நான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததே இல்லை. என்னுடைய கருத்துக்கள் எல்லாம் படித்தறிவில் வந்தவைதான். அதை மனதில் வைத்துக் கொண்டு புரிந்து கொள்ளுங்கள் :-)
1. முதலீடு செய்ய விரும்பும் நிறுவனத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளுங்கள். யார் அதை ஆரம்பித்தார்கள், தற்போதைய உரிமையாளர்கள் யார் யார், நிர்வாகிப்பது யார், அந்தத் துறை எப்படி வளர்கிறது, துறையில் இந்த நிறுவனத்துக்கு எவ்வளவு சந்தைப் பங்கு என்று புரிந்து கொள்ளுங்கள்.
புரியாத நிறுவனத்தில் பங்கின் விலை ஏற்ற இறக்கங்களை வைத்து மட்டும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஆண்டு தோறும், காலாண்டுகள் தோறும் வெளியிடும் நிதிநிலை அறிக்கைகளை படிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். Balance Sheet ல் இருக்கும் ஒவ்வொரு விபரமும் புரிவது வரை அந்த நிறுவனத்தைப் பற்று உங்களுக்குத் தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
2. குடும்பத் தேவைகள், எதிர்கால சேமிப்பு, குழந்தைகள் கல்வி, மருத்துவத் தேவைகள் இவை எல்லாவற்றுக்கும் பணம் ஒதுக்கியது போக எஞ்சிய பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய ஒதுக்குங்கள்.
3. ஒரே நிறுவனத்தின் பங்குகளை வாங்காமல், மேலே சொன்ன மாதிரி ஆய்வு செய்து 4-5 நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விட்டு தீர்மானித்த அளவில் பங்குகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளில் பணம் சம்பாதிக்க முயற்சிக்காமல், நீண்ட காலம் வைத்திருந்து முதலீட்டை வளர்க்க முயற்சிக்கலாம். 4,5ல் ஒன்று இறங்கினாலும் மற்றவை ஏறும்படி இருக்க வேண்டும்.
4. ஏதாவது நிறுவனம் முழுவதுமாக சறுகிப் போகிறது என்று தோன்றினால் (சமீபத்திய சத்தியம்) அதை பட்டியலில் இருந்து நீக்கி விட்டு வேறு நிறுவனத்தைச் சேர்த்துக் கொள்ளலாம்.
வளத்தைச் சேர்க்கும் பாதையில் நடக்கும் அனுபவங்கள் பிறருக்கும் உதவியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில்
Showing posts with label பணம்். Show all posts
Showing posts with label பணம்். Show all posts
Friday, August 7, 2009
Tuesday, April 14, 2009
உலகப் பொருளாதார நெருக்கடி - 1
இப்போது நாமெல்லாம் சிக்கிக் கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணி என்ன?
கதையை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் தெரியும்.
பணம் என்பது எப்படி ஆரம்பித்தது?
பண்ட மாற்று முறையில் 'நான் உழைத்து செய்த பொருளை உனக்குத் தருகிறேன், நீ உழைத்து செய்த பொருளை எனக்குத் தா' என்று பரிமாறிக் கொண்டார்கள்.
நான் நெசவு செய்து துணி வைத்திருக்கிறேன். நாளைய சாப்பாட்டுக்கு நெல் வாங்கி வர வேண்டும். விவசாயம் செய்யும் நண்பரின் வீட்டுக்குப் போய் துணியைக் கொடுத்து விட்டு தேவையான நெல்லை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.
அவருக்கு இப்போது துணி தேவையில்லை என்றால் எனக்கு நெல் கிடைக்காது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கண்டுபிடித்ததுதான் பணம். துணி விற்று செலாவணியாக பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருளை திரட்டிக் கொள்வேன். நெல் வாங்குவதற்கு அதைக் கொடுத்தால் போதும்.
பண்ட மாற்றும் பரிமாற்றங்களுக்காக பணம் பயன்படுதலும்
தங்கம் பணமாக புழங்க ஆரம்பிக்கிறது. தேவைக்கு மேல் தங்கம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொண்டு வைப்பது போல, ஊரின் பொற்கொல்லரிடம் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அவரிடம் கொண்டு தங்கத்தைக் கொடுத்து ஒரு சீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர் நாணயமானவர். எந்த நேரத்தில் போய் சீட்டைக் காட்டிக் கேட்டாலும் தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அப்படி பாதுகாப்பாக பணத்தை வைத்திருப்பதற்கு கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்கிறார்.
தங்க நகையாக இல்லாமல் நாணயமாக வரும் தங்கத்தை தனித்தனியாக வைத்திருக்கத் தேவையில்லை. எல்லா பணத்தையும் சேர்த்து வைத்து கணக்கை மட்டும் இன்னாருக்கு இவ்வளவு தர வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டால் போதும்.
இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பொற்கொல்லர் கொஞ்ச நாள் போக ஒன்றை கவனிக்கிறார்.
வங்கித் தொழிலின் அடிப்படை
நாட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு அச்சடித்து வெளியிடும் நோட்டுகள் மட்டும் காரணம் இல்லை. பெரும்பாலான பண உருவாக்கம் வர்த்தக வங்கிகள் வைப்புத் தொகை சேகரித்து கடன் கொடுப்பதால் உருவாகிறது.
வங்கிகள் இப்படித்தான் பணப் புழக்கத்தை அதிகரிக்கின்றன.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி. அங்கும் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை பாதுகாப்பான அரசாங்க பத்திரங்கள் வாங்கி வைக்க பயன்படுத்த வேண்டும். மீதிப் பகுதியை கடன் கொடுக்க பயன்படுத்தலாம். கடனட்டைகள் மூலமாக வழங்கப்படும் கடன்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வந்து விடும்.
இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கண்கட்டி விட்டு தமது ஆதாயத்தை உயர்த்த முற்படுபவர்கள் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
விளையாட்டுப் பார்வை அரங்கில் எல்லோரும் உட்கார்ந்திருந்தால் வசதியாக மறைக்காமல் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஒரே ஒருவர் எழுந்து நின்றார் அவருக்கு மட்டும் ஆதாயம். விளையாட்டு நன்றாக தெரியும். அவரைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், கடைசியில் எல்லோரும் நின்று கொண்டே பார்த்தும் எல்லோரும் இருந்து பார்க்கும் அளவுக்குத்தான் விளையாட்டுத் தெரியும். கூடவே கால் வலிதான் மிஞ்சும்.
அது போல கண்காணிப்பு நிறுவனங்களின் நெறிமுறைகளை ஒரு வங்கி தவிர்க்க முயன்று வெற்றி பெற்று விட்டால் அந்த வங்கியின் ஆதாய வீதம் மளமளவென்று ஏறும். அதில் வேலை பார்க்கும் மேலாளர்களுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அவர்களுடன் போட்டி போட்டு ஒவ்வொருவராக அந்த வழிகளை கண்டு கொண்டு தாமும் சுற்றிப் போக ஆரம்பிப்பார்கள். கடைசியில் மொத்த அமைப்பும் குலைந்து போவதுதான் நடக்கும்.
கதையை ஆரம்பத்திலிருந்தே படித்தால்தான் தெரியும்.
பணம் என்பது எப்படி ஆரம்பித்தது?
பண்ட மாற்று முறையில் 'நான் உழைத்து செய்த பொருளை உனக்குத் தருகிறேன், நீ உழைத்து செய்த பொருளை எனக்குத் தா' என்று பரிமாறிக் கொண்டார்கள்.
நான் நெசவு செய்து துணி வைத்திருக்கிறேன். நாளைய சாப்பாட்டுக்கு நெல் வாங்கி வர வேண்டும். விவசாயம் செய்யும் நண்பரின் வீட்டுக்குப் போய் துணியைக் கொடுத்து விட்டு தேவையான நெல்லை வாங்கிக் கொண்டு வர வேண்டும்.
அவருக்கு இப்போது துணி தேவையில்லை என்றால் எனக்கு நெல் கிடைக்காது. இந்த சிக்கலைத் தீர்க்கக் கண்டுபிடித்ததுதான் பணம். துணி விற்று செலாவணியாக பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படும் பொருளை திரட்டிக் கொள்வேன். நெல் வாங்குவதற்கு அதைக் கொடுத்தால் போதும்.
பண்ட மாற்றும் பரிமாற்றங்களுக்காக பணம் பயன்படுதலும்
தங்கம் பணமாக புழங்க ஆரம்பிக்கிறது. தேவைக்கு மேல் தங்கம் வீட்டில் இருக்கிறது. அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் கொண்டு வைப்பது போல, ஊரின் பொற்கொல்லரிடம் தங்கத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. அவரிடம் கொண்டு தங்கத்தைக் கொடுத்து ஒரு சீட்டை வாங்கிக் கொள்கிறார்கள். அவர் நாணயமானவர். எந்த நேரத்தில் போய் சீட்டைக் காட்டிக் கேட்டாலும் தங்கத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார். அப்படி பாதுகாப்பாக பணத்தை வைத்திருப்பதற்கு கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொள்கிறார்.
தங்க நகையாக இல்லாமல் நாணயமாக வரும் தங்கத்தை தனித்தனியாக வைத்திருக்கத் தேவையில்லை. எல்லா பணத்தையும் சேர்த்து வைத்து கணக்கை மட்டும் இன்னாருக்கு இவ்வளவு தர வேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டால் போதும்.
இது வரை எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. பொற்கொல்லர் கொஞ்ச நாள் போக ஒன்றை கவனிக்கிறார்.
வங்கித் தொழிலின் அடிப்படை
நாட்டில் பணப் புழக்கம் அதிகரிப்பதற்கு அச்சடித்து வெளியிடும் நோட்டுகள் மட்டும் காரணம் இல்லை. பெரும்பாலான பண உருவாக்கம் வர்த்தக வங்கிகள் வைப்புத் தொகை சேகரித்து கடன் கொடுப்பதால் உருவாகிறது.
வங்கிகள் இப்படித்தான் பணப் புழக்கத்தை அதிகரிக்கின்றன.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி இருப்பது போல அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் எனப்படும் மத்திய வங்கி. அங்கும் வைப்புத் தொகையில் ஒரு பகுதியை பாதுகாப்பான அரசாங்க பத்திரங்கள் வாங்கி வைக்க பயன்படுத்த வேண்டும். மீதிப் பகுதியை கடன் கொடுக்க பயன்படுத்தலாம். கடனட்டைகள் மூலமாக வழங்கப்படும் கடன்களும் இந்தக் கட்டுப்பாடுகளுக்குள் வந்து விடும்.
இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் கண்கட்டி விட்டு தமது ஆதாயத்தை உயர்த்த முற்படுபவர்கள் அதற்கான வழிகளை கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
விளையாட்டுப் பார்வை அரங்கில் எல்லோரும் உட்கார்ந்திருந்தால் வசதியாக மறைக்காமல் ஆட்டத்தைப் பார்க்கலாம். ஒரே ஒருவர் எழுந்து நின்றார் அவருக்கு மட்டும் ஆதாயம். விளையாட்டு நன்றாக தெரியும். அவரைப் பார்த்து மற்றவர்களும் எழுந்து நிற்க ஆரம்பித்து விட்டால், கடைசியில் எல்லோரும் நின்று கொண்டே பார்த்தும் எல்லோரும் இருந்து பார்க்கும் அளவுக்குத்தான் விளையாட்டுத் தெரியும். கூடவே கால் வலிதான் மிஞ்சும்.
அது போல கண்காணிப்பு நிறுவனங்களின் நெறிமுறைகளை ஒரு வங்கி தவிர்க்க முயன்று வெற்றி பெற்று விட்டால் அந்த வங்கியின் ஆதாய வீதம் மளமளவென்று ஏறும். அதில் வேலை பார்க்கும் மேலாளர்களுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் ஊக்கத்தொகையாக கிடைக்கும். அவர்களுடன் போட்டி போட்டு ஒவ்வொருவராக அந்த வழிகளை கண்டு கொண்டு தாமும் சுற்றிப் போக ஆரம்பிப்பார்கள். கடைசியில் மொத்த அமைப்பும் குலைந்து போவதுதான் நடக்கும்.
Tuesday, September 23, 2008
செலாவணி பரிமாற்ற தெரிவு ஒப்பந்தம்
பணம் வருவது உறுதியாக இருந்தால் முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். பணம் வருவது உறுதியில்லாமல் இருந்தால் என்ன செயவது?
ஒரு ஏற்றுமதியாளர் 3 மாதங்களுக்குள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை (10000 டாலர்) டாலர்களில் பெறுவதாக எதிர்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்றுமதிக்கான உடன்பாடு இவருக்குக் கிடைப்பது 2 மாதம் கழித்துதான் உறுதியாகும். இன்றைக்கு உடன்பாட்டுக்கான விலையை அனுப்பி வைக்க வேண்டும்.
