Wednesday, March 12, 2008

தகவல் தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள்

வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் நாளிதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில் அமெரிக்காவைச் சேர்ந்து இரண்டு மேலாண்மை வல்லுனர்கள், தகவல் தொழில் நுட்பம் இன்றைய நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முறைகளைப் பற்றி அலசியிருக்கிறார்கள்.

முழுக் கட்டுரையை இங்கு படிக்கலாம்.

அதைப் பற்றிய ஸ்லாஷ்டாட் விவாதத்தை இங்கு படிக்கலாம்.

சில குறிப்புகள்:

1. தகவல் தொழில் நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் நிறுனத்தின் ஆதாய வீதத்தை அதிகரிப்பதோடு தகவல் தொழில் நுட்பத்தில் செய்யும் முதலீட்டில் நல்ல வருமானத்தையும் ஈட்டலாம்.

2. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தகவல் தொழில் நுட்ப பொருளாதாரத்தில் வெற்றியடைவதற்கு , நிறுவனத்தின் அடிப்படைத் திட்டமிடலின் போது தகவல் தொழில் நுட்பத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

3. நிறுவனத்தின் தொழிலை நன்கு புரிந்த தொழில் முறை மேலாளரை தகவல் தொழில் நுட்பப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் அமர்த்த வேண்டும். நிறுவனத்தின் ஒவ்வொரு பிரிவிலும் தகவல் தொழில் நுட்பத்தை ஒன்றுபடுத்த அவர் தலைமை நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

4. தொழில் நுட்ப முன்னேற்றங்கள், சந்தையிலும் பொருளாதாரத்திலும் மாற்றங்களின் வேகத்தை அதிகரித்துள்ளன. இதனால் ஏற்படும் வாய்ப்புகளையும் பாதகங்களையும் உடனுக்குடன் அடையாளம் கண்டு, சரியாக புரிந்து, எதிர் வினை ஆற்றுவது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் இன்றியமையாததாகிறது.

5. நிறுவனத்தின் பல்வேறு மட்டங்களில் இருக்கும் மேலாளர்கள், தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் செய்யக் கூடிய மேம்பட்ட தகவல் மேலாண்மை, தொழில் முறை அறிவு மேம்படல், தகவல் பாதுகாப்பு, மாற்றங்களை கையாளுதல், செய்முறைகளை ஒருங்கிணைத்தல் போன்றவை நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றியமையாதவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

6. தகவல் தொழில் நுட்பத்துக்காகத் திட்டமிடும் செலவினங்களும் முதலீடுகளும் மற்ற செலவினங்களைப் போலவே நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

No comments: