருந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணை வைத்திருந்தேன். அது மாறாமல் இருக்க வேண்டுமே!
மாறியிருக்கவில்லை. பழைய உறவை நினைவில் வைத்திருந்து மாலையே வந்து கொடுத்து விட்டுப் போய் விட்டார்கள். ஒரு நாள் வாடகை 750 ரூபாய், தொடரும் உறவுக்காக 150 ரூபாய்கள் தள்ளுபடி. ஒவ்வொரு முறையும் இந்தக் கருவிகளின் அளவு குறுகி, தரம் உயர்ந்திருக்கிறது. நேற்றைக்கு நாளிதழில் பார்த்தால் ஏசர் நிறுவனத்தின் காட்சிக் கருவி 45 ஆயிரம் ரூபாய்களுக்குக் கொடுக்கிறார்களாம்.
அப்பா அம்மா வெளியூர் கிளம்பும் தயாரிப்புகள் வேறு.. காலையில் வழியனுப்ப வர முடியாது என்று முதலிலேயே சொல்லி விட்டேன். என் பங்காக சின்னச் சின்ன ஏற்பாடுகளுக்கான பணிகள் 20ம் தேதி முழுவதும். கடைசி நேரச் சிக்கல் ஒன்று ஒரு தொழிற்சாலையில். அங்கிருக்கும் மேலாளர் உள்ளதில் கடுப்பேற்றுபவர். எப்படியாவது சரி செய்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
தூங்கும் முன் எதுவும் செய்ய ஓடவில்லை. காலையில் எழுந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நல்ல தூக்கம். விழிப்பு வந்த பிறகும் நாளில் புத்துணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரை மணி நேரம் அமைதியாகப் படுத்துக் கொண்டிருந்து விட்டே எழுந்தேன். ஏழு மணிக்கு விமான நிலையத்துக்குக் கிளம்புகிறார்கள். அந்தத் தயாரிப்புகள் முடிந்து விட்டன. நானும் 5 மணிக்கு எழுந்து குளித்து விட்டு அவர்கள் பைகளை மூடி வைத்து, வாடகை வண்டிக்கு தொலைபேசி ஏற்பாடு செய்தலையும் முடித்துக் கொண்டேன்.
சரி கணினியை இயக்கி விடுவோம் என்று மேசையில் வைத்து உயிர் கொடுத்து 11 மணிக்குப் பேசப் போவதற்கு திரைக்காட்சிகளுக்கு இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன்.
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
Wednesday, December 26, 2007
போர்க்களம் - 1
குருட்சேத்திரப் போர்க்களம். அபிமன்யூ சக்கர வியூகத்தை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான். உடைப்பை ஜெயத்ரதன் அடைத்துக் கொள்ள தனியே மாட்டிக் கொள்கிறான். தீவிரமான போர் நடக்கிறது. ஆசிரியர் துரோணர் எதிர்க் கட்சியில். அவருக்கு ஒரே பூரிப்பு. 'மாணவனின் மகன், சிறு பையன் எப்படி திறமையாக போர் புரிகிறான்' என்று பாராட்டுகிறார்.
தான் கற்றுக் கொடுத்த வித்தை தனக்கு எதிரேயே பயன்படுத்தப்படும் போது மகிழ்ச்சியுடன் எதிர்த் தாக்குதல் நடத்தி போராட்டம் காணும் ஆசிரியர்கள் ஏராளம்.
அப்படி ஒரு நாள்.
அக்டோபரிலிருந்து அதிகரித்த செலவுகள், முனைப்பான உழைப்பு, ஆர்வமான குழுவினர் என்று புறப்பட்டு விட்டாலும் மூன்று மாதங்களாக ஒரு பெரிய வாடிக்கையாளர் நிதானிக்க ஆரம்பித்து விட தவிப்பும், சிக்கல்களும். பொறுமை இழக்காமல், ஒவ்வொரு சிடுக்காக விடுவிக்கும்படி தொடர்ந்து வேலையைச் செய்து கொண்டு வந்து அதற்கான கணக்குகளையும் வைத்திருந்தோம். டிசம்பர் முதல் வாரத்தில் நாள் முழுதும் காத்திருந்து பின் மாலையில் சில நிமிடங்கள் சந்தித்த போது அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன.
'நான் வெளிநாடு போறேன், திரும்பி வந்ததும் நிறுவனத்தில் உயர் மேலாளர்கள் எல்லோரையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அவர்களையும் ஈடுபடுத்தினால் இந்தத் திட்டத்தை இப்படியே தொடர முடியும்' என்று சொல்லி 21ம் தேதி என்று நாள் குறித்து விட்டுப் போய் விட்டார்.
மூன்று ஆண்டுகள் தாண்டி விட்ட உறவு. ஒரு பணி முடிந்து ஆறு மாதங்களாக நல்ல பெயர். இரண்டாவதாகக் கிடைத்த வேலையில் தேக்கங்கள் பல ஏற்பட்டு அதை முடுக்கி விடத்தான் இந்தக் கூட்டம். பல சிக்கல்கள். நம் பக்கம் பல குளறுபடிகள். அவர்கள் பக்கம் பல குழப்பங்கள். சென்னையிலேயே வெவ்வேறு இடங்களில் மூன்று தொழிற்சாலைகள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மேலாண்மை அமைப்புகள். மூன்றிற்குமிடையே ஓருங்கிணைப்பு இல்லாதது, மென்பொருள் வழுக்கள், நம் குழுவினரின் தவறுகள் என்று எதைத் தொட்டாலும் எதிர்மறையாகவே போய் விடக் கூடிய வெடிகுண்டுகள்.