உள்ளூர் சந்தையில் முந்திரிப் பருப்பை ரூபாய்க்கு வாங்கி டாலருக்கு விற்க வேண்டும். இன்று 1 டாலர் = 46 ரூபாய்கள் செலாவணி வீதம் என்ற கணக்கில் விலை நிர்ணயிக்கிறார். இந்த ஆர்டர் கிடைத்து ஏற்றுமதி செய்து விட்டால் வருமானம் வரும், டாலரை 46 ரூபாய் வீதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆர்டர் கிடைக்கா விட்டால், மாற்றுவதற்கு டாலர் இருக்காது.
இந்த நிலையில் Forward ஒப்பந்தம் என்ற முன்பேர ஒப்பந்தம் சரிப்படாது. ஆர்டர் கிடைக்காமல் போய், டாலரின் மதிப்பு ஏறி விட்டால், (1 டாலர் = 50 ரூபாய்) இவர் ஒப்பந்தப்படி 10000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய் என்ற வீதத்தில் விற்றே தீர வேண்டும். அதற்கு சந்தையில் 50 ரூபாய் வீதத்தில் டாலர் வாங்கி 46 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும்.
Options எனப்படும் தெரிவு ஒப்பந்தத்தில் விருப்பப்பட்டால் விற்கலாம் என்ற தெரிவு இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் 10000 டாலர்களை விற்கும் தெரிவு, ஒப்பந்ததாரருக்குக் கிடைக்கிறது. அவர் விரும்பா விட்டால் விற்காமல் இருந்து விடலாம்.
இந்த தெரிவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான கட்டணங்கள் முன்பேர ஒப்பந்தங்களை விட அதிகமாக இருக்கும்.
ஒரு ஏற்றுமதியாளர் 3 மாதங்களுக்குள் முந்திரிப்பருப்பு ஏற்றுமதி செய்து அதற்கான பணத்தை (10000 டாலர்) டாலர்களில் பெறுவதாக எதிர்பார்க்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ஏற்றுமதிக்கான உடன்பாடு இவருக்குக் கிடைப்பது 2 மாதம் கழித்துதான் உறுதியாகும். இன்றைக்கு உடன்பாட்டுக்கான விலையை அனுப்பி வைக்க வேண்டும்.
உள்ளூர் சந்தையில் முந்திரிப் பருப்பை ரூபாய்க்கு வாங்கி டாலருக்கு விற்க வேண்டும். இன்று 1 டாலர் = 46 ரூபாய்கள் செலாவணி வீதம் என்ற கணக்கில் விலை நிர்ணயிக்கிறார். இந்த ஆர்டர் கிடைத்து ஏற்றுமதி செய்து விட்டால் வருமானம் வரும், டாலரை 46 ரூபாய் வீதத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு வேளை ஆர்டர் கிடைக்கா விட்டால், மாற்றுவதற்கு டாலர் இருக்காது.
இந்த நிலையில் Forward ஒப்பந்தம் என்ற முன்பேர ஒப்பந்தம் சரிப்படாது. ஆர்டர் கிடைக்காமல் போய், டாலரின் மதிப்பு ஏறி விட்டால், (1 டாலர் = 50 ரூபாய்) இவர் ஒப்பந்தப்படி 10000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய் என்ற வீதத்தில் விற்றே தீர வேண்டும். அதற்கு சந்தையில் 50 ரூபாய் வீதத்தில் டாலர் வாங்கி 46 ரூபாய்க்கு விற்க வேண்டியிருக்கும்.
Options எனப்படும் தெரிவு ஒப்பந்தத்தில் விருப்பப்பட்டால் விற்கலாம் என்ற தெரிவு இருக்கும். 90 நாட்களுக்குப் பிறகு 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் 10000 டாலர்களை விற்கும் தெரிவு, ஒப்பந்ததாரருக்குக் கிடைக்கிறது. அவர் விரும்பா விட்டால் விற்காமல் இருந்து விடலாம்.
இந்த தெரிவு ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கான கட்டணங்கள் முன்பேர ஒப்பந்தங்களை விட அதிகமாக இருக்கும்.
Monday, September 22, 2008
முன்பேர ஒப்பந்தம்
forward trading என்பதை முன்பேர வணிகம் என்று வளர் தொழில் பத்திரிகையில் கையாளுகிறார்கள். எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம் என்பதை விட முன்பேர ஒப்பந்தம் கைக்கடக்கமாக இருக்கிறது!
இது போன்று முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதால் என்ன நடக்கும். ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
மாதா மாதம் 10000 டாலர்கள் வருமானம் பெறும் ஒருவர் மாதம் 5000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் விற்பதாக முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர்=46 ரூபாய்
ஒப்பந்தத்துக்கான கட்டணத் தொகை வீணாக வங்கிக்குக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தமே இல்லாமல் இருந்தாலும் சந்தையில் டாலரை விற்று 46 ரூபாய் பெற்றிருக்கலாம்.
2. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 48 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய்க்கே டாலர்களை விற்றுத் தொலைக்க வேண்டிய கட்டாயம். ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு, 10000 ரூபாய்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்.
3. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 40 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய் கிடைத்து விடும். ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு 30000 ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு
அ. டாலர் வருமானம் வருவது உறுதியாக இருக்க வேண்டும். வருமானத்தின் அளவோ நேரமோ உறுதியின்றி இருந்தால், முன்பேர ஒப்பந்தம் ஒத்து வராது.
ஆ. நாம் எதிர்பாராத திசையில் செலாவணி வீதம் போனால், அதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாத மனநிலை வேண்டும்.
இது போன்று முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதால் என்ன நடக்கும். ஒரு நடைமுறை உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.
மாதா மாதம் 10000 டாலர்கள் வருமானம் பெறும் ஒருவர் மாதம் 5000 டாலர்களை 1 டாலர் = 46 ரூபாய்கள் என்ற வீதத்தில் விற்பதாக முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர்=46 ரூபாய்
ஒப்பந்தத்துக்கான கட்டணத் தொகை வீணாக வங்கிக்குக் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தமே இல்லாமல் இருந்தாலும் சந்தையில் டாலரை விற்று 46 ரூபாய் பெற்றிருக்கலாம்.
2. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 48 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய்க்கே டாலர்களை விற்றுத் தொலைக்க வேண்டிய கட்டாயம். ஒப்பந்தம் செய்யாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு, 10000 ரூபாய்கள் கூடுதலாக கிடைத்திருக்கும்.
3. சந்தையில் டாலர் ரூபாய் செலாவணி வீதம் : 1 டாலர் = 40 ரூபாய்
ஒப்பந்தம் செய்து கொண்டதால் 46 ரூபாய் கிடைத்து விடும். ஒப்பந்தம் இல்லாமல் இருந்திருந்தால் 5000 டாலர்களுக்கு 30000 ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருக்கும்.
முன்பேர ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு
அ. டாலர் வருமானம் வருவது உறுதியாக இருக்க வேண்டும். வருமானத்தின் அளவோ நேரமோ உறுதியின்றி இருந்தால், முன்பேர ஒப்பந்தம் ஒத்து வராது.
ஆ. நாம் எதிர்பாராத திசையில் செலாவணி வீதம் போனால், அதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாத மனநிலை வேண்டும்.
Friday, September 19, 2008
எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்
போன வாரம் ஒரு நாள். வெளி நாட்டில் வேலை பார்க்கும், தற்போது விடுமுறையில் வந்திருக்கும் உறவினர் ஒருவர் காலையில் எகனாமிக் டைம்ஸ் நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார்.
"என்ன! டாலர் 46 ரூபாய் ஆகி விட்டதா." உடனேயே அருகிலிருந்த அவரது மனைவியிடம், "கையிலிருக்கும் டாலரை எல்லாம் இன்னைக்கே ரூபாயா மாத்திரலாம்" என்றார்.
ஒரு டாலருக்கு 43, 44 என்று கபடி ஆடிக் கொண்டிருந்த நாணய மாற்று வீதம் ஒரு வாரத்துக்குள் 5%க்கு மேல் மாறி ஒரு டாலருக்கு 46 ரூபாய், அடுத்த நாளே 46.90 ரூபாய் என்று கூட ஆகி விட்டிருந்தது.
இந்த வரைபடத்தைப் பார்த்தால் டாலர் ரூபாய் வீதத்தின் ஊசலாட்டம் புரியும்.
http://ichart.finance.yahoo.com/1y?usdinr=x
மேலே சொன்ன உரையாடலின் பின்னணி என்ன?
'திடீரென்று டாலரின் மதிப்பு ஏறியிருக்கிறது. இதே நிலையில் இன்னும் பல நாட்கள் தாக்குப் பிடிக்காது. மீண்டும் அதன் மதிப்பு இறங்குவதற்கு முன்னே நம்ம கையில் இருப்பதை ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம்'. அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு குறையும் என்று இவர் நம்புகிறார்.
பொதுவாக, டாலரில் சம்பளம் வாங்குபவர்கள், டாலருக்கு பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் - வருங்காலத்தில் டாலரில் வருமானம் கிடைக்க இருப்பவர்கள் - இந்தக் கோணத்தில் நினைக்கத் தலைப்படுவார்கள். 'இனி மேல் ஏறா விட்டாலும் பரவாயில்லை. இப்போ இருக்கிற மதிப்பில் இருந்தாலே நமக்கு லாபம்தான்'
இதே செய்தியைப் படிக்கும் இன்னொருவர் வேறு மாதிரி நினைக்கலாம். 'என்னடா, ஒரு டாலருக்கு 46 ரூபாய் ஆகி விட்டது. இப்படியே போனால், இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு டாலருக்கு 50 ரூபாய் என்று ஆகி விடலாம்.' அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏறும் என்று அவர் நம்புகிறார்.
டாலரில் பணம் கொடுக்க வேண்டியிருப்பவர்கள் - இறக்குமதி செய்பவர்கள், வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியிருப்பவர்கள் - இப்படி கவலைப்படுவார்கள். வரும் நாட்களில் டாலரின் மதிப்பு இன்னும் ஏறி விட்டால் நமக்கு செலவு அதிகமாகி இழப்பு ஏற்படும். இதே மதிப்பில் நமக்கு டாலர் கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.
இப்படி டாலர் எதிர்கால வரவு இருப்பவர்கள் ஒரு புறமும் தேவை இருப்பவர்கள் மறுபுறமும் இருப்பவர்களை இணைப்பது எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்.
ஏற்றமதி செய்பவரைப் பொறுத்தவரை
'1 டாலருக்கு 44 ரூபாய் கணக்கில் விலை நிர்ணயித்து 10,000 டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்கிறேன். வாடிக்கையாளரிடமிருந்து டாலர் எனக்கு வந்து சேர 1 மாதம் பிடிக்கலாம்.
அப்போது 1 டாலருக்கு 46 ரூபாய் வீதத்தில் மாற்ற முடிந்தால் 4,60,000 ரூபாய்கள் கிடைக்கும். ஒரு வேளை விலை சரிந்து 42க்கோ, 40க்கோ போனால் பேரிழப்பு (4,.4 லட்சம் ரூபாய் வர வேண்டும் என்ற கணக்கு தவறிப் போய் 4.2 லட்சம் அல்லது 4 லட்சம்தான் கையில் கிடைக்கும்).
பேசாமல், ஒரு மாதம் கழித்து 46 ரூபாய்க்கு 1 டாலர் என்று விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.'
யாரிடம் இவர் ஒப்பந்தம் போடுவார்?
இறக்குமதி செய்பவர்
'10,000 டாலர் மதிப்பிலான பொருளை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். ஒரு மாதம் கழித்து பணம் கொடுக்கும் நேரம் வரும் போது டாலரிம் மதிப்பு 50 ரூபாய் என்று ஆகி விட்டால் 5 லட்சம் கொடுக்க வேண்டி வரும். இதே 46 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் 4.6 லட்ச ரூபாய்களில் வேலை முடிந்து விடும்.'
இப்படி இரண்டு பேரும் 46 ரூபாய்க்கு ஒரு மாதம் கழித்து டாலர்களை பரிமாறிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Forward Contract எனப்படும் எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படை இதுதான்.
நடைமுறையில் ஏற்றுமதியாளரும் இறக்குமதியாளரும் நேரடியாக ஒப்பந்தம் போடுவதில்லை. இடைத் தரகர்களாக வங்கிகள் இருப்பார்கள்.
"என்ன! டாலர் 46 ரூபாய் ஆகி விட்டதா." உடனேயே அருகிலிருந்த அவரது மனைவியிடம், "கையிலிருக்கும் டாலரை எல்லாம் இன்னைக்கே ரூபாயா மாத்திரலாம்" என்றார்.
ஒரு டாலருக்கு 43, 44 என்று கபடி ஆடிக் கொண்டிருந்த நாணய மாற்று வீதம் ஒரு வாரத்துக்குள் 5%க்கு மேல் மாறி ஒரு டாலருக்கு 46 ரூபாய், அடுத்த நாளே 46.90 ரூபாய் என்று கூட ஆகி விட்டிருந்தது.
இந்த வரைபடத்தைப் பார்த்தால் டாலர் ரூபாய் வீதத்தின் ஊசலாட்டம் புரியும்.
http://ichart.finance.yahoo.com/1y?usdinr=x
மேலே சொன்ன உரையாடலின் பின்னணி என்ன?