இரண்டு வாரங்களில் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தயாரிக்க முடிவு செய்தோம்.
மிக நெருக்கமாக இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த நிறுவனத்தின் தேவைகள் நன்கு புரிந்தவை.
(தொடரும்)
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
தான் கற்றுக் கொடுத்த வித்தை தனக்கு எதிரேயே பயன்படுத்தப்படும் போது மகிழ்ச்சியுடன் எதிர்த் தாக்குதல் நடத்தி போராட்டம் காணும் ஆசிரியர்கள் ஏராளம்.
அப்படி ஒரு நாள்.
அக்டோபரிலிருந்து அதிகரித்த செலவுகள், முனைப்பான உழைப்பு, ஆர்வமான குழுவினர் என்று புறப்பட்டு விட்டாலும் மூன்று மாதங்களாக ஒரு பெரிய வாடிக்கையாளர் நிதானிக்க ஆரம்பித்து விட தவிப்பும், சிக்கல்களும். பொறுமை இழக்காமல், ஒவ்வொரு சிடுக்காக விடுவிக்கும்படி தொடர்ந்து வேலையைச் செய்து கொண்டு வந்து அதற்கான கணக்குகளையும் வைத்திருந்தோம். டிசம்பர் முதல் வாரத்தில் நாள் முழுதும் காத்திருந்து பின் மாலையில் சில நிமிடங்கள் சந்தித்த போது அதன் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன.
'நான் வெளிநாடு போறேன், திரும்பி வந்ததும் நிறுவனத்தில் உயர் மேலாளர்கள் எல்லோரையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அவர்களையும் ஈடுபடுத்தினால் இந்தத் திட்டத்தை இப்படியே தொடர முடியும்' என்று சொல்லி 21ம் தேதி என்று நாள் குறித்து விட்டுப் போய் விட்டார்.
மூன்று ஆண்டுகள் தாண்டி விட்ட உறவு. ஒரு பணி முடிந்து ஆறு மாதங்களாக நல்ல பெயர். இரண்டாவதாகக் கிடைத்த வேலையில் தேக்கங்கள் பல ஏற்பட்டு அதை முடுக்கி விடத்தான் இந்தக் கூட்டம். பல சிக்கல்கள். நம் பக்கம் பல குளறுபடிகள். அவர்கள் பக்கம் பல குழப்பங்கள். சென்னையிலேயே வெவ்வேறு இடங்களில் மூன்று தொழிற்சாலைகள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு மேலாண்மை அமைப்புகள். மூன்றிற்குமிடையே ஓருங்கிணைப்பு இல்லாதது, மென்பொருள் வழுக்கள், நம் குழுவினரின் தவறுகள் என்று எதைத் தொட்டாலும் எதிர்மறையாகவே போய் விடக் கூடிய வெடிகுண்டுகள்.
இரண்டு வாரங்களில் எப்படிப் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று தயாரிக்க முடிவு செய்தோம்.
மிக நெருக்கமாக இணைந்து வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த நிறுவனத்தின் தேவைகள் நன்கு புரிந்தவை.
- அவர்களுக்கு முழுமையான சேவை எப்படி இருக்க வேண்டும்.
- இது வரை நாம் செய்த பணியில் சாதித்தது என்ன,
- அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைத்தது.
- நமது சேவையின் மீது அவர்களுக்கு என்னென்ன குறைபாடுகள், முறையீடுகள்,
- அவற்றைச் சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தோம்,
- இனிமேல் அடுத்து செய்ய வேண்டியது என்ன
(தொடரும்)
இரண்டாவது பகுதி
மூன்றாவது பகுதி
நான்காவது பகுதி
ஐந்தாவது பகுதி
Tuesday, September 25, 2007
கொடுக்கல் வாங்கல்
வாங்கல் விற்றலில் பணம் கைமாறும் முறைகள் பல வகைப்படும். வாங்குபவர், விற்பவர்களில் யாரின் கை ஓங்கி இருக்கிறது, யாரின் நம்பகத்தன்மை அதிகம் என்பதைப் பொறுத்து அவை மாறுபடும்.
பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு.
விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு.
- வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும். பொருளைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி.
- பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து விடும் என்ற நிம்மதி விற்பவருக்கு.
விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
- முழுத் தொகையும் முன்பணமாக அனுப்பிய பிறகு பொருள் அல்லது சேவை அனுப்பி வைக்கப்படும்
பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சந்தைப் போட்டி அதிகம் இல்லாத பொருள் அல்லது சேவை வாங்க ஒரு புது வாடிக்கையாளர் அணுகினால் 'பணத்தைக் கட்டி விட்டுப் பொருளை எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி விடலாம்.
இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் போது கடனட்டை மூலம் பணம் விற்கும் நிறுவனத்தின் கணக்குக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் பொருளை அனுப்பவே ஆரம்பிப்பார்கள்.
முன்பணமாக வரைவோலை வாங்கி அனுப்பினால்தான் புத்தகங்கள் அனுப்பி வைப்பேன் என்று பதிப்பகங்கள் இருக்கின்றன. - 'பொருளைத் தயாரித்து பொதிந்து வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன் (லாரியில், ரயிலில், கப்பலில், வானூர்தியில்). போக்குவரத்து நிறுவனம் கொடுத்த சீட்டைக் காண்பித்தால்தான் பொருளை விடுவிக்க முடியும். வங்கி மூலம் அந்தச் சீட்டை அனுப்புகிறோம், காசைக் கொடுத்து சீட்டை பெற்று பொருளை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்பது அடுத்த நிலை.
இதில் வாங்குபவருக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். மூன்றாவது நிறுவனம் ஒன்றின் கையில் பொதியப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பணம் கை விட்டுப் போய் விட்டாலும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் போகிறது.
தபால் மூலம் பொருளை அனுப்பி விட்டு தபால்காரரிடம் காசைக் கொடுத்து விடுமாறு நடக்கும் விபிபி முறையும் இது போலத்தான். - மேலே சொன்னதில் ஒரு பெரிய ஓட்டை, பொதியுள் என்ன இருக்கிறது என்று தெரிய முடியாமல் இருப்பது. விற்பனையாளர் டிரான்ஸிஸ்டர் வானொலி என்று சொல்லி அனுப்பியதைத் திறந்து பார்த்து உள்ளே செங்கற்கள் இருந்தால் வாங்கியவரின் பணம் போனது போனதாகி விடும்.
அதனால் வாங்குபவர் தனது வங்கி மூலம் உத்தரவாதக் கடிதம் ஒன்றை அளித்துக் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விற்பவருக்கு நம்பிக்கை அளிக்கலாம். வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு கடன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா ஆவண ஆதாரங்களையும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் வாங்குபவரின் வங்கி பணத்தைக் கொடுத்து விடும்.- ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்,
- பொதி விபரங்கள் விளக்கமாக தரப்பட வேண்டும்
- கப்பலில் ஏற்றி விடப்பட்ட பொருள் தாம் எதிர்பார்ப்பது போன்ற தரம் மற்றும் அளவுடன் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளலாம்.
- ஒரு ஆவணம் கப்பலில் அல்லது வானூர்தியில், அல்லது லாரியில் ஏற்றி அனுப்பிய ஆவணம்.
இப்படி விற்பவர் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அவற்றுக்கான ஆவணங்களை காண்பித்து விட்டால் வங்கிப் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.
'பொருளும் போய்ப் பணமும் வரா விட்டால் என்ன செய்வது? பொருளை அவ்வளவு செலவில் வெளி நாட்டுக்கு அனுப்பிய பிறகு வாங்குபவர் பணத்தைக் கொடுத்துப் பொருளை எடுத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வது' போன்ற விற்பவரின் கேள்விகளுக்கும் பொருத்தமான விடை கடன் கடிதங்கள்.
- ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்,
- நான்காவதாக கடன் கடிதத்தில் பொருளை எடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வங்கி பணம் கொடுப்பதாக உறுதி தரும் முறை. இதில் ஆவணங்களை நிபந்தனைப் படி தயாரித்து சமர்ப்பித்த 30 அல்லது 60 நாட்களுக்குப் பிறகு வாங்கியவரின் வங்கி பணத்தை விற்பனையாளருக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளிக்கிறது.
- அடுத்ததாக எந்த கடிதமும் இல்லாமல், போக்கு வரத்து நிறுவனத்திடமிருந்து பொருளை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணத்தை வாங்கியவரே செலுத்தி விடுதல். இதில் விற்பவருக்கு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகம். வாங்குவது பேர் பெற்ற நிறுவனமாக இருந்தாலோ, இரண்டு நிறுவனங்களுக்கிடையே நீண்ட நல்லுறவு நிலவும் போதோ இத்தகைய பணம் கொடுக்கும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
Tuesday, September 4, 2007
எப்படி விற்பது?
நிறுவன வளத் திட்டமிடல் என்று மென்பொருள் சேவை வழங்குவது யுரேகா போர்ப்ஸ் சலவை எந்திரம் விற்பது அல்லது வெற்றிட எந்திரம் விற்பது போன்றது.
நம்ம ஆள் வாடிக்கையாளர் வீட்டுக்குப் போய், 'எப்படித் தரையை, கூரையை, சுவர்களை தூய்மை செய்ய வேண்டும். தூய்மை செய்த பிறகு தூசியை எப்படி பையிலிருந்து வெளியேற்ற வேண்டும், எவ்வளவு நேரம் தொடர்ந்து ஓட்டலாம்' என்று விளக்கிச் சொல்ல வேண்டும். அதில் புதிதாக ஏதாவது நுட்பம் இருந்தால் அதையும் விளக்கமாகச் சொல்லி விட வேண்டும்.
சொல்லா விட்டால் அப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் அதைப் பயன்படுத்தாமலேயே இருந்து விடுவார்கள். பணமும் நேரமும் செலவழித்து ஒரு நுட்பத்தை உருவாக்கிச் சேர்த்திருக்கிறோம். விற்கும் விலையில் அந்த செலவும் அடங்கி இருக்கிறது. வாடிக்கையாளர் அந்த நுட்பத்துக்கான பலனை அடையா விட்டால் கொடுத்த காசுக்கான பலன் அவருக்குக் கிடைக்காமல் போய் அடுத்த முறை நம்மிடம் வர மாட்டார்.
நாங்கள் ஆரம்பத்தில் மென்பொருளுக்கு இன்ன விலை என்று பேசி விட்டு, நிறுவுதல், மாற்றங்கள் செய்தல், பயிற்சி அளித்தல், தேவையான அறிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று பொறுப்பேற்றுக் கொள்வோம்.
எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே மென்பொருள் செய்து வைத்திருக்கிறோம், வாடிக்கையாளர் இடத்துக்குப் போய் வேலை செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. அந்தக் காசு வர வேண்டும். மென் பொருளை நிறுவியதும் இவ்வளவு காசு, ஒரு மாதத்துக்குப் பிறகு இவ்வளவு காசு என்று அட்டவணை அமைத்துக் கொண்டோம்.