'திடீரென்று டாலரின் மதிப்பு ஏறியிருக்கிறது. இதே நிலையில் இன்னும் பல நாட்கள் தாக்குப் பிடிக்காது. மீண்டும் அதன் மதிப்பு இறங்குவதற்கு முன்னே நம்ம கையில் இருப்பதை ரூபாயாக மாற்றிக் கொள்ளலாம்'. அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு குறையும் என்று இவர் நம்புகிறார்.
பொதுவாக, டாலரில் சம்பளம் வாங்குபவர்கள், டாலருக்கு பொருள் ஏற்றுமதி செய்பவர்கள் - வருங்காலத்தில் டாலரில் வருமானம் கிடைக்க இருப்பவர்கள் - இந்தக் கோணத்தில் நினைக்கத் தலைப்படுவார்கள். 'இனி மேல் ஏறா விட்டாலும் பரவாயில்லை. இப்போ இருக்கிற மதிப்பில் இருந்தாலே நமக்கு லாபம்தான்'
இதே செய்தியைப் படிக்கும் இன்னொருவர் வேறு மாதிரி நினைக்கலாம். 'என்னடா, ஒரு டாலருக்கு 46 ரூபாய் ஆகி விட்டது. இப்படியே போனால், இன்னும் ஓரிரு மாதங்களில் ஒரு டாலருக்கு 50 ரூபாய் என்று ஆகி விடலாம்.' அதாவது வரும் நாட்களில் டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏறும் என்று அவர் நம்புகிறார்.
டாலரில் பணம் கொடுக்க வேண்டியிருப்பவர்கள் - இறக்குமதி செய்பவர்கள், வெளி நாட்டிலிருந்து கடன் வாங்கியிருப்பவர்கள் - இப்படி கவலைப்படுவார்கள். வரும் நாட்களில் டாலரின் மதிப்பு இன்னும் ஏறி விட்டால் நமக்கு செலவு அதிகமாகி இழப்பு ஏற்படும். இதே மதிப்பில் நமக்கு டாலர் கிடைத்தால் போதும் என்று நினைப்பார்கள்.
இப்படி டாலர் எதிர்கால வரவு இருப்பவர்கள் ஒரு புறமும் தேவை இருப்பவர்கள் மறுபுறமும் இருப்பவர்களை இணைப்பது எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தம்.
ஏற்றமதி செய்பவரைப் பொறுத்தவரை
'1 டாலருக்கு 44 ரூபாய் கணக்கில் விலை நிர்ணயித்து 10,000 டாலர் மதிப்பிலான பொருள்களை ஏற்றுமதி செய்கிறேன். வாடிக்கையாளரிடமிருந்து டாலர் எனக்கு வந்து சேர 1 மாதம் பிடிக்கலாம்.
அப்போது 1 டாலருக்கு 46 ரூபாய் வீதத்தில் மாற்ற முடிந்தால் 4,60,000 ரூபாய்கள் கிடைக்கும். ஒரு வேளை விலை சரிந்து 42க்கோ, 40க்கோ போனால் பேரிழப்பு (4,.4 லட்சம் ரூபாய் வர வேண்டும் என்ற கணக்கு தவறிப் போய் 4.2 லட்சம் அல்லது 4 லட்சம்தான் கையில் கிடைக்கும்).
பேசாமல், ஒரு மாதம் கழித்து 46 ரூபாய்க்கு 1 டாலர் என்று விற்பதாக ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்.'
யாரிடம் இவர் ஒப்பந்தம் போடுவார்?
இறக்குமதி செய்பவர்
'10,000 டாலர் மதிப்பிலான பொருளை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறேன். ஒரு மாதம் கழித்து பணம் கொடுக்கும் நேரம் வரும் போது டாலரிம் மதிப்பு 50 ரூபாய் என்று ஆகி விட்டால் 5 லட்சம் கொடுக்க வேண்டி வரும். இதே 46 ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் 4.6 லட்ச ரூபாய்களில் வேலை முடிந்து விடும்.'
இப்படி இரண்டு பேரும் 46 ரூபாய்க்கு ஒரு மாதம் கழித்து டாலர்களை பரிமாறிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வார்கள். ஆங்கிலத்தில் Forward Contract எனப்படும் எதிர்கால பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படை இதுதான்.
நடைமுறையில் ஏற்றுமதியாளரும் இறக்குமதியாளரும் நேரடியாக ஒப்பந்தம் போடுவதில்லை. இடைத் தரகர்களாக வங்கிகள் இருப்பார்கள்.
Monday, August 4, 2008
பணம் கொடுக்கும் முறைகள் - 2
லெட்டர் ஆஃப் கிரெடிட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வங்கிக் கடன் கடிதஙகளைக் குறித்து விரிவாகப் பார்க்கலாம். (3)
விற்பனையாளரும் வாங்குபவரும் ஒருவரை ஒருவர் எடை போட்டு, பொருட்களின் தரம், அளவு, விலை பேசி இன்ன நாளுக்குள் அனுப்பி விட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். சரியான தரம், சரியான அளவில் பொருள் வந்து சேர வேண்டும் என்ற கவலை வாங்குபவருக்கு. பொருளை தயாரிக்க அவ்வளவு செலவழிக்கிறோம். போட்ட பணம் வந்து சேர வேண்டும் என்ற கவலை விற்பவருக்கு.
வங்கிக் கடன் கடித முறையில் வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுகிறார். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனம் தில்லியிலிருந்து மின்னணு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. சென்னை நிறுவனம், ஒரு வங்கியை அணுகி இந்த விற்பனைக்கு தில்லி நிறுவனத்தின் பெயருக்கு ஒரு கடன் கடிதம் அனுப்பக் கேட்கிறது.
வங்கி சும்மா அனுப்பி விடாது
விற்பனையாளரும் வாங்குபவரும் ஒருவரை ஒருவர் எடை போட்டு, பொருட்களின் தரம், அளவு, விலை பேசி இன்ன நாளுக்குள் அனுப்பி விட வேண்டும் என்று பேசிக் கொள்கிறார்கள். சரியான தரம், சரியான அளவில் பொருள் வந்து சேர வேண்டும் என்ற கவலை வாங்குபவருக்கு. பொருளை தயாரிக்க அவ்வளவு செலவழிக்கிறோம். போட்ட பணம் வந்து சேர வேண்டும் என்ற கவலை விற்பவருக்கு.
வங்கிக் கடன் கடித முறையில் வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பவருக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டுகிறார். எடுத்துக்காட்டாக, சென்னையில் இருக்கும் ஒரு நிறுவனம் தில்லியிலிருந்து மின்னணு சாதனங்களை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. சென்னை நிறுவனம், ஒரு வங்கியை அணுகி இந்த விற்பனைக்கு தில்லி நிறுவனத்தின் பெயருக்கு ஒரு கடன் கடிதம் அனுப்பக் கேட்கிறது.
வங்கி சும்மா அனுப்பி விடாது
Thursday, February 21, 2008
பணம் கொடுக்கும் முறைகள் -1
வாங்கல் விற்றலில் பணம் கைமாறும் முறைகள் பல வகைப்படும். வாங்குபவர், விற்பவர்களில் யாரின் கை ஓங்கி இருக்கிறது, யாரின் நம்பகத்தன்மை அதிகம் என்பதைப் பொறுத்து அவை மாறுபடும்.
பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு. வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.
விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
பரிமாற்றம் நேருக்கு நேர் நடந்தால் சிக்கல்கள் குறைவு. வாங்குபவர் பொருள் அல்லது சேவையை பார்த்து பரிசோதித்த பிறகு பணத்தைக் கொடுத்தால் போதும்.
- பொருள் கண்ணை விட்டு மறையும் முன்னால் பணம் பைக்குள் வந்து விடும் என்ற நிம்மதி விற்பவருக்கு.
- பொருளைப் பார்த்து உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு பணம் கொடுத்தால் போதும் என்ற வசதி வாங்குபவருக்கு.
விற்பவருக்கு ஆதாயம் அதிகமான முறையில் ஆரம்பித்து வாங்குபவருக்கு அதிக ஆதாயம் இருக்கும் முறைகள் வரை பார்க்கலாம்.
- முழுத் தொகையும் முன்பணமாக அனுப்பிய பிறகு பொருள் அல்லது சேவை அனுப்பி வைக்கப்படும்
பெரிய நிறுவனம் ஒன்றிலிருந்து சந்தைப் போட்டி அதிகம் இல்லாத பொருள் அல்லது சேவை வாங்க ஒரு புது வாடிக்கையாளர் அணுகினால் 'பணத்தைக் கட்டி விட்டுப் பொருளை எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி விடலாம்.
இணையத்தின் மூலம் பொருட்கள் வாங்கும் போது கடனட்டை மூலம் பணம் விற்கும் நிறுவனத்தின் கணக்குக்குப் போய்ச் சேர்ந்த பிறகுதான் பொருளை அனுப்பவே ஆரம்பிப்பார்கள்.
முன்பணமாக வரைவோலை வாங்கி அனுப்பினால்தான் புத்தகங்கள் அனுப்பி வைப்பேன் என்று பதிப்பகங்கள் இருக்கின்றன. - 'பொருளைத் தயாரித்து பொதிந்து வண்டியில் ஏற்றி அனுப்பி விடுகிறேன் (லாரியில், ரயிலில், கப்பலில், வானூர்தியில்). போக்குவரத்து நிறுவனம் கொடுத்த சீட்டைக் காண்பித்தால்தான் பொருளை விடுவிக்க முடியும். வங்கி மூலம் அந்தச் சீட்டை அனுப்பி, காசைக் கொடுத்து விட்டுப் பொருளை விடுவித்துக் கொள்ளுங்கள்' என்பது அடுத்த நிலை.
இதில் வாங்குபவருக்கு கொஞ்சம் பாதுகாப்பு அதிகம். மூன்றாவது நிறுவனம் ஒன்றின் கையில் பொதியப்பட்ட பொருட்கள் இருக்கின்றன. பணம் கை விட்டுப் போய் விட்டாலும் ஏதோ ஒன்று கிடைக்கத்தான் போகிறது.
தபால் மூலம் பொருளை அனுப்பி விட்டு தபால்காரரிடம் காசைக் கொடுத்து விடுமாறு நடக்கும் விபிபி முறையும் இது போலத்தான். - மேலே சொன்னதில் ஒரு பெரிய ஓட்டை, பொதியுள் என்ன இருக்கிறது என்று தெரிய முடியாமல் இருப்பது. விற்பனையாளர் டிரான்ஸிஸ்டர் வானொலி என்று சொல்லி அனுப்பியதைத் திறந்து பார்த்து உள்ளே செங்கற்கள் இருந்தால் வாங்கியவரின் பணம் போனது போனதாகி விடும்.
அதனால் வாங்குபவர் தனது வங்கி மூலம் உத்தரவாதக் கடிதம் ஒன்றை அளித்துக் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால் பொருளைப் பெற்றுக் கொள்ளலாம் என்று விற்பவருக்கு நம்பிக்கை அளிக்கலாம்.
வங்கியிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு கடன் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா ஆவண ஆதாரங்களையும் காட்ட வேண்டும். அப்படிக் காட்டி விட்டால் வாங்குபவரின் வங்கி பணத்தைக் கொடுத்து விடும்.
ஏற்றுமதியாகும் நாட்டில் இருக்கும் ஒரு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும், பொதி விபரங்கள் விளக்கமாக தரப்பட வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து பணம் கைவிட்டுப் போகும் முன் கப்பலில் ஏற்றி விடப்பட்ட பொருள் தாம் எதிர்பார்ப்பது போன்ற தரம் மற்றும் அளவுடன் இருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்ளலாம். அதில் ஒரு ஆவணம் கப்பலில் அல்லது வானூர்தியில், அல்லது லாரியில் ஏற்றி அனுப்பிய ஆவணம்.
இப்படி விற்பவர் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றி அவற்றுக்கான ஆவணங்களை காண்பித்து விட்டால் வங்கிப் பணத்தைக் கொடுத்தே தீர வேண்டும்.
'பொருளும் போய்ப் பணமும் வரா விட்டால் என்ன செய்வது? பொருளை அவ்வளவு செலவில் வெளி நாட்டுக்கு அனுப்பிய பிறகு வாங்குபவர் பணத்தைக் கொடுத்துப் பொருளை எடுத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வது' போன்ற விற்பவரின் கேள்விகளுக்கும் பொருத்தமான விடை கடன் கடிதங்கள். - நான்காவதாக கடன் கடிதத்தில் பொருளை எடுத்த பிறகு குறிப்பிட்ட நாட்கள் கழித்து வங்கி பணம் கொடுப்பதாக உறுதி தரும் முறை. இதில் ஆவணங்களை நிபந்தனைப் படி தயாரித்து சமர்ப்பித்த 30 அல்லது 60 நாட்களுக்குப் பிறகு வாங்கியவரின் வங்கி பணத்தை விற்பனையாளருக்கு கொடுத்து விடுவதாக உறுதி அளிக்கிறது.