வாடிக்கையாளருக்கோ மென்பொருளை அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்து தினசரி வேலை விபரங்களை சேகரித்து அறிக்கைகள் வர ஆரம்பித்த பிறகுதான் பயன்பாடு தெரிகிறது. அதற்கு முன்பு காசு கொடுக்கத் தயங்குவார்கள். அப்படியே கொடுத்தாலும், பேசிய முழுத் தொகையை கொடுக்கும் முன்பு பயன்பாடு அவர்கள் எதிர்பார்த்தபடி கிடைத்து விட்டதா என்று பார்ப்பார்கள்.
நாங்கள் விற்பதாக நினைத்துக் கொண்டிருந்தது மென்பொருள். அவர்கள் வாங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தது அதன் மூலம் கிடைக்கும் பலன்கள். இரண்டுக்கும் இடையேயான இடைவெளியில் பல வாக்குவாதங்கள், கருத்து பேதங்கள்.
அப்படி நோக்கங்கள் தெளிவாக இல்லாததால் எங்களது முயற்சிகள் புதிது புதிதாக வாடிக்கையாளர்களைத் தேடுவதில் இருந்தன. ஏற்கனவே வாய்ப்பளித்த இடங்களில் சீக்கிரம் மென்பொருளை நிறுவிக் கொடுத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று முயல்வோம். இதனால் விற்பனையின் மதிப்பும் அதிகமாக முடியாமல் தவித்தோம்.
ஒரு பொருளின் விலைக்கு இரண்டு பக்கங்கள். ஒன்று வாங்குபவருக்குக் கிடைக்கும் பலனின் அளவு, இரண்டாவது விற்பவருக்கு ஆகும் முயற்சியின் அல்லது செலவின் அளவு. விலை பலனை விடக் குறைவாகவும், முயற்சியை விட அதிகமாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் வாங்குபவர் அல்லது விற்பவர் பின்வாங்கி விடுவார்.
இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. அதிக விலை கொடுக்கும் வாடிக்கையாளருக்கு கூடுதல் செலவு செய்து அதிக பலனைத் தேடிக் கொடுக்க முடியும். அந்த வாடிக்கையாளரும் கூட இவ்வளவு காசு கொடுத்து விட்டோமே, இதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று தேடித் தேடி, விற்பனையாளரை துரத்தி துரத்தி ஆகக் கூடுதல் பலனை பெற முயற்சிப்பார்.
நம்ம ஆள் வாடிக்கையாளர் வீட்டுக்குப் போய், 'எப்படித் தரையை, கூரையை, சுவர்களை தூய்மை செய்ய வேண்டும். தூய்மை செய்த பிறகு தூசியை எப்படி பையிலிருந்து வெளியேற்ற வேண்டும், எவ்வளவு நேரம் தொடர்ந்து ஓட்டலாம்' என்று விளக்கிச் சொல்ல வேண்டும். அதில் புதிதாக ஏதாவது நுட்பம் இருந்தால் அதையும் விளக்கமாகச் சொல்லி விட வேண்டும்.
சொல்லா விட்டால் அப்படி ஒரு வசதி இருப்பது தெரியாமல் அதைப் பயன்படுத்தாமலேயே இருந்து விடுவார்கள். பணமும் நேரமும் செலவழித்து ஒரு நுட்பத்தை உருவாக்கிச் சேர்த்திருக்கிறோம். விற்கும் விலையில் அந்த செலவும் அடங்கி இருக்கிறது. வாடிக்கையாளர் அந்த நுட்பத்துக்கான பலனை அடையா விட்டால் கொடுத்த காசுக்கான பலன் அவருக்குக் கிடைக்காமல் போய் அடுத்த முறை நம்மிடம் வர மாட்டார்.
நாங்கள் ஆரம்பத்தில் மென்பொருளுக்கு இன்ன விலை என்று பேசி விட்டு, நிறுவுதல், மாற்றங்கள் செய்தல், பயிற்சி அளித்தல், தேவையான அறிக்கைகளை எடுத்தல் போன்றவற்றுக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று பொறுப்பேற்றுக் கொள்வோம்.
எங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே மென்பொருள் செய்து வைத்திருக்கிறோம், வாடிக்கையாளர் இடத்துக்குப் போய் வேலை செய்யும் ஒவ்வொரு நாளுக்கும் செலவாகிக் கொண்டே இருக்கிறது. அந்தக் காசு வர வேண்டும். மென் பொருளை நிறுவியதும் இவ்வளவு காசு, ஒரு மாதத்துக்குப் பிறகு இவ்வளவு காசு என்று அட்டவணை அமைத்துக் கொண்டோம்.
வாடிக்கையாளருக்கோ மென்பொருளை அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்து தினசரி வேலை விபரங்களை சேகரித்து அறிக்கைகள் வர ஆரம்பித்த பிறகுதான் பயன்பாடு தெரிகிறது. அதற்கு முன்பு காசு கொடுக்கத் தயங்குவார்கள். அப்படியே கொடுத்தாலும், பேசிய முழுத் தொகையை கொடுக்கும் முன்பு பயன்பாடு அவர்கள் எதிர்பார்த்தபடி கிடைத்து விட்டதா என்று பார்ப்பார்கள்.
நாங்கள் விற்பதாக நினைத்துக் கொண்டிருந்தது மென்பொருள். அவர்கள் வாங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தது அதன் மூலம் கிடைக்கும் பலன்கள். இரண்டுக்கும் இடையேயான இடைவெளியில் பல வாக்குவாதங்கள், கருத்து பேதங்கள்.