- அடுத்ததாக எந்த கடிதமும் இல்லாமல், போக்கு வரத்து நிறுவனத்திடமிருந்து பொருளை விடுவித்துக் கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு பணத்தை வாங்கியவரே செலுத்தி விடுதல். இதில் விற்பவருக்கு பணம் கிடைக்காமல் போகும் அபாயம் மிக அதிகம். வாங்குவது பேர் பெற்ற நிறுவனமாக இருந்தாலோ, இரண்டு நிறுவனங்களுக்கிடையே நீண்ட நல்லுறவு நிலவும் போதோ இத்தகைய பணம் கொடுக்கும் முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம்.
Wednesday, February 20, 2008
பணம் என்னடா பணம் - 2
எல்லோருக்கும் தேவைப்படும், எந்த நேரத்திலும் எளிதில் வாங்கவோ விற்கவோ முடியும் ஒரு பொருளை இடைப் பொருளாக வைத்துக் கொண்டால், மேலே சொன்ன இரண்டு இக்கட்டுகளையும் களைந்து பரிமாற்றங்களை எளிதாக்கி விடலாமே என்று யாருக்கோ தோன்றியிருக்கும்.
எதை வைத்துக் கொள்ளலாம்? சீக்கிரம் கெட்டுப் போகாத பொருளாக இருக்க வேண்டும். அலகுகளாக எண்ணிப் பிரிக்கும் படி இருக்க வேண்டும். கையில் எடுத்துப் போகும் படி இருக்க வேண்டும்.
ஆடு மாடுகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட தோல், ஏன் கிளிஞ்சல்கள் கூட நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டனவாம்.
ஆடு பரிமாற்ற செலாவணியாக பயன்படுத்தப்பட்டால் என்ன நடந்திருக்கும்?
விளைச்சல் முடிந்து விவசாயியின் கையில் நெல் இருக்கிறது. நெல் தேவைப்படும் உணவு விடுதிக்கு நெல்லைக் கொடுத்து 50 ஆடுகளை வாங்கிக் கொள்கிறார்.
நெசவாளரிடம் போய் துணிகள் வாங்கிக் கொண்டு 10 ஆடுகளை விலையாகக் கொடுத்து விடுகிறார்.
நெசவாளர் குடும்பத்துக்குத் தேவையான தச்சு வேலை செய்பவருக்கு 1 ஆடு கிடைக்கிறது.
தச்சர் சாப்பிட போது அந்த ஆட்டைக் கொடுத்து சாப்பாடு பெறுகிறார்.
இதே போல் தானியங்கள், தோல்கள், கிளிஞ்சல்கள் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒவ்வொன்றிலும் குளறுபடிகள்.
தானியத்தை பயன்படுத்தினால் அளப்பதற்கு கொள்ளளவிகள் தேவை. அவற்றின் தரம் அளவு நிர்ணயிப்பதில் சிக்கல்கள் வரும்.
ஆடு செத்துப் போனால் என்ன ஆகும்? அதனால் வயதான ஆட்டை பணமாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.
இதற்கும் ஒரு தீர்வு வந்தது.
எதை வைத்துக் கொள்ளலாம்? சீக்கிரம் கெட்டுப் போகாத பொருளாக இருக்க வேண்டும். அலகுகளாக எண்ணிப் பிரிக்கும் படி இருக்க வேண்டும். கையில் எடுத்துப் போகும் படி இருக்க வேண்டும்.
ஆடு மாடுகள், தானியங்கள், பதப்படுத்தப்பட்ட தோல், ஏன் கிளிஞ்சல்கள் கூட நாணயங்களாகப் பயன்படுத்தப்பட்டனவாம்.
ஆடு பரிமாற்ற செலாவணியாக பயன்படுத்தப்பட்டால் என்ன நடந்திருக்கும்?
விளைச்சல் முடிந்து விவசாயியின் கையில் நெல் இருக்கிறது. நெல் தேவைப்படும் உணவு விடுதிக்கு நெல்லைக் கொடுத்து 50 ஆடுகளை வாங்கிக் கொள்கிறார்.
நெசவாளரிடம் போய் துணிகள் வாங்கிக் கொண்டு 10 ஆடுகளை விலையாகக் கொடுத்து விடுகிறார்.
நெசவாளர் குடும்பத்துக்குத் தேவையான தச்சு வேலை செய்பவருக்கு 1 ஆடு கிடைக்கிறது.
தச்சர் சாப்பிட போது அந்த ஆட்டைக் கொடுத்து சாப்பாடு பெறுகிறார்.
இதே போல் தானியங்கள், தோல்கள், கிளிஞ்சல்கள் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தப்பட்டன. இவற்றில் ஒவ்வொன்றிலும் குளறுபடிகள்.
தானியத்தை பயன்படுத்தினால் அளப்பதற்கு கொள்ளளவிகள் தேவை. அவற்றின் தரம் அளவு நிர்ணயிப்பதில் சிக்கல்கள் வரும்.
ஆடு செத்துப் போனால் என்ன ஆகும்? அதனால் வயதான ஆட்டை பணமாக ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள்.
இதற்கும் ஒரு தீர்வு வந்தது.
பணம் என்னடா பணம்? - 1
பணம் என்றால் என்ன?
நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.
எனக்கு முடி வெட்டிக் கொள்ள வேண்டும், அதை செய்யும் கலைஞரின் உழைப்புக்கு மாறாக நான் அவருக்கு எனது உழைப்பை வழங்க வேண்டும். என்ன செய்யலாம்?
அவரது கடைக்கு நல்ல விளம்பரமாக அமையும்படி ஒரு வாசகத்தை உருவாக்கி, கணினியில் உள்ளிட்டு அழகாக அச்சடித்துக் கொடுக்கலாம். அதை கடைக்கு முன்பு கட்டிக் கொண்டால் இன்னும் பலர் கடைக்கு வருவதால் அவரது வருமானம் அதிகமாகலாம்.
இந்த முறைக்குப் பெயர் பண்ட மாற்று.
எனக்குத் தேவையான சேவை அல்லது பொருளைத் தேடிப் போகும் போது அதை கொடுக்க கூடியவரைக் கண்டு கொண்டால் மட்டும் போதாது. அவரது பணிக்கு மாறாக அவருக்குத் தேவையானதைக் கொடுக்க என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஏற்கனவே கடையில் நல்ல விளம்பரப் பலகைகள் இருந்தால் எனது கணினித் திறனின் சேவை அவருக்குத் தேவைப்படாமல் போய் விடும்.
இரண்டாவதாக, 'ஒரு முடி வெட்டுக்கு இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா' என்று நான் நினைக்கலாம். 'ஒரு முடி வெட்டுக்கு நான்கு தட்டிகள் தர வேண்டும்' என்று கடைக்காரர் சொல்லலாம். இப்படி பேரம் பேசுவதும் சிக்கலாகிப் போய் விடும். 'இதே போன்ற தட்டியை போன வாரம் ஒரு பெரிய உணவு விடுதிக்குச் செய்து கொடுத்து மாற்றாக அவர்களது விடுதி அறையில் நான்கு நாட்கள் தங்கும் வசதியைப் பெற்றதுடன்' ஒப்பிட்டால் இந்த முடி வெட்டுக்கு ஒரு தட்டி என்பது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.
பண்ட மாற்று முறை மட்டும் இருந்தால் இது போல பொருளின், சேவையின் மதிப்பு வாங்குபவர்களின் தேவை, விற்பவரின் விலை மட்டும் சார்ந்திராமல், மாற்றுப் பொருளுக்கான விலை, செலவு என்று நான்கு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
இப்படித்தான் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் பொருட்களை, சேவைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது உணர்ந்திருப்பார்கள்.
நமது உழைப்பை இன்னொருவருக்கு பலனளிக்கும்படி கொடுத்து அதற்கு பதிலாக அவரது உழைப்பை நமக்கு பலனளிக்கும்படி வாங்கிக் கொள்வதற்கான இடைப் பொருள்தான் பணம்.
எனக்கு முடி வெட்டிக் கொள்ள வேண்டும், அதை செய்யும் கலைஞரின் உழைப்புக்கு மாறாக நான் அவருக்கு எனது உழைப்பை வழங்க வேண்டும். என்ன செய்யலாம்?
அவரது கடைக்கு நல்ல விளம்பரமாக அமையும்படி ஒரு வாசகத்தை உருவாக்கி, கணினியில் உள்ளிட்டு அழகாக அச்சடித்துக் கொடுக்கலாம். அதை கடைக்கு முன்பு கட்டிக் கொண்டால் இன்னும் பலர் கடைக்கு வருவதால் அவரது வருமானம் அதிகமாகலாம்.
இந்த முறைக்குப் பெயர் பண்ட மாற்று.
எனக்குத் தேவையான சேவை அல்லது பொருளைத் தேடிப் போகும் போது அதை கொடுக்க கூடியவரைக் கண்டு கொண்டால் மட்டும் போதாது. அவரது பணிக்கு மாறாக அவருக்குத் தேவையானதைக் கொடுக்க என்னிடம் ஏதாவது இருக்க வேண்டும். ஏற்கனவே கடையில் நல்ல விளம்பரப் பலகைகள் இருந்தால் எனது கணினித் திறனின் சேவை அவருக்குத் தேவைப்படாமல் போய் விடும்.
இரண்டாவதாக, 'ஒரு முடி வெட்டுக்கு இவ்வளவு வேலை பார்க்க வேண்டுமா' என்று நான் நினைக்கலாம். 'ஒரு முடி வெட்டுக்கு நான்கு தட்டிகள் தர வேண்டும்' என்று கடைக்காரர் சொல்லலாம். இப்படி பேரம் பேசுவதும் சிக்கலாகிப் போய் விடும். 'இதே போன்ற தட்டியை போன வாரம் ஒரு பெரிய உணவு விடுதிக்குச் செய்து கொடுத்து மாற்றாக அவர்களது விடுதி அறையில் நான்கு நாட்கள் தங்கும் வசதியைப் பெற்றதுடன்' ஒப்பிட்டால் இந்த முடி வெட்டுக்கு ஒரு தட்டி என்பது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.
பண்ட மாற்று முறை மட்டும் இருந்தால் இது போல பொருளின், சேவையின் மதிப்பு வாங்குபவர்களின் தேவை, விற்பவரின் விலை மட்டும் சார்ந்திராமல், மாற்றுப் பொருளுக்கான விலை, செலவு என்று நான்கு விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
இப்படித்தான் ஆரம்ப காலத்தில் மனிதர்கள் பொருட்களை, சேவைகளைப் பரிமாறிக் கொண்டிருக்கும் போது உணர்ந்திருப்பார்கள்.
Thursday, October 11, 2007
வலுவான ரூபாயின் விளைவுகள்
டாலரின் மதிப்பு குறைந்ததால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
- நம் நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களின் விற்பனை குறையும்.
ஒரு பொருள் செய்ய 100 ரூபாய் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம் டாலருக்கு 45 ரூபாய் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த பொருளை லாபமும் சேர்த்து 2.5 டாலருக்கு விற்றால், ஏற்றுமதியாளருக்குக் கையில் 112.50 ரூபாய்கள் கிடைக்கும். 12.50 ரூபாய்கள் லாபம்.
இப்போது அதே பொருளை 2.5 டாலருக்கு விற்றால் (1 டாலர் 39.50) 99.50 காசுகள்தான் கிடைக்கும். 50 காசுகள் இழப்பு.
இதைச் சரிகட்ட செலவுக் கணக்கைக் குறைக்கப் பார்க்கலாம் அல்லது விற்பனை விலையை ஏற்றப் பார்க்கலாம். வாடிக்கையாளர் விலையை 2.70 ஆக ஏற்ற ஒப்புக் கொண்டால் அதே பொருளை விற்று 106.60 ரூபாய்கள் கிடைக்கும். கூடவே உள்ளிடு பொருட்கள் வாங்கும் போது விலை குறைக்கச் சொல்லி கேட்கலாம். தேவையில்லாத செலவுகளைக் குறைக்கலாம், முதலீடுகளைத் தள்ளிப் போடலாம். பழையபடி 12.50 ரூபாய்கள் லாபம் நிற்கும் படி முயற்சிப்பார்கள். - வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மலிவாகக் கிடைக்க ஆரம்பிக்கும்.
எரிஎண்ணையின் விலை பேரலுக்கு 70 டாலர்கள் என்றால் அதன் விலை முன்பு 70*45=3150 ரூபாய்களாக இருக்கும். இன்றைக்கு அதே விலை எண்ணெய் வாங்க 70*39.5= 2765 ரூபாய்கள் செலவழித்தால் போதும்.
இது இரண்டு வகையில் போகலாம். திறமையான மக்களாக இருந்தால் இப்படிக் கிடைத்த தமது நாணயத்தின் வலிமையைப் பயன்படுத்து வெளி நாடுகளிலிருந்து மூலப் பொருட்களை வாங்கி தமது உற்பத்தியைப் பெருக்கிக் கொள்வார்கள் அல்லது முதலீட்டில் செலவிட்டு புதிய இயந்திரங்கள், வெளி நாட்டில் விற்பனை அலுவலகங்கள் என்று ஆரம்பித்து தமது உற்பத்தி வலிமையையும் சந்தைப்படுத்தும் திறனையும் அதிகப்படுத்திக் கொள்வார்கள்.
மாறாக, இறுதிப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்தால் உள்ளூர் மக்களின் பாடு திண்டாட்டமாகிப் போகும்.
இந்தியாவில் அரிசி கிலோ 25 ரூபாய்க்கு விற்கிறது என்று வைத்துக் கொள்வோம். பழைய மதிப்பில் கிலோ 0.5 டாலருக்கு அமெரிக்காவின் அரிசி இங்கு வந்து சேர்ந்தால் அடக்க விலையே 22.50ல் ஆரம்பிக்கும் (45*0.5). இப்போது அதே அரிசியின் அடக்க விலை ரூபாய் 19.75 ஆக இருக்கும். மற்ற செலவுகள் போக கிலோவுக்கு 2 ரூபாய் லாபம் பார்க்கலாம் என்று ஒருவர் அமெரிக்க அரிசியை நம் ஊரில் விற்க ஆரம்பித்தால் விவசாயிகள் நிலைமை திண்டாட்டமாகிப் போய் விடும். - ரூபாய்களில் சம்பாதிப்பவர்களின் வளம் அதிகரிக்கும். இந்தியாவில் செயல்படும் தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு நல்ல ஆதாயம். புதிய கருவிகள் வாங்கும் செலவுகள், வெளிநாட்டு இணைப்புக்குக் கொடுக்கும் கட்டணம் எல்லாம் குறைந்து விடும். வருமானமோ குறையப் போவதில்லை.
இந்தியாவிலிருந்து துபாய்க்கு தொலைபேசி அழைப்புக்குக் கட்டணம் நிமிடத்துக்கு 4.50 ரூபாய்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் 0.05 டாலர்கள் துபாய் நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் கொடுக்க ஒப்பந்தம். முந்தை செலாவணி விகிதத்தில் ஒரு நிமிடத்துக்கு கொடுக்க வேண்டிய தொகை 2.25 ரூபாய்கள், மிஞ்சும் தொகை 2.25 ரூபாய்கள். இப்போதைய விகிதத்தில் கொடுக்க வேண்டிய தொகை அதே 0.05 டாலர்களுக்கு ரூபாய்களில் 1.95 காசுகள். ஒரு நிமிடத்துக்கு 30 காசுகள் லாபம்.
இது 2வதாக சொன்ன அதே இறக்குமதி ஆதாயம்தான். துபாய் நிறுவனத்தின் சேவையை இறக்குமதி செய்து கொடுக்கிறது இந்திய நிறுவனம். அதற்கான செலவு குறைவு.
இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்கள் குறைக்கப் படலாம். எதிர்மறையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவை அழைக்கும் கட்டணங்கள் உயரலாம். - வெளிநாடுகளில் சுற்றிப் பார்க்க, தொழில் தொடர்பாக, படிக்கப் போகும் இந்தியர்களுக்குச் செலவு குறைவு.
ஆங்காங்கில் விற்பனை அலுவலகம் ஒன்றைத் திறந்து அந்த ஊர் ஊழியரை வேலைக்கு வைக்க ஆகும் மொத்த செலவு மாதத்துக்கு 5000 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். டாடா தேயிலை நிறுவனம் குறைந்த செலவில் அலுவலகத்தை ஆரம்பித்து நடத்தலாம். முன்பு 2.225 லட்ச ரூபாய்கள். இப்போது 1.95 லட்ச ரூபாய்கள்தான்.
இரண்டு ஆண்டுகள் மேலாண்மை படிப்புக்குச் செலவு 20000 டாலர்கள் என்றால் முன்பு 9 லட்சம் ரூபாய்கள் தேவைப்படும் இப்போது 7.9 லட்சத்தில் முடித்து விடலாம்.
நியூயார்க்கில் ஒரு இரவு தங்குவதற்கான விடுதிச் செலவு 80 டாலர்கள் என்றால், இப்போதைய செலாவணி விகிதத்தில் 420 ரூபாய்கள் குறைவான செலவு. - வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியர்கள் பணத்தை இந்தியாவுக்கு அனுப்பும் போது கிடைக்கும் மதிப்பு குறைந்து விடும். 1000 டாலர்கள் சேமிப்பு முன்பெல்லாம் 45 ஆயிரங்களாக மாறிக் கொண்டிருந்தது, இப்போது 39 ஆயிரங்கள்தான் கிடைக்கும்.
என்னென்ன செய்யலாம்? முதலீடுகளை டாலர்களில் செய்யலாம். வேலை பார்க்கும் நாட்டிலோ, டாலர்களில் செலாவணி நடக்கும் நாடுகளிலோ சொத்துக்களை வாங்கிப் போடலாம்.
இந்தியாவில் முதலீட்டுக்காக வாங்கி வைத்திருந்த சொத்துக்களை விற்று டாலராக மாற்றிக் கொண்டால் லாபம் கிடைக்கும்.
ஒரு ஆண்டு முன்பு 20 லட்சம் ரூபாய்களுக்கு ஒரு வீடு வாங்கும் போது அதற்காக 45,000 டாலர்களை மாற்றிச் செலவழித்திருக்க வேண்டும். இப்போது அதே வீட்டை அதே விலைக்கு விற்று டாலராக மாற்றினால் 50,000 டாலர்களுக்கு மேல் கிடைக்கும். நிகர லாபம் 11%. வீட்டு விலைகள் தாறுமாறாக ஏறியிருக்கும் நிலையில் அதே வீட்டுக்கு 40 - 45 லட்சங்கள் கிடைத்தால் அதை டாலராக மாற்றி வேலை பார்க்கும் நாட்டில் முதலீடு செய்யலாம். - ஏற்றுமதி நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள்
மென்பொருள், துணி, ஆடைகள், தோல் போன்ற துறை நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கொஞ்சம் இறுக்கிப் பிடித்தலுக்குத் தயாராக வேண்டும். முன்பு போன்ற ஊதிய உயர்வுகள், புதிய வேலையில் தாவும் வாய்ப்புகள் இருக்காது.
தொலை தூர நிறுவனச் சேவைகள் வழங்கும் நிறுவனங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். பல மாறுதல்களைப் பார்க்கலாம்.
Friday, July 13, 2007
நாணய மாற்று வீதமும் ஏற்றுமதியும்
டாலரின் மதிப்பு 4 ரூபாய் வரை குறைந்ததால் ஏற்றுமதித் துறையில் பணப் புழக்கம் நெரிந்துள்ளது. மாதம் 10,000,000 டாலர் (நாலரைக் கோடி ரூபாய்) ஏற்றுமதி செய்து கொண்டுருக்கும் ஒரு நிறுவனத்தில் மாதத்துக்கு 40 லட்சம் ரூபாய் பண வரத்து குறைந்து விடும். பல இடங்களில் செலவைக் குறைப்பார்கள்.
இந்த நெரிசலில் பல நிறுவனங்கள் நொடித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. என்னதான் நல்ல பொருள்/சேவை வழங்கினாலும், எதிர்கால சாத்தியங்கள் இருந்தாலும் நிகழ்காலத்தில் பணப் புழக்கம் நின்று போனால் உயிர் நின்று விடும். உடலில் ரத்த ஓட்டம் போல அது. வர வேண்டிய பணம் என்று எவ்வளவு இருந்தாலும் கையில் இருக்கும் பணமாக மாறாத வரை பலனில்லை.
பெரிய நிறுவனங்கள் இந்த மாற்று வீதக் குறைவிலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததால் இப்போதைய விளைவுகளைத் தவிர்த்தாலும். அடுத்த பருவத்துக்கான கணக்கிடுதலில் உதைக்கப் போகிறது.
உற்பத்தித் துறையைப் பொறுத்த வரை வலுவான ரூபாய் ஆறு மாத நோக்கில் ஏற்றுமதி திறனை அதிகரிக்கத்தான் செய்யும்.
1990களில் ரூபாயின் மதிப்பு குறையும் போது ஒவ்வொரு முறையும் இது ஏற்றுமதி வணிகத்துக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டாலும். அந்தத் தாக்கம் சில மாதங்களிலேயே சமன் படுத்தப்பட்டு ஏற்றுமதி வியாபாரமும் தத்தளிக்கத்தான் செய்தது. மலிவான விலை என்ற ஒரே வலிமையில் செய்யும் தொழில்கள் மறைந்தாலும், ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது என்றே படுகிறது.
இந்த நெரிசலில் பல நிறுவனங்கள் நொடித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. என்னதான் நல்ல பொருள்/சேவை வழங்கினாலும், எதிர்கால சாத்தியங்கள் இருந்தாலும் நிகழ்காலத்தில் பணப் புழக்கம் நின்று போனால் உயிர் நின்று விடும். உடலில் ரத்த ஓட்டம் போல அது. வர வேண்டிய பணம் என்று எவ்வளவு இருந்தாலும் கையில் இருக்கும் பணமாக மாறாத வரை பலனில்லை.
பெரிய நிறுவனங்கள் இந்த மாற்று வீதக் குறைவிலிருந்து தப்பிக்க ஏற்பாடுகள் செய்திருந்ததால் இப்போதைய விளைவுகளைத் தவிர்த்தாலும். அடுத்த பருவத்துக்கான கணக்கிடுதலில் உதைக்கப் போகிறது.
உற்பத்தித் துறையைப் பொறுத்த வரை வலுவான ரூபாய் ஆறு மாத நோக்கில் ஏற்றுமதி திறனை அதிகரிக்கத்தான் செய்யும்.
- இறக்குமதி இடுபொருட்களின் விலை குறைதல்,
- பொதுவான உள்நாட்டு விலை வாசி குறைதல்,
- வாடிக்கையாளரிடம் விலை மாற்றம் கோருதல்
1990களில் ரூபாயின் மதிப்பு குறையும் போது ஒவ்வொரு முறையும் இது ஏற்றுமதி வணிகத்துக்கு நல்லது என்று சொல்லிக் கொண்டாலும். அந்தத் தாக்கம் சில மாதங்களிலேயே சமன் படுத்தப்பட்டு ஏற்றுமதி வியாபாரமும் தத்தளிக்கத்தான் செய்தது. மலிவான விலை என்ற ஒரே வலிமையில் செய்யும் தொழில்கள் மறைந்தாலும், ஒட்டு மொத்தமான திறமையுடன் செயல்படும் உற்பத்தித் தொழில்கள் வளப்பட வலிமையான நாணயம் உதவுகிறது என்றே படுகிறது.
Friday, April 20, 2007
பணம் பெருக்கும் வங்கிகள் (economics - 50)
பொதுவாக பணம் என்றால் நாணயங்களும் நோட்டுகளும்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம். கொடுக்கல் வாங்கப் பயன்படும் எல்லா இடைப் பொருளும் பணம் என்று வைத்துக் கொண்டால் வங்கிக் காசோலைகளும், கடனட்டைகளும் கூட பணம்தான்.
நாணயங்களும் நோட்டும் மத்திய ரிசர்வ் வங்கியால் அச்சடித்து வெளியிடப்படுகின்றன. வங்கிக் கடன்கள் பணத்தை எப்படி அதிகரிக்கின்றன?
ஒரு வங்கிக்கு 100 ரூபாய் வைப்புத் தொகை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 35 ரூபாய் அரசுப் பத்திரங்களில் போய் விடுகிறது. மீதி இருக்கும் 65 ரூபாயை ஒரு தொழில் நிறுவனத்துக்குக் கடனாக அளிக்கிறது. இந்தக் கடன் பணமாக மாற்றப் படுவதில்லை. அந்த நிறுவனக் கணக்கில் 65 ரூபாய் வரவு வைத்து விடுவார்கள்.
வங்கியின் இருப்பில் 65 ரூபாய் இருக்கும் அதே நேரத்தில் 65 ரூபாய்க்கு காசோலை எழுதும் வசதி நிறுவனத்துக்குக் கிடைத்து விடுகிறது. நாட்டில் புழங்கும் பணத்தின் அளவில் 65 ரூபாய் சேர்ந்து கொள்கிறது.
இப்போது கடன் வாங்கிய நிறுவனம், அதை தனக்கு இயந்திரம் விற்ற நிறுவனத்துக்குக் காசோலையாக கொடுத்து விடுகிறது. இயந்திர நிறுவனம் அந்தக் காசோலையை தனது வங்கியில் போடுகிறது. இரண்டாவது வங்கியின் வைப்புத் தொகை 65 ரூபாய் அதிகரித்து விடுகிறது. அந்த 65ல் 35% சதவீதம் போக மீதி சுமார் 40 ரூபாய் அந்த வங்கி கடன் கொடுக்க முடியும்.