அப்படி நோக்கங்கள் தெளிவாக இல்லாததால் எங்களது முயற்சிகள் புதிது புதிதாக வாடிக்கையாளர்களைத் தேடுவதில் இருந்தன. ஏற்கனவே வாய்ப்பளித்த இடங்களில் சீக்கிரம் மென்பொருளை நிறுவிக் கொடுத்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என்று முயல்வோம். இதனால் விற்பனையின் மதிப்பும் அதிகமாக முடியாமல் தவித்தோம்.
ஒரு பொருளின் விலைக்கு இரண்டு பக்கங்கள். ஒன்று வாங்குபவருக்குக் கிடைக்கும் பலனின் அளவு, இரண்டாவது விற்பவருக்கு ஆகும் முயற்சியின் அல்லது செலவின் அளவு. விலை பலனை விடக் குறைவாகவும், முயற்சியை விட அதிகமாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால் வாங்குபவர் அல்லது விற்பவர் பின்வாங்கி விடுவார்.
இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. அதிக விலை கொடுக்கும் வாடிக்கையாளருக்கு கூடுதல் செலவு செய்து அதிக பலனைத் தேடிக் கொடுக்க முடியும். அந்த வாடிக்கையாளரும் கூட இவ்வளவு காசு கொடுத்து விட்டோமே, இதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று தேடித் தேடி, விற்பனையாளரை துரத்தி துரத்தி ஆகக் கூடுதல் பலனை பெற முயற்சிப்பார்.
Monday, September 3, 2007
எதை விற்கிறோம்?
சந்தைப்படுத்தலின் அடிப்படைப் பாடங்களில் முக்கியமானது :
ஒரு பொருளை வாங்கும் போது அதன் பயன்பாட்டைத்தான் வாங்குகிறார்கள்.
யுரேகா போர்ப்ஸ் என்ற நிறுவனம், துணி துவைக்கும் எந்திரம், வெற்றிடக் கருவி போன்ற புதிய கருவிகளை விற்கும் போது வாங்கியவர்களின் வீட்டுக்கே ஆள் அனுப்பி அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். பொருளை வாங்கிக் கொண்டு போய் வீட்டில் சரியாக வேலை செய்யா விட்டால் திரும்பி எடுத்துக் கொள்கிறார்கள்.
உலர் அரைவை எந்திரத்துடன் பயன்படுத்தும் கையேடு ஒன்று வரும். நுண்ணலை அடுப்பில் எப்படி சமைப்பது, என்ன சமைப்பது என்று விளக்கங்களையும் சேர்த்து விற்காததால் நம்ம ஊரில் அது பிரபலமாகமலேயே இருந்தது.
மென்பொருட்கள் மிக அண்மைக் காலத்தில் நம் வாழ்க்கையில் நுழைந்தவை. கணக்குப் போட மென்பொருள், கடிதம் எழுத மென்பொருள், இணையத்தில் இணைய மென்பொருள் என்று வாங்குபவர் தாமே உருவகித்து அதன் பலனைப் பெற்றுக் கொள்கிறார். 100 ரூபாய்க்கு ஒரு குறுவட்டு கடையில் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம், அதில் என்னென்ன இருக்கிறது என்று எப்படித் தெரியும். எதற்காக அந்த 100 ரூபாயைச் செலவழிக்கிறோம்.
'15000 ரூபாய்க்கு மைக்ரோசாப்டு ஆபிஸ் வாங்கி வாரத்துக்கு நான்கு கடிதம் எழுத மட்டும் பயன்படுத்தினால் அது உங்கள் விருப்பம். நான் அப்படி ஆயிரக்கணக்கான பேருக்கு விற்று பணம் சம்பாதித்துக் கொள்கிறேன் ' என்று பரவலாக விற்பது.
'உங்களைப் போன்று வாங்கிய இன்னொருவர் ஆபிசு 2007ல் இருக்கும் எல்லா நுணுக்கங்களையும் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறார் என்றால் அது அவர் விருப்பம். '
இப்போது 2 ஆண்டுகள் கழித்து மைக்ரோசாப்டு ஆபிசு 2010 வெளி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை 40000 ரூபாய் என்றால் மேலே சொன்ன இரண்டு பேரில் யார் புதிய பதிப்பை வாங்க விரும்புவார்?
வாரத்துக்கு நாலு கடிதம் அடிக்க இருப்பதே போதும் இன்னும் 40000 ஏன் செலவு என்று முதலாமவர் இருந்து விடுவார். இன்னும் அதிகமான வசதிகளைத் தேடி இரண்டாமவர் வாங்க முன் வருவார்.
ஒரு பொருளை வாங்கும் போது அதன் பயன்பாட்டைத்தான் வாங்குகிறார்கள்.
- சாப்பாடு வாங்கினால், அதைச் சாப்பிடும் போது கிடைக்கும் நிறைவும், உடலுக்கு கிடைக்கும் ஆற்றலையும்தான் வாங்குகிறோம்.
- தொலைக்காட்சி வாங்கவில்லை. அதில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் திறனைத்தான் வாங்குகிறோம்.
- சலவை எந்திரம் வாங்கவில்லை, சலவைகளைத்தான் வாங்குகிறோம்
யுரேகா போர்ப்ஸ் என்ற நிறுவனம், துணி துவைக்கும் எந்திரம், வெற்றிடக் கருவி போன்ற புதிய கருவிகளை விற்கும் போது வாங்கியவர்களின் வீட்டுக்கே ஆள் அனுப்பி அவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுத்து விடுகிறார்கள். பொருளை வாங்கிக் கொண்டு போய் வீட்டில் சரியாக வேலை செய்யா விட்டால் திரும்பி எடுத்துக் கொள்கிறார்கள்.
உலர் அரைவை எந்திரத்துடன் பயன்படுத்தும் கையேடு ஒன்று வரும். நுண்ணலை அடுப்பில் எப்படி சமைப்பது, என்ன சமைப்பது என்று விளக்கங்களையும் சேர்த்து விற்காததால் நம்ம ஊரில் அது பிரபலமாகமலேயே இருந்தது.
மென்பொருட்கள் மிக அண்மைக் காலத்தில் நம் வாழ்க்கையில் நுழைந்தவை. கணக்குப் போட மென்பொருள், கடிதம் எழுத மென்பொருள், இணையத்தில் இணைய மென்பொருள் என்று வாங்குபவர் தாமே உருவகித்து அதன் பலனைப் பெற்றுக் கொள்கிறார். 100 ரூபாய்க்கு ஒரு குறுவட்டு கடையில் வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம், அதில் என்னென்ன இருக்கிறது என்று எப்படித் தெரியும். எதற்காக அந்த 100 ரூபாயைச் செலவழிக்கிறோம்.
'15000 ரூபாய்க்கு மைக்ரோசாப்டு ஆபிஸ் வாங்கி வாரத்துக்கு நான்கு கடிதம் எழுத மட்டும் பயன்படுத்தினால் அது உங்கள் விருப்பம். நான் அப்படி ஆயிரக்கணக்கான பேருக்கு விற்று பணம் சம்பாதித்துக் கொள்கிறேன் ' என்று பரவலாக விற்பது.
'உங்களைப் போன்று வாங்கிய இன்னொருவர் ஆபிசு 2007ல் இருக்கும் எல்லா நுணுக்கங்களையும் பயன்படுத்தக் கற்றுக் கொள்கிறார் என்றால் அது அவர் விருப்பம். '
இப்போது 2 ஆண்டுகள் கழித்து மைக்ரோசாப்டு ஆபிசு 2010 வெளி வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் விலை 40000 ரூபாய் என்றால் மேலே சொன்ன இரண்டு பேரில் யார் புதிய பதிப்பை வாங்க விரும்புவார்?
வாரத்துக்கு நாலு கடிதம் அடிக்க இருப்பதே போதும் இன்னும் 40000 ஏன் செலவு என்று முதலாமவர் இருந்து விடுவார். இன்னும் அதிகமான வசதிகளைத் தேடி இரண்டாமவர் வாங்க முன் வருவார்.
Tuesday, May 29, 2007
Wednesday, January 3, 2007
பணத்தை உறுதி செய்தல்
வணிகத்தில் பணம் கொடுக்கல்/வாங்கல் எப்போது நடக்க வேண்டும், எந்த அடிப்படையில் நடக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.
கடையில் போய் பொருள் வாங்கும் போது கூட, இதில் பல வகைகளைப் பார்க்கலாம். உணவு விடுதியில் சாப்பிடும் போது, முதலில் சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டவற்றைப் பொறுத்து பணம் கட்டி விடுகிறோம். மதியச் சாப்பாட்டின் போது நிறைய விடுதிகளில் சாப்பிடும் முன்னரே பணம் கொடுத்து சீட்டு வாங்கிக் கொள்ளும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
எப்படியானாலும், விற்பவர் தனது பொருளை சேவையை அளிப்பதற்கும் வாங்குபவர் பணத்தைக் கொடுப்பதற்கும் உள்ள கால இடைவெளி மிகக் குறைவு. நெருக்கிப் பார்த்தால் விடுதி நிர்வாகம் உள்ளே வரும் ஒவ்வொருவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு சாப்பிட அனுமதிப்பதுதான் சரியான முறை.
யார் யாரோ வருகிறார்கள், சாப்பிட்ட பிறகு காசு இல்லை என்றால் என்ன செய்வது? அதனால் பணத்தை முதலிலேயே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் பாதுகாப்பு. சாப்பிடுபவர்களுக்கும் உறுதி இருக்கிறது. இவ்வளவு பெரிய விடுதி, இவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள், கண் முன்னால் சாப்பாடு தெரிகிறது, அதனால் பணத்தைக் கொடுத்து விட்டால் சாப்பாடு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
அதே விடுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக நூறு சாப்பாடு கொண்டு வரச் சொன்னால், முன்பணம் வாங்காமல் ஆரம்பிக்க மாட்டார்கள். அதில் முடங்கும் பணம் அதிகம், நூறு சாப்பாடு கேட்பவர் அதில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நிகழ்ச்சி நடக்காமல் போய், சாப்பாடு வேண்டாம் என்று திடீரென்று தகவல் சொல்லி விட்டால், செய்து வைத்ததை விடுதியினர் என்ன செய்ய முடியும்?
ஒரு வணிக நிறுவனம், இன்னொரு வணிக நிறுவனத்துக்கு விற்கும் போது இதே போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடைகள் பல காரணிகளைப் பொறுத்து ஒவ்வொரு சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் பல வேறு வங்கிகளும், நிறுவனங்களும் நுழைக்கப்படலாம்.
மற்றபடி ஏற்றி அனுப்பிய போக்குவரத்து சீட்டைக் காட்டினால்தான் பொருள் கிடைக்கும் என்றக் கட்டுப்பாட்டின் படி, பணம் கொடுத்து போக்குவரத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற நேரடியான முறையும் பழக்கத்தில் உண்டு.
எந்த வணிகத்திலும், வெளியார் உத்தரவாதத்தை விட, வாங்குபவர்-விற்பவர்களுக்கிடையேயான நம்பிக்கை, உறவுதான் முக்கியமானது.