இப்படி நீண்டு கொண்டே போய் வங்கிகளின் அமைப்பிலிருந்து காசாக வெளியே எடுக்கப்படா விட்டால் ஒவ்வொரு சுற்றிலும் குறைந்து கொண்டே போனாலும் மொத்தத்தில் முதலில் போடப்பட்ட 100 ரூபாய் மூலம் வங்கிகள் 250 ரூபாய் உருவாக்கி விடும்.
இப்போது கடனட்டைகள் வந்து விட்டதால் இந்தப் பணி இன்னும் எளிதாகி விட்டது. காசோலை ஏற்றுக் கொள்ளாத இடங்களில் கூட கடனட்டை மூலம் பணப்பெருக்கம் ஜாம் ஜாமென்று நடைபெறுகிறது.
அரசின் கட்டுப்பாடு இல்லாமல் சொந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுத்துக் கொண்டிருந்தால் 100 ரூபாய் வைப்புத் தொகை முடிவே இல்லாமல் பணப் புழக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போய் விட முடியும். இதில்தான் ரிசர்வ் வங்கி என்ற மத்திய வங்கியின் பணி வருகிறது.
நாணயங்களும் நோட்டும் மத்திய ரிசர்வ் வங்கியால் அச்சடித்து வெளியிடப்படுகின்றன. வங்கிக் கடன்கள் பணத்தை எப்படி அதிகரிக்கின்றன?
ஒரு வங்கிக்கு 100 ரூபாய் வைப்புத் தொகை வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் 35 ரூபாய் அரசுப் பத்திரங்களில் போய் விடுகிறது. மீதி இருக்கும் 65 ரூபாயை ஒரு தொழில் நிறுவனத்துக்குக் கடனாக அளிக்கிறது. இந்தக் கடன் பணமாக மாற்றப் படுவதில்லை. அந்த நிறுவனக் கணக்கில் 65 ரூபாய் வரவு வைத்து விடுவார்கள்.
வங்கியின் இருப்பில் 65 ரூபாய் இருக்கும் அதே நேரத்தில் 65 ரூபாய்க்கு காசோலை எழுதும் வசதி நிறுவனத்துக்குக் கிடைத்து விடுகிறது. நாட்டில் புழங்கும் பணத்தின் அளவில் 65 ரூபாய் சேர்ந்து கொள்கிறது.
இப்போது கடன் வாங்கிய நிறுவனம், அதை தனக்கு இயந்திரம் விற்ற நிறுவனத்துக்குக் காசோலையாக கொடுத்து விடுகிறது. இயந்திர நிறுவனம் அந்தக் காசோலையை தனது வங்கியில் போடுகிறது. இரண்டாவது வங்கியின் வைப்புத் தொகை 65 ரூபாய் அதிகரித்து விடுகிறது. அந்த 65ல் 35% சதவீதம் போக மீதி சுமார் 40 ரூபாய் அந்த வங்கி கடன் கொடுக்க முடியும்.
இப்படி நீண்டு கொண்டே போய் வங்கிகளின் அமைப்பிலிருந்து காசாக வெளியே எடுக்கப்படா விட்டால் ஒவ்வொரு சுற்றிலும் குறைந்து கொண்டே போனாலும் மொத்தத்தில் முதலில் போடப்பட்ட 100 ரூபாய் மூலம் வங்கிகள் 250 ரூபாய் உருவாக்கி விடும்.
இப்போது கடனட்டைகள் வந்து விட்டதால் இந்தப் பணி இன்னும் எளிதாகி விட்டது. காசோலை ஏற்றுக் கொள்ளாத இடங்களில் கூட கடனட்டை மூலம் பணப்பெருக்கம் ஜாம் ஜாமென்று நடைபெறுகிறது.
அரசின் கட்டுப்பாடு இல்லாமல் சொந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வங்கிகள் கடன் கொடுத்துக் கொண்டிருந்தால் 100 ரூபாய் வைப்புத் தொகை முடிவே இல்லாமல் பணப் புழக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போய் விட முடியும். இதில்தான் ரிசர்வ் வங்கி என்ற மத்திய வங்கியின் பணி வருகிறது.
Wednesday, April 18, 2007
குட்டி போடும் பணம் (economics - 49)
ஆரம்ப காலங்களின் நாணயம் கிடையாது. பண்ட மாற்று முறைக்குப் பிறகு குறிப்பிட்ட பொருட்களை செலவாணியாகப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. தானியம், கால்நடைகள் போன்று பல பொருட்களைத் தாண்டி தங்கம் நாணயமாக பயனுக்கு வந்தது.
அந்தக் காலத்தில் பொற்கொல்லர்களிடம்தான் தங்கம் இருந்தது. யாரிடமாவது தேவைக்கதிகமாக தங்கம் கைவசம் இருந்தால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பொற்கொல்லர்களிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அந்தச் சேவைக்குக் கட்டணம் பெற்றுக் கொள்வார்கள் வங்கிகளாக செயற்பட்ட பொற்கொல்லர்கள்.
இப்போது வங்கிகளில் நகைகளைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பது போன்ற முறை அது. நாம் கொடுத்த நகை அப்படியே திரும்பிக் கிடைக்கும். நகை இல்லாமல், தங்க நாணயங்களைக் கொடுத்து வைக்கும் போது என்ன நடந்திருக்கும்?
ஒருவர் கொடுத்த நாணயத்துக்கும் மற்ற நாணயங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போனது. திருப்பிக் கொடுக்கும் போது மொத்தக் கலவையிலிருந்து சரியான எண்ணிக்கையைக் கொடுத்தால் போதுமாக இருந்தது. இப்படிப் பார்த்தால் எப்போது பார்த்தாலும் தங்க நாணயப் பெட்டியில் ஏராளமான நாணயங்கள் சேர்ந்திருந்தன.
ஒவ்வொரு நாளும் தமது வைப்பைத் திரும்பப் பெற வருபவர்கள், புதிதாக சேமிப்பு போட வருபவர்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் நாடும் வங்கியின் கைவசம் தேங்கியிருக்கும் பணத்தின் அளவு கணிசமாக இருக்கும்.
இது சும்மா பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவர்களுக்குக் கடனாகக் கொடுக்கலாமே என்று ஒரு புத்திசாலிக்குத் தோன்றியிருக்கும். இப்படி தமது பணத்தைக் கடனாகக் கொடுக்கிறார் என்று வாடிக்கையாளருக்கு சந்தேகம் வராத வரையில் பிரச்சனை இல்லை. யார் வந்து கேட்டாலும் பணத்தைக் கையிருப்பிலிருந்து கொடுக்க முடிந்து விட்டால் தொந்தரவே வராது. பணம் போட்டு வைத்த ஒவ்வொருவருக்கும் தான் போய்க் கேட்கும் போது போட்ட காசு உடனேயே கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தால் போதுமானது.
கைவசம் நூறு ரூபாய் வைப்புத் தொகை இருந்தால் அதில் 30 ரூபாயை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு மீதி 70 ரூபாயை வெளியில் கடனாகக் கொடுத்து விடலாம். எப்படியும் சும்மா தூங்கும் பணத்தை வெளியே விட்டு சம்பாதிக்க முடிவது ஆதாயம்தானே.
இப்படியே சுவை கண்ட பிறகு வைப்புத்தொகை அதிகமானால் கடன் கொடுப்பதையும் அதிகரிக்கலாம் என்று உணர்ந்து வைப்புத் தொகைக்கு சேவைக் கட்டணம் வசூலிக்காமல், தமக்குக் கிடைக்கும் வட்டித் தொகையில் ஒரு பகுதியை வைப்புதாரர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கவும் ஆரம்பித்தார்கள்.
ஆரம்ப காலங்களில் கட்டுப்பாடு இல்லாமல் கடன் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டு பல வங்கிகள் திவாலாகின. இருபதாம் நூற்றாண்டில் அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்த வேண்டும் என்று கண்டு கொள்ளப்பட்ட பிறகு வங்கிகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல) ஏற்படுத்தப்பட்டன.
அவை நூறு ரூபாய் வைப்புத் தொகை கிடைத்தால் எவ்வளவு சதவீதம் காசாக கைவசம் வைத்திருக்க வேண்டும் (cash reserve ratio) - ரொக்க இருப்பு வீதம், எவ்வளவு சதவீதம் பாதுகாப்பான அரசு கடன் பத்திரங்களாக வைத்திருக்க வேண்டும் (statutory liquidity ratio) - கட்டாய உடனடித் தேவை வீதம் என்று சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. 35% SLR என்று இருந்தால் வைப்புத் தொகையில் 35% அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கப்பட வேண்டும். திடீரென்று பல வாடிக்கையாளர்கள் காசை எடுக்க வந்து விட்டால் பத்திரத்தை விற்றுக் காசு கொடுத்து விட முடியும்.
இப்படி ஒதுக்கி வைத்தது போக மீதியிருக்கும் பணத்தை கடனாகக் கொடுக்கும் போது வங்கிகள் பணத்தை உருவாக்குகின்றன. எப்படி?
அந்தக் காலத்தில் பொற்கொல்லர்களிடம்தான் தங்கம் இருந்தது. யாரிடமாவது தேவைக்கதிகமாக தங்கம் கைவசம் இருந்தால் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பொற்கொல்லர்களிடம் கொடுத்து வைப்பார்கள். தேவைப்படும் போது திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அந்தச் சேவைக்குக் கட்டணம் பெற்றுக் கொள்வார்கள் வங்கிகளாக செயற்பட்ட பொற்கொல்லர்கள்.
இப்போது வங்கிகளில் நகைகளைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பது போன்ற முறை அது. நாம் கொடுத்த நகை அப்படியே திரும்பிக் கிடைக்கும். நகை இல்லாமல், தங்க நாணயங்களைக் கொடுத்து வைக்கும் போது என்ன நடந்திருக்கும்?
ஒருவர் கொடுத்த நாணயத்துக்கும் மற்ற நாணயங்களுக்கும் வேறுபாடு இல்லாமல் போனது. திருப்பிக் கொடுக்கும் போது மொத்தக் கலவையிலிருந்து சரியான எண்ணிக்கையைக் கொடுத்தால் போதுமாக இருந்தது. இப்படிப் பார்த்தால் எப்போது பார்த்தாலும் தங்க நாணயப் பெட்டியில் ஏராளமான நாணயங்கள் சேர்ந்திருந்தன.
ஒவ்வொரு நாளும் தமது வைப்பைத் திரும்பப் பெற வருபவர்கள், புதிதாக சேமிப்பு போட வருபவர்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் நாடும் வங்கியின் கைவசம் தேங்கியிருக்கும் பணத்தின் அளவு கணிசமாக இருக்கும்.
இது சும்மா பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்காமல் தேவைப்படுபவர்களுக்குக் கடனாகக் கொடுக்கலாமே என்று ஒரு புத்திசாலிக்குத் தோன்றியிருக்கும். இப்படி தமது பணத்தைக் கடனாகக் கொடுக்கிறார் என்று வாடிக்கையாளருக்கு சந்தேகம் வராத வரையில் பிரச்சனை இல்லை. யார் வந்து கேட்டாலும் பணத்தைக் கையிருப்பிலிருந்து கொடுக்க முடிந்து விட்டால் தொந்தரவே வராது. பணம் போட்டு வைத்த ஒவ்வொருவருக்கும் தான் போய்க் கேட்கும் போது போட்ட காசு உடனேயே கிடைக்கும் என்று நம்பிக்கை இருந்தால் போதுமானது.
கைவசம் நூறு ரூபாய் வைப்புத் தொகை இருந்தால் அதில் 30 ரூபாயை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு மீதி 70 ரூபாயை வெளியில் கடனாகக் கொடுத்து விடலாம். எப்படியும் சும்மா தூங்கும் பணத்தை வெளியே விட்டு சம்பாதிக்க முடிவது ஆதாயம்தானே.
இப்படியே சுவை கண்ட பிறகு வைப்புத்தொகை அதிகமானால் கடன் கொடுப்பதையும் அதிகரிக்கலாம் என்று உணர்ந்து வைப்புத் தொகைக்கு சேவைக் கட்டணம் வசூலிக்காமல், தமக்குக் கிடைக்கும் வட்டித் தொகையில் ஒரு பகுதியை வைப்புதாரர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கவும் ஆரம்பித்தார்கள்.
ஆரம்ப காலங்களில் கட்டுப்பாடு இல்லாமல் கடன் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொண்டு பல வங்கிகள் திவாலாகின. இருபதாம் நூற்றாண்டில் அரசாங்கம் பொருளாதார நடவடிக்கைகளை நெறிப்படுத்த வேண்டும் என்று கண்டு கொள்ளப்பட்ட பிறகு வங்கிகளைக் கண்காணிக்கும் அமைப்புகள் (இந்தியாவின் ரிசர்வ் வங்கி போல) ஏற்படுத்தப்பட்டன.
அவை நூறு ரூபாய் வைப்புத் தொகை கிடைத்தால் எவ்வளவு சதவீதம் காசாக கைவசம் வைத்திருக்க வேண்டும் (cash reserve ratio) - ரொக்க இருப்பு வீதம், எவ்வளவு சதவீதம் பாதுகாப்பான அரசு கடன் பத்திரங்களாக வைத்திருக்க வேண்டும் (statutory liquidity ratio) - கட்டாய உடனடித் தேவை வீதம் என்று சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. 35% SLR என்று இருந்தால் வைப்புத் தொகையில் 35% அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருக்கப்பட வேண்டும். திடீரென்று பல வாடிக்கையாளர்கள் காசை எடுக்க வந்து விட்டால் பத்திரத்தை விற்றுக் காசு கொடுத்து விட முடியும்.
இப்படி ஒதுக்கி வைத்தது போக மீதியிருக்கும் பணத்தை கடனாகக் கொடுக்கும் போது வங்கிகள் பணத்தை உருவாக்குகின்றன. எப்படி?
Tuesday, April 17, 2007
பணம் படுத்தும் பாடு (economics - 48)
'ஒரு டாலருக்கு 45 ரூபாய் கிடைக்கிறது என்பது எப்படி நிர்ணயமாகிறது?' என்று கேட்டார் அலுவக நண்பர் ஒருவர். விளக்க ஆரம்பித்தேன். ஆரம்பித்த சில நிமிடங்களில் ஒரு சிறிய கூட்டமே கூடி விட்டது.
ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே நடக்கும் பரிமாற்றங்களில்தான் இந்த வீதம் தீர்மானமாகிறது.
நமக்கு டாலர் எப்போது தேவைப்படும்?
வெளி நாட்டுக்குப் பயணம் போகும் போதோ, வெளி நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும் போதோ டாலர் தேவைப்படும். அதற்காக நம் கையில் இருக்கும் ரூபாய்களைக் கொடுத்து டாலராக மாற்ற முயற்சி செய்வோம்.
சரி, டாலரை எப்போது விற்க முயல்வோம்?
நம்ம மென்பொருளை வெளிநாட்டுக்கு விற்றதால் வாடிக்கையாளர் அனுப்பிய டாலர்களை உள்ளூரில் செலவழிக்க ரூபாயாக மாற்றும் போதும் அதே கடைக்குப் போவோம். அல்லது வெளி நாட்டு உறவினர் பணம் அனுப்பினால் மாற்ற வேண்டியிருக்கும்.
இப்படி ஏற்றுமதி, வெளிநாட்டு பண வரவு, வெளிநாட்டிலிருந்து முதலீடு என்று ஒரு வெளிநாட்டு பணம் நம்ம ஊர் பணமாக மாற வேண்டிய தேவைகள். இறக்குமதி, வெளிநாட்டிற்கு பணம் அனுப்புதல் என்று நம்ம பணம் வெளிநாட்டுப் பணமாக மாற வேண்டிய தேவைகள்.
கடையில் கத்தரிக்காய் விற்பது போல, தேவைதான் இந்த விலையையும் தீர்மானிக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகள், அங்கிருந்து வரும் இறக்குமதிகளை விடக் குறைவாக இருந்தால் டாலர் விற்பவர்களை விட வாங்குபவர்கள் குறைவாக இருக்க டாலர் விலை ஏறும். அதாவது 44 ரூபாயக்கு ஒரு டாலர் என்பது 45 ரூபாய் என்று ஏறி விடும். இது போல எல்லா விற்பனை, வாங்குதல்களின் சமநிலையில் ஒரு விலை வீதம் அமைந்து விடுவதுதான் பணமாற்ற வீதம்.
பெரும்பாலும் சந்தையிலேயே இந்த வீதம் தீர்மானிக்கப் பட்டாலும், ஒரு நாட்டின் அரசோ, அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்களோ, மாற்று வீதத்தை குறிப்பிட்ட அளவில் வைக்க முயலலாம். ரூபாய் மதிப்பு 44ஐ விடக் கூடவோ, குறையவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்தால் 44 ரூபாய் வீதத்தில் விற்பதை விட அதிகமான டாலர்கள் வாங்குபவர்கள் வந்து 45 ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் தன் கைவசம் இருக்கும் டாலர்களை சந்தையில் விற்பனைக்கு அளித்து விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.
இன்னொரு பக்கம் டாலர்களின் எண்ணிக்கை அதிகரித்து 43ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் டாலர்களை வாங்கி தன் கையிருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கலாம்.
இதுதான் இன்றைக்கு நிலவும் பணமாற்று வீதங்களின் அடிப்படை.
குறிப்பிட்ட அளவு தங்கம் இருந்தால்தான் பணம் வெளியிட முடியும் என்பது உண்மையா?
முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது பணத்தின் அளவை மத்திய வங்கி தீர்மானிக்கும் வகையில்தான் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைக்கு தேவையான அளவு பணம் அச்சடித்து வெளியிடுவது அரசின் பொறுப்பு.
தேவை என்பது என்ன?
நாட்டில் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் கைமாற வேண்டுமானால் பத்தாயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். (இந்தக் கணக்கில் இன்னும் பல காரணிகள் வரும், ஒரு எளிய புரிதலுக்கு இப்படியே வைத்துக் கொள்ளலாம்). பொருட்களின் அளவும் தரமும் உயராமல் திடீரென்று பணப்புழக்கம் இருபதாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டால், இரண்டு மடங்கு பணம் அதே அளவு பொருட்களைத் துரத்த விலைவாசி இரண்டு மடங்காக உயர்வதுதான் மிஞ்சும்.
நாட்டின் உற்பத்தித் திறன் உயர்ந்து பொருட்களின் மதிப்பு உயர்ந்தால் அந்த மதிப்பை பரிமாறிக் கொள்ள வசதியாகக் கூடுதல் பணம் வெளியிடப் பட வேண்டும். இல்லையென்றால் பரிமாற்றங்கள் போதிய பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிப் போய் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு விடும்.
இந்த இரண்டுக்கும் நடுவில் சரியான அளவில் பண அளவை கட்டுப்படுத்துவதுதான் மத்திய வங்கியின் பணி.
ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே நடக்கும் பரிமாற்றங்களில்தான் இந்த வீதம் தீர்மானமாகிறது.
நமக்கு டாலர் எப்போது தேவைப்படும்?
வெளி நாட்டுக்குப் பயணம் போகும் போதோ, வெளி நாடுகளிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும் போதோ டாலர் தேவைப்படும். அதற்காக நம் கையில் இருக்கும் ரூபாய்களைக் கொடுத்து டாலராக மாற்ற முயற்சி செய்வோம்.
சரி, டாலரை எப்போது விற்க முயல்வோம்?
நம்ம மென்பொருளை வெளிநாட்டுக்கு விற்றதால் வாடிக்கையாளர் அனுப்பிய டாலர்களை உள்ளூரில் செலவழிக்க ரூபாயாக மாற்றும் போதும் அதே கடைக்குப் போவோம். அல்லது வெளி நாட்டு உறவினர் பணம் அனுப்பினால் மாற்ற வேண்டியிருக்கும்.
இப்படி ஏற்றுமதி, வெளிநாட்டு பண வரவு, வெளிநாட்டிலிருந்து முதலீடு என்று ஒரு வெளிநாட்டு பணம் நம்ம ஊர் பணமாக மாற வேண்டிய தேவைகள். இறக்குமதி, வெளிநாட்டிற்கு பணம் அனுப்புதல் என்று நம்ம பணம் வெளிநாட்டுப் பணமாக மாற வேண்டிய தேவைகள்.
கடையில் கத்தரிக்காய் விற்பது போல, தேவைதான் இந்த விலையையும் தீர்மானிக்கிறது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகள், அங்கிருந்து வரும் இறக்குமதிகளை விடக் குறைவாக இருந்தால் டாலர் விற்பவர்களை விட வாங்குபவர்கள் குறைவாக இருக்க டாலர் விலை ஏறும். அதாவது 44 ரூபாயக்கு ஒரு டாலர் என்பது 45 ரூபாய் என்று ஏறி விடும். இது போல எல்லா விற்பனை, வாங்குதல்களின் சமநிலையில் ஒரு விலை வீதம் அமைந்து விடுவதுதான் பணமாற்ற வீதம்.
பெரும்பாலும் சந்தையிலேயே இந்த வீதம் தீர்மானிக்கப் பட்டாலும், ஒரு நாட்டின் அரசோ, அல்லது பன்னாட்டு நிதி நிறுவனங்களோ, மாற்று வீதத்தை குறிப்பிட்ட அளவில் வைக்க முயலலாம். ரூபாய் மதிப்பு 44ஐ விடக் கூடவோ, குறையவோ கூடாது என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்தால் 44 ரூபாய் வீதத்தில் விற்பதை விட அதிகமான டாலர்கள் வாங்குபவர்கள் வந்து 45 ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் தன் கைவசம் இருக்கும் டாலர்களை சந்தையில் விற்பனைக்கு அளித்து விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளும்.
இன்னொரு பக்கம் டாலர்களின் எண்ணிக்கை அதிகரித்து 43ஆக மாறப் போகிறது என்று தெரிந்தால் டாலர்களை வாங்கி தன் கையிருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பிக்கலாம்.
இதுதான் இன்றைக்கு நிலவும் பணமாற்று வீதங்களின் அடிப்படை.
குறிப்பிட்ட அளவு தங்கம் இருந்தால்தான் பணம் வெளியிட முடியும் என்பது உண்மையா?
முன்பெல்லாம் அப்படித்தான் இருந்தது. ஆனால் இப்போது பணத்தின் அளவை மத்திய வங்கி தீர்மானிக்கும் வகையில்தான் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைக்கு தேவையான அளவு பணம் அச்சடித்து வெளியிடுவது அரசின் பொறுப்பு.
தேவை என்பது என்ன?
நாட்டில் பத்தாயிரம் கோடி மதிப்புள்ள பொருட்கள் கைமாற வேண்டுமானால் பத்தாயிரம் கோடி பணம் புழக்கத்தில் இருக்க வேண்டும். (இந்தக் கணக்கில் இன்னும் பல காரணிகள் வரும், ஒரு எளிய புரிதலுக்கு இப்படியே வைத்துக் கொள்ளலாம்). பொருட்களின் அளவும் தரமும் உயராமல் திடீரென்று பணப்புழக்கம் இருபதாயிரம் கோடிகளாக உயர்ந்து விட்டால், இரண்டு மடங்கு பணம் அதே அளவு பொருட்களைத் துரத்த விலைவாசி இரண்டு மடங்காக உயர்வதுதான் மிஞ்சும்.
நாட்டின் உற்பத்தித் திறன் உயர்ந்து பொருட்களின் மதிப்பு உயர்ந்தால் அந்த மதிப்பை பரிமாறிக் கொள்ள வசதியாகக் கூடுதல் பணம் வெளியிடப் பட வேண்டும். இல்லையென்றால் பரிமாற்றங்கள் போதிய பணப்புழக்கம் இல்லாமல் முடங்கிப் போய் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டு விடும்.
இந்த இரண்டுக்கும் நடுவில் சரியான அளவில் பண அளவை கட்டுப்படுத்துவதுதான் மத்திய வங்கியின் பணி.
Wednesday, January 3, 2007
பணத்தை உறுதி செய்தல்
வணிகத்தில் பணம் கொடுக்கல்/வாங்கல் எப்போது நடக்க வேண்டும், எந்த அடிப்படையில் நடக்க வேண்டும் என்பது மிக முக்கியமான ஒன்று. விற்பவருக்கும் வாங்குபவருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைய வேண்டும்.
கடையில் போய் பொருள் வாங்கும் போது கூட, இதில் பல வகைகளைப் பார்க்கலாம். உணவு விடுதியில் சாப்பிடும் போது, முதலில் சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டவற்றைப் பொறுத்து பணம் கட்டி விடுகிறோம். மதியச் சாப்பாட்டின் போது நிறைய விடுதிகளில் சாப்பிடும் முன்னரே பணம் கொடுத்து சீட்டு வாங்கிக் கொள்ளும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
எப்படியானாலும், விற்பவர் தனது பொருளை சேவையை அளிப்பதற்கும் வாங்குபவர் பணத்தைக் கொடுப்பதற்கும் உள்ள கால இடைவெளி மிகக் குறைவு. நெருக்கிப் பார்த்தால் விடுதி நிர்வாகம் உள்ளே வரும் ஒவ்வொருவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு சாப்பிட அனுமதிப்பதுதான் சரியான முறை.
யார் யாரோ வருகிறார்கள், சாப்பிட்ட பிறகு காசு இல்லை என்றால் என்ன செய்வது? அதனால் பணத்தை முதலிலேயே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் பாதுகாப்பு. சாப்பிடுபவர்களுக்கும் உறுதி இருக்கிறது. இவ்வளவு பெரிய விடுதி, இவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள், கண் முன்னால் சாப்பாடு தெரிகிறது, அதனால் பணத்தைக் கொடுத்து விட்டால் சாப்பாடு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
அதே விடுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக நூறு சாப்பாடு கொண்டு வரச் சொன்னால், முன்பணம் வாங்காமல் ஆரம்பிக்க மாட்டார்கள். அதில் முடங்கும் பணம் அதிகம், நூறு சாப்பாடு கேட்பவர் அதில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நிகழ்ச்சி நடக்காமல் போய், சாப்பாடு வேண்டாம் என்று திடீரென்று தகவல் சொல்லி விட்டால், செய்து வைத்ததை விடுதியினர் என்ன செய்ய முடியும்?