மென்பொருள் செய்து கொடுக்கும் நமது துறையில் எல்லாமே நம்பிக்கைதான். மென்பொருள் நிறுவனத்தின் முந்தைய நடத்தை, தற்போதைய அளவு என்று வாடிக்கையாளருக்கு நம்பிக்கை ஊட்டிய பிறகு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வாங்கிய பிறகுதான் வேலையே ஆரம்பிக்கிறோம். இதுவே பழக்கமாக இருக்கிறது.
இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட சிறு நிறுவனங்களும் பல உண்டு. ஆரம்பத்தில் பல வாடிக்கையாளர்கள் அத்தகைய அனுபவத்தைச் சுட்டிக் காட்டி, மென்பொருளை நிறுவி, செயல்படுத்திக் காட்டினால்தான் பணம் தருவேன் என்று சொன்னது கூட உண்டு. அப்போதுதான் ஆரம்பித்திருந்த நிறுவனத்தில் வேறு வழியில்லாமல் வாய்ப்புக் கிடைக்கிறதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் இறங்கி மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
முதலிலேயே பணத்தைப் போடா விட்டால் வாடிக்கையாளர் நிறுவனத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஈடுபாடு வருவது நடக்காது. பணம் கொடுக்க முன்வருவது, நமது மென்பொருளைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. அதனால் மொத்த விலையின் 10%த்தையாவது முன்பணமாக வாங்காமல் வேலை ஆரம்பிப்பதே இல்லை என்று செயல்பட வேண்டும்.
கடையில் போய் பொருள் வாங்கும் போது கூட, இதில் பல வகைகளைப் பார்க்கலாம். உணவு விடுதியில் சாப்பிடும் போது, முதலில் சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டவற்றைப் பொறுத்து பணம் கட்டி விடுகிறோம். மதியச் சாப்பாட்டின் போது நிறைய விடுதிகளில் சாப்பிடும் முன்னரே பணம் கொடுத்து சீட்டு வாங்கிக் கொள்ளும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
எப்படியானாலும், விற்பவர் தனது பொருளை சேவையை அளிப்பதற்கும் வாங்குபவர் பணத்தைக் கொடுப்பதற்கும் உள்ள கால இடைவெளி மிகக் குறைவு. நெருக்கிப் பார்த்தால் விடுதி நிர்வாகம் உள்ளே வரும் ஒவ்வொருவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு சாப்பிட அனுமதிப்பதுதான் சரியான முறை.
யார் யாரோ வருகிறார்கள், சாப்பிட்ட பிறகு காசு இல்லை என்றால் என்ன செய்வது? அதனால் பணத்தை முதலிலேயே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் பாதுகாப்பு. சாப்பிடுபவர்களுக்கும் உறுதி இருக்கிறது. இவ்வளவு பெரிய விடுதி, இவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள், கண் முன்னால் சாப்பாடு தெரிகிறது, அதனால் பணத்தைக் கொடுத்து விட்டால் சாப்பாடு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
அதே விடுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக நூறு சாப்பாடு கொண்டு வரச் சொன்னால், முன்பணம் வாங்காமல் ஆரம்பிக்க மாட்டார்கள். அதில் முடங்கும் பணம் அதிகம், நூறு சாப்பாடு கேட்பவர் அதில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நிகழ்ச்சி நடக்காமல் போய், சாப்பாடு வேண்டாம் என்று திடீரென்று தகவல் சொல்லி விட்டால், செய்து வைத்ததை விடுதியினர் என்ன செய்ய முடியும்?
ஒரு வணிக நிறுவனம், இன்னொரு வணிக நிறுவனத்துக்கு விற்கும் போது இதே போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடைகள் பல காரணிகளைப் பொறுத்து ஒவ்வொரு சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
- வாங்குபவர் முழுத்தொகையையும் முன் பணமாகக் கொடுத்து விட்டுக் காத்திருப்பது.
பொருள் விற்கும் நிறுவனம் மிகப் பெரியதாகவும் நம்பகத்துக்குரியதாகவும் இருந்து, விற்கும் பொருளின் சந்தைத் தேவை அதிகமாக இருந்தால், அவர்கள் விருப்பப்படி சட்டம் போடலாம். ஒரு மாதம் முன்பே பணத்தைக் கட்டினால்தான் சரக்கு அனுப்புவோம், என்று சொல்லி விட்டால் வாங்குபவர் பணத்தைக் கட்டி வாங்கித்தான் ஆக வேண்டும்.
இதில் முன்கூட்டியே பணத்தைக் கட்டி விட்ட வாங்குபவர், பொருளின் தரத்தில் குறை இருந்தாலோ, சரியான நேரத்தில் பொருள் வந்து சேராவிட்டாலோ, விற்பனை நிறுவனத்தை தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வாங்குபவர் கையில் எந்தப் பிடியும் இல்லை. - விற்பவர், பொருள்/சேவையை வழங்கி விட்டு, அது வாடிக்கையாளரை நிறைவு செய்து விட்ட பிறகு பணத்தை பெற்றுக் கொள்வது.
இது இன்னொரு எல்லை. இங்கு வாங்குபவருக்கு முழு ஆதாயம். 'பொருளைக் கொண்டு வா, எல்லாம் சரியாக இருந்தால் பணத்தைப் பெற்றுக் கொள், பணம் உடனேயே கிடைக்கலாம், அல்லது சில நாட்கள் கழிந்து கிடைக்கலாம்'.