ஒரு வணிக நிறுவனம், இன்னொரு வணிக நிறுவனத்துக்கு விற்கும் போது இதே போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடைகள் பல காரணிகளைப் பொறுத்து ஒவ்வொரு சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் பல வேறு வங்கிகளும், நிறுவனங்களும் நுழைக்கப்படலாம்.
மற்றபடி ஏற்றி அனுப்பிய போக்குவரத்து சீட்டைக் காட்டினால்தான் பொருள் கிடைக்கும் என்றக் கட்டுப்பாட்டின் படி, பணம் கொடுத்து போக்குவரத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற நேரடியான முறையும் பழக்கத்தில் உண்டு.
எந்த வணிகத்திலும், வெளியார் உத்தரவாதத்தை விட, வாங்குபவர்-விற்பவர்களுக்கிடையேயான நம்பிக்கை, உறவுதான் முக்கியமானது.
மென்பொருள் செய்து கொடுக்கும் நமது துறையில் எல்லாமே நம்பிக்கைதான். மென்பொருள் நிறுவனத்தின் முந்தைய நடத்தை, தற்போதைய அளவு என்று வாடிக்கையாளருக்கு நம்பிக்கை ஊட்டிய பிறகு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வாங்கிய பிறகுதான் வேலையே ஆரம்பிக்கிறோம். இதுவே பழக்கமாக இருக்கிறது.
இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட சிறு நிறுவனங்களும் பல உண்டு. ஆரம்பத்தில் பல வாடிக்கையாளர்கள் அத்தகைய அனுபவத்தைச் சுட்டிக் காட்டி, மென்பொருளை நிறுவி, செயல்படுத்திக் காட்டினால்தான் பணம் தருவேன் என்று சொன்னது கூட உண்டு. அப்போதுதான் ஆரம்பித்திருந்த நிறுவனத்தில் வேறு வழியில்லாமல் வாய்ப்புக் கிடைக்கிறதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் இறங்கி மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
முதலிலேயே பணத்தைப் போடா விட்டால் வாடிக்கையாளர் நிறுவனத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஈடுபாடு வருவது நடக்காது. பணம் கொடுக்க முன்வருவது, நமது மென்பொருளைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. அதனால் மொத்த விலையின் 10%த்தையாவது முன்பணமாக வாங்காமல் வேலை ஆரம்பிப்பதே இல்லை என்று செயல்பட வேண்டும்.
கடையில் போய் பொருள் வாங்கும் போது கூட, இதில் பல வகைகளைப் பார்க்கலாம். உணவு விடுதியில் சாப்பிடும் போது, முதலில் சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டவற்றைப் பொறுத்து பணம் கட்டி விடுகிறோம். மதியச் சாப்பாட்டின் போது நிறைய விடுதிகளில் சாப்பிடும் முன்னரே பணம் கொடுத்து சீட்டு வாங்கிக் கொள்ளும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
எப்படியானாலும், விற்பவர் தனது பொருளை சேவையை அளிப்பதற்கும் வாங்குபவர் பணத்தைக் கொடுப்பதற்கும் உள்ள கால இடைவெளி மிகக் குறைவு. நெருக்கிப் பார்த்தால் விடுதி நிர்வாகம் உள்ளே வரும் ஒவ்வொருவரிடம் முன் பணம் வாங்கிக் கொண்டு சாப்பிட அனுமதிப்பதுதான் சரியான முறை.
யார் யாரோ வருகிறார்கள், சாப்பிட்ட பிறகு காசு இல்லை என்றால் என்ன செய்வது? அதனால் பணத்தை முதலிலேயே வாங்கிக் கொள்ள வேண்டியதுதான் பாதுகாப்பு. சாப்பிடுபவர்களுக்கும் உறுதி இருக்கிறது. இவ்வளவு பெரிய விடுதி, இவ்வளவு பேர் வேலை பார்க்கிறார்கள், கண் முன்னால் சாப்பாடு தெரிகிறது, அதனால் பணத்தைக் கொடுத்து விட்டால் சாப்பாடு கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
அதே விடுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக நூறு சாப்பாடு கொண்டு வரச் சொன்னால், முன்பணம் வாங்காமல் ஆரம்பிக்க மாட்டார்கள். அதில் முடங்கும் பணம் அதிகம், நூறு சாப்பாடு கேட்பவர் அதில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை நிகழ்ச்சி நடக்காமல் போய், சாப்பாடு வேண்டாம் என்று திடீரென்று தகவல் சொல்லி விட்டால், செய்து வைத்ததை விடுதியினர் என்ன செய்ய முடியும்?
ஒரு வணிக நிறுவனம், இன்னொரு வணிக நிறுவனத்துக்கு விற்கும் போது இதே போன்ற கேள்விகள் எழுகின்றன. அதற்கு விடைகள் பல காரணிகளைப் பொறுத்து ஒவ்வொரு சூழலைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.
- வாங்குபவர் முழுத்தொகையையும் முன் பணமாகக் கொடுத்து விட்டுக் காத்திருப்பது.
பொருள் விற்கும் நிறுவனம் மிகப் பெரியதாகவும் நம்பகத்துக்குரியதாகவும் இருந்து, விற்கும் பொருளின் சந்தைத் தேவை அதிகமாக இருந்தால், அவர்கள் விருப்பப்படி சட்டம் போடலாம். ஒரு மாதம் முன்பே பணத்தைக் கட்டினால்தான் சரக்கு அனுப்புவோம், என்று சொல்லி விட்டால் வாங்குபவர் பணத்தைக் கட்டி வாங்கித்தான் ஆக வேண்டும்.
இதில் முன்கூட்டியே பணத்தைக் கட்டி விட்ட வாங்குபவர், பொருளின் தரத்தில் குறை இருந்தாலோ, சரியான நேரத்தில் பொருள் வந்து சேராவிட்டாலோ, விற்பனை நிறுவனத்தை தொங்கிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வாங்குபவர் கையில் எந்தப் பிடியும் இல்லை. - விற்பவர், பொருள்/சேவையை வழங்கி விட்டு, அது வாடிக்கையாளரை நிறைவு செய்து விட்ட பிறகு பணத்தை பெற்றுக் கொள்வது.
இது இன்னொரு எல்லை. இங்கு வாங்குபவருக்கு முழு ஆதாயம். 'பொருளைக் கொண்டு வா, எல்லாம் சரியாக இருந்தால் பணத்தைப் பெற்றுக் கொள், பணம் உடனேயே கிடைக்கலாம், அல்லது சில நாட்கள் கழிந்து கிடைக்கலாம்'.
பொருளை அனுப்பி விட்டு வாங்கியவர் பின்னால் அலைய வேண்டியதுதான். பெரும்பாலான கொடுக்கல் வாங்கல் இந்த வகையில்தான் நடக்கின்றன. வாங்கும் நிறுவனத்தின் வலிமை, பொருளின் சந்தையில் கடும் போட்டி நிலவுதல் என்று விற்பவருக்கு வேறு வழி இல்லாமல் போய் விடுகிறது. - வங்கி உத்தரவாதங்கள்
உள்நாட்டு வணிகத்தில் மேலே சொன்ன இரண்டு முறைகளில் ஏதாவது தகராறு வந்தாலும் தீர்த்துக் கொள்ள, பேருந்தில் சீட்டு வாங்கிப் போய் இறங்கி விடலாம். வெளிநாடு, அல்லது அதிக தூரத்தில் இருக்கும் நிறுவனங்கள் வணிகம் செய்யும் போது, இது போல் ஒரே நிறுவனம் எல்லா சுமையையும் ஏற்றுக் கொள்வது நடக்காது. இதற்காக பெயர் பெற்ற வங்கி ஒன்றை இடையில் வைத்துக் கொள்ளலாம்.
பொருள் ஏற்றுமதி,இறக்குமதியில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது லெட்டர் ஆஃப் கிரெடிட் எனப்படும் வங்கியின் நம்பிக்கைக் கடிதம். என்ன விலை, என்ன தரம் என்று விற்பவரும் வாங்குபவரும் முடிவு செய்து கொண்ட பிறகு ஒரு விற்பனை ஒப்பந்தத்தை போட்டுக் கொள்வார்கள். அந்த ஒப்பந்தப்படி பொருளை அனுப்பி விட்டால் பணம் கிடைத்து விடும் என்று உறுதியை விற்பனையாளருக்கு அளிக்க, வாங்குபவர் தனது வங்கியை அணுகி விற்பனையாளருக்கு ஒரு கடிதம் அனுப்பக் கேட்டுக் கொள்வார்.
அந்தக் கடிதத்தில், 'இன்ன ஆவணங்களை எங்கள் வங்கியில் சமர்ப்பித்தால் உங்களது ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள விவரப்படி பணம் கொடுப்பதாக உறுதி கூறுகிறோம்' என்று வங்கி சொல்லியிருக்கும். இந்த ஆவணங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்.
பொதுவாக,- பொருளை அனுப்பி விட்டதை உறுதி செய்யும் போக்குவரத்து சீட்டு,
- பொருளின தரத்தை உறுதி செய்யும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ்,
- பொருளின் எண்ணிக்கை, விலை மற்றும் மதிப்பைக் குறிப்பிடும் விற்பனை சீட்டு,
- பொருளின் எடை, பொதிகளின் எண்ணிக்கை விவரங்களைத் தரும் பொதிச் சீட்டு போன்றவற்றைக் கேட்பார்கள்.
உற்பத்தியை முடித்து, தர நிர்ணயம் செய்து, சரியாக பொதிந்து கப்பலில் ஏற்றிய சான்றைப் பெற்று வங்கிக்கு அனுப்பினால் பணம் கிடைத்து விடும். வாங்குபவர் அந்தப் பொருளை எடுத்துக்கொள்ளாமலோ, எடுத்துக் கொண்ட பிறகு பணம் கொடுக்காமலோ இருக்க வழி இல்லை. இந்த உறுதி விற்பவருக்குக் கிடைத்து விடுகிறது.
இன்ன பொருளை, இன்ன தரத்தில், இன்ன வகையில் பொதிந்து அனுப்பி விட்டார்கள் என்று மூன்றாம் தரப்புகளின் சான்று மூலம் உறுதி கிடைத்து விட்ட பிறகுதான் பணம் அனுப்புவதால் வாங்குபவருக்கும் உறுதியின்மை குறைவு.
- பொருளை அனுப்பி விட்டதை உறுதி செய்யும் போக்குவரத்து சீட்டு,
இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தில் பல வேறு வங்கிகளும், நிறுவனங்களும் நுழைக்கப்படலாம்.
மற்றபடி ஏற்றி அனுப்பிய போக்குவரத்து சீட்டைக் காட்டினால்தான் பொருள் கிடைக்கும் என்றக் கட்டுப்பாட்டின் படி, பணம் கொடுத்து போக்குவரத்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளுதல் என்ற நேரடியான முறையும் பழக்கத்தில் உண்டு.
எந்த வணிகத்திலும், வெளியார் உத்தரவாதத்தை விட, வாங்குபவர்-விற்பவர்களுக்கிடையேயான நம்பிக்கை, உறவுதான் முக்கியமானது.
மென்பொருள் செய்து கொடுக்கும் நமது துறையில் எல்லாமே நம்பிக்கைதான். மென்பொருள் நிறுவனத்தின் முந்தைய நடத்தை, தற்போதைய அளவு என்று வாடிக்கையாளருக்கு நம்பிக்கை ஊட்டிய பிறகு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக வாங்கிய பிறகுதான் வேலையே ஆரம்பிக்கிறோம். இதுவே பழக்கமாக இருக்கிறது.
இந்தப் பழக்கத்தைப் பயன்படுத்தி பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விட்ட சிறு நிறுவனங்களும் பல உண்டு. ஆரம்பத்தில் பல வாடிக்கையாளர்கள் அத்தகைய அனுபவத்தைச் சுட்டிக் காட்டி, மென்பொருளை நிறுவி, செயல்படுத்திக் காட்டினால்தான் பணம் தருவேன் என்று சொன்னது கூட உண்டு. அப்போதுதான் ஆரம்பித்திருந்த நிறுவனத்தில் வேறு வழியில்லாமல் வாய்ப்புக் கிடைக்கிறதே என்று பல்லைக் கடித்துக் கொண்டு பணியில் இறங்கி மாட்டிக் கொண்டிருக்கிறோம்.
முதலிலேயே பணத்தைப் போடா விட்டால் வாடிக்கையாளர் நிறுவனத்துக்கும் நிர்வாகத்துக்கும் ஈடுபாடு வருவது நடக்காது. பணம் கொடுக்க முன்வருவது, நமது மென்பொருளைப் பயன்படுத்துவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. அதனால் மொத்த விலையின் 10%த்தையாவது முன்பணமாக வாங்காமல் வேலை ஆரம்பிப்பதே இல்லை என்று செயல்பட வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)