பொருளை அனுப்பி விட்டு வாங்கியவர் பின்னால் அலைய வேண்டியதுதான். பெரும்பாலான கொடுக்கல் வாங்கல் இந்த வகையில்தான் நடக்கின்றன. வாங்கும் நிறுவனத்தின் வலிமை, பொருளின் சந்தையில் கடும் போட்டி நிலவுதல் என்று விற்பவருக்கு வேறு வழி இல்லாமல் போய் விடுகிறது. - வங்கி உத்தரவாதங்கள்
உள்நாட்டு வணிகத்தில் மேலே சொன்ன இரண்டு முறைகளில் ஏதாவது தகராறு வந்தாலும் தீர்த்துக் கொள்ள, பேருந்தில் சீட்டு வாங்கிப் போய் இறங்கி விடலாம். வெளிநாடு, அல்லது அதிக தூரத்தில் இருக்கும் நிறுவனங்கள் வணிகம் செய்யும் போது, இது போல் ஒரே நிறுவனம் எல்லா சுமையையும் ஏற்றுக் கொள்வது நடக்காது. இதற்காக பெயர் பெற்ற வங்கி ஒன்றை இடையில் வைத்துக் கொள்ளலாம்.
பொருள் ஏற்றுமதி,இறக்குமதியில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது லெட்டர் ஆஃப் கிரெடிட் எனப்படும் வங்கியின் நம்பிக்கைக் கடிதம். என்ன விலை, என்ன தரம் என்று விற்பவரும் வாங்குபவரும் முடிவு செய்து கொண்ட பிறகு ஒரு விற்பனை ஒப்பந்தத்தை போட்டுக் கொள்வார்கள். அந்த ஒப்பந்தப்படி பொருளை அனுப்பி விட்டால் பணம் கிடைத்து விடும் என்று உறுதியை விற்பனையாளருக்கு அளிக்க, வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பனையாளருக்கு ஒரு கடிதம் அனுப்பக் கேட்டுக் கொள்வார்.
அந்தக் கடிதத்தில், 'இன்ன ஆவணங்களை எங்கள் வங்கியில் சமர்ப்பித்தால் உங்களது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விவரப்படி பணம் கொடுப்பதாக உறுதி கூறுகிறோம்' என்று வங்கி சொல்லியிருக்கும். இந்த ஆவணங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்.
பொதுவாக,- பொருளை அனுப்பி விட்டதை உறுதி செய்யும் போக்குவரத்து சீட்டு,
- பொருளின தரத்தை உறுதி செய்யும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ்,
- பொருளின் எண்ணிக்கை, விலை மற்றும் மதிப்பைக் குறிப்பிடும் விற்பனை சீட்டு,
- பொருளின் எடை, பொதிகளின் எண்ணிக்கை விவரங்களைத் தரும் பொதிச் சீட்டு போன்றவற்றைக் கேட்பார்கள்.
உற்பத்தியை முடித்து, தர நிர்ணயம் செய்து, சரியாக பொதிந்து கப்பலில் ஏற்றிய சான்றைப் பெற்று வங்கிக்கு அனுப்பினால் பணம் கிடைத்து விடும். வாங்குபவர் அந்தப் பொருளை எடுத்துக்கொள்ளாமலோ, எடுத்துக் கொண்ட பிறகு பணம் கொடுக்காமலோ இருக்க வழி இல்லை. இந்த உறுதி விற்பவருக்குக் கிடைத்து விடுகிறது.
இன்ன பொருளை, இன்ன தரத்தில், இன்ன வகையில் பொதிந்து அனுப்பி விட்டார்கள் என்று மூன்றாம் தரப்புகளின் சான்று மூலம் உறுதி கிடைத்து விட்ட பிறகுதான் பணம் அனுப்புவதால் வாங்குபவருக்கும் உறுதியின்மை குறைவு.
- பொருளை அனுப்பி விட்டதை உறுதி செய்யும் போக்குவரத்து சீட்டு,
இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் பல வேறு வங்கிகளும், நிறுவனங்களும் நுழைக்கப்படலாம்.
மற்றபடி ஏற்றி அனுப்பிய போக்குவரத்து சீட்டைக் காட்டினால்தான் பொருள் கிடைக்கும் என்றக் கட்டுப்பாட்டின் படி, பணம் கொடுத்து போக்குவரத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற நேரடியான முறையும் பழக்கத்தில் உண்டு.
எந்த வணிகத்திலும், வெளியார் உத்தரவாதத்தை விட, வாங்குபவர்-விற்பவர்களுக்கிடையேயான நம்பிக்கை, உறவுதான் முக்கியமானது.
மென்பொருள் செய்து கொடுக்கும் நமது துறையில் எல்லாமே நம்பிக்கைதான். மென்பொருள் நிறுவனத்தின் முந்தைய நடத்தை, தற்போதைய அளவு என்று வாடிக்கையாளருக்கு நம்பிக்கை ஊட்டிய பிறகு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வாங்கிய பிறகுதான் வேலையே ஆரம்பிக்கிறோம். இதுவே பழக்கமாக இருக்கிறது.
இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட சிறு நிறுவனங்களும் பல உண்டு. ஆரம்பத்தில் பல வாடிக்கையாளர்கள் அத்தகைய அனுபவத்தைச் சுட்டிக் காட்டி, மென்பொருளை நிறுவி, செயல்படுத்திக் காட்டினால்தான் பணம் தருவேன் என்று சொன்னது கூட உண்டு. அப்போதுதான் ஆரம்பித்திருந்த நிறுவனத்தில் வேறு வழியில்லாமல் வாய்ப்புக் கிடைக்கிறதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் இறங்கி மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
முதலிலேயே பணத்தைப் போடா விட்டால் வாடிக்கையாளர் நிறுவனத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஈடுபாடு வருவது நடக்காது. பணம் கொடுக்க முன்வருவது, நமது மென்பொருளைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. அதனால் மொத்த விலையின் 10%த்தையாவது முன்பணமாக வாங்காமல் வேலை ஆரம்பிப்பதே இல்லை என்று செயல்பட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